Posts

Showing posts with the label கட்டுரைகள்

ஒன்பது மற்றும் பதினொன்றாம்(+1) வகுப்புகள் தேவையா?

பத்து மற்றும் +2 வகுப்புகள் மாணவர்களுக்கு முக்கியமானவை. அடுத்து என்ன படிக்கலாம் என இந்தத் தேர்வுகளில் வரும் மதிப்பெண்களை வைத்தே முடிவு செய்ய முடியும். பொதுத் தேர்வுகளாக இருக்கும் இந்த இரண்டு வகுப்புகளையும், மாணவர்கள் முறையே ஒன்பது மற்றும் +1 முடிந்து ஒரு வருடம் மட்டுமே(!) படித்து தேர்வு எழுத வேண்டும் என்று இருக்கிறது. உண்மையில் ஒரு வருடம் மட்டுமா மாணவர்கள் படிக்கிறார்கள்? தனியார் பள்ளிகளில், பத்தாம் வகுப்புப் பாடத்தை ஒன்பதாம் வகுப்பிலும், +2 பாடத்தை +1 வகுப்பிலும் எடுக்கிறார்கள். அப்படி என்றால், இந்த மாணவர்கள் இரண்டு வருடம் படிக்கிறார்கள். முக்கியமான நாட்கள் தவிர, வருடத்தின் அனைத்து நாட்களும் பள்ளி உண்டு. காலை 8 மணிக்கு முன்னரே ஆரம்பிக்கும் வகுப்புகள், மாலை வேளைகளில் தான் முடிகின்றன. சில மாணவர்கள், வீடு திரும்பிப் பின்னர் தனிப்பயிற்சி வகுப்புகளுக்கும் செல்கிறார்கள். காலாண்டு, அரையாண்டு விடுமுறைகள் கிடையாது. விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். அதிகாலை துவங்கி, இரவு பத்து மணி வரைக்கும் படிக்கிறார்கள். திரும்ப, திரும்ப படிப்பதால்.. ப...

குடி என்பது..

காலை மணி எட்டு. பெட்ரோல் பங்கில், வண்டிக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு ஒரு திருப்பத்தில் திரும்பினேன். ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க நபர், லிப்ட் கேட்பதற்காக கை காட்டினார். 'EB ஆபீஸ் வரைக்கும் போகணும்'  என்றார். 'சரி, ஏறுங்க..' என்றேன். 'நீங்க அங்கேயே போறீங்க?' என்றார் நான் கடுப்பில், 'வர்றீங்களா... இல்லையா.. ' என்றேன். 'அய்யா சாமி.. வர்ரேனுங்க' என்று பின்னால் ஏறிக் கொண்டார். அப்பொழுதுதான் நான் கவனித்தேன், அவர் குடித்திருப்பதை. EB ஆபீஸ் வரும்வரைக்கும் நான் எதுவும் பேசவில்லை. அவரும் வாயைத் திறக்கவில்லை. இடம் வந்ததும், 'இங்க எறங்கிக்குரீங்களா' என்றேன்.  இறங்கியவர், கிளம்ப எத்தனித்த என்னிடம், என்ன நினைத்தாரோ 'மன்னிச்சுக்குங்க.. வீட்ல பிரச்சினை.. அதான் இப்படி' என்று கையெடுத்துக் கும்பிட்டார். 'பரவாயில்லை.. விடுங்க' என்று கூறியவாறு வண்டியை முறுக்கினேன் நான். வண்டியின் கண்ணாடியில் பார்த்தேன். தூரத்தில் அவர், கும்பிட்ட கையை கீழே போட்டுவிட்டு சாலையை தாண்டிக் கொண்டிருந்தார். குடிப்பது என்பது எப்படி எல்லாம் மனிதனை நடக்க வைக்கிறத...

கதவின்றி அமையாது

Image
மரங்களின் தந்தை திரு. அய்யாசாமி அவர்களைச் சந்தித்துவிட்டு திரும்பும்பொழுது, அவர் வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டில் சாத்தி இருந்த கதவைப் பார்க்க நேர்ந்தது. அந்தக் கதவை என் செல்லில் படம் பிடித்துக் கொண்டேன். அந்த இரவு அந்தக் கதவைப் பற்றிய நினைவுகள் வந்த வண்ணம் இருந்தன. எங்கள் கிராமத்து வீட்டிலும் அதே போல் ஒரு கதவு வீட்டுக்குள் இருக்கிறது. மூன்று படிகள் வைத்து, சின்ன சின்ன பூக்கள் போட்ட கதவாக இருக்கும். ஒவ்வொரு படியிலும் ஏறி கதவைத் தள்ளி விட்டு விளையாடுவோம். கதவுக்கு மேலே ஒரு அட்டாரி இருந்தது. அட்டாரியில் எதாவது எடுக்க வேண்டும் என்றால் கதவு மேல் ஏறித்தான் எடுக்க வேண்டும். சாமி படங்கள், நடிகர்கள் படங்கள், இயற்கைப் படங்கள் என கதவுகளில் ஒட்டிக் கொண்டே இருப்பேன். புதிய படங்கள் கிடைத்தால், பழைய படங்களை கிழித்து விட்டு புதியதை ஒட்டி விடுவேன். கி.ரா. வின் 'கதவு' சிறுகதையில் ஒரு கதவுக்காக அழும் சிறுவர்களைப் பற்றி சொல்லியிருப்பார். தீர்வை கட்டாமல் இருந்ததற்காக கதவைத் தலையாரி பெயர்த்து கொண்டு செல்லுகின்றான். கொஞ்ச நாள்கள் கழித்து, அந்த கதவு வைத்திருந்த இடத்தை கண்டுபிடிக்கிறார்கள்....

குடிமகன்களை குடிக்கும் மகன்களாக்கியது...

டாஸ்மாக் - எல்லோருக்கும் தெரிந்த இடம். கிராமம், நகரம் என்ற வேறுபாடில்லாமல் எங்கும் இருக்கிறது. குறிப்பிட்ட தூரத்துக்குள் அரசுப் பள்ளிகள் இருக்கிறதோ இல்லையோ, டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. ஒரு பொருள் எளிதாக எங்கும் கிடைத்தால் அதை மக்கள் வாங்கவே விரும்புவார்கள். அந்தப் பொருள் ஏதோ டீ போலவோ, பிஸ்கட் போலவோ, போதை தராமல் இருந்தால் பரவாயில்லை. ஆனால் போதையை தரும் இந்தக் கடைகளை என்ன செய்யலாம்?. பிறந்த நாளா -  லோன் கிடைக்கவில்லையா - லோன் கிடைத்து விட்டதா - மேனஜேர் திட்டினாரா - மேனஜேர் பாராட்டினாரா - சம்பளம் உயர்வா - குழந்தை பிறந்ததா - காதலி போனை எடுக்கவில்லையா - மனைவி கூட சண்டையா - கல்யாணமா - நண்பர்கள் சந்திப்பா - உறவினர்கள் யாராவது இறந்து விட்டார்களா - இப்படி எது நடந்தாலும், எந்தப் பிரச்சினை என்றாலும் நம் மக்கள் சொல்லும் வார்த்தை "வா.. குடிக்கலாம்" என்பதே.  பத்தடி தூரத்தில் கிடைக்கும் பொழுது எல்லோரும் விரும்புவது டாஸ்மாக்கையே. எங்கள் சிறு வயதுகளில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த கடை இன்று ஊருக்கு நட்ட நடுவில். சுற்றிலும் தள்ளாடும் மக்கள். அலைமோதும் கூட்டம். சனி, ஞாயிற...

பேரும் பெயரும்...

Image
பெயர்க்காரணம் பற்றிய தொடரில் என்னையும் எழுத அழைத்த அண்ணன் ஆர் வி எஸ் அவர்களுக்கு எனது நன்றிகள். ஒரு பையனும், ஒரு பெண்ணும் ஏற்கனவே இருக்க மூன்றாவதாக ஒரு பெண் பிறக்க, அப்பாவும் அம்மாவும் இதோடு போதும் என்று குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்கு பாரத்தை நிரப்பிக் கொண்டிருக்கும் பொழுது, 'என்ன பண்றீங்க, இன்னொரு குழந்தை பிறக்கட்டும்.. அப்புறம் பார்த்துக்கலாம்...' என அங்கே வீரம் பொங்க பேசியிருக்கிறார் எனது அம்மத்தா (அம்மாவின் அம்மா). டாக்டர் எவ்வளவோ சொல்லி பார்க்க, மறுத்து விட்டது அம்மத்தா. பின்னர் சில வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை தான் நான். நான் பிறக்கப் போவதை முன்னாடியே யூகித்து வைத்திருந்த மாதிரி, இப்போ பார்த்தாலும் அதைச் சொல்லிக் காட்டும் அம்மத்தா. அன்னைக்கு அம்மத்தா வற்புறுத்தாமல் இருந்திருந்தால், இந்த ப்ளாக், கம்மென்ட் எல்லாம் இருந்திருக்காது, அப்பாடா தப்பிசிருப்போம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் தானே? :) என்னுடைய நட்சத்திரப் படி 'இ' வரிசையில் வரும் பெயர் தான் வைக்க வேண்டும் என முடிவாகியிருக்கிறது. வீட்டில் எல்லோருக்குமே அழகான தமிழ் பெயர்கள், கதிர்வேல், குணவதி, தமிழ்செல...

நிறம், அழகு மற்றும் சிவப்பழகு கிரீம்கள்

Image
பெண் தேடும் படலத்தில், நல்ல குடும்பம், படிப்பு என்று தாண்டி 'நல்ல சிவந்த நிறமுள்ள பெண் தேவை' , குழந்தை பிறந்தவுடன் 'குழந்தை என்ன கலர்?'. குழந்தையின் எடை, ஆரோக்கியம் பற்றி ஒரு கேள்வியுமில்லை. கல்யாணத்துக்குப் போனால், 'பெண் / மாப்பிள்ளை மேட்ச் சரியில்லை. எங்க இருந்து தான் மாப்பிள்ளை / பொண்ணு பிடிச்சாங்களோ' என்று பேசிக் கொண்டிருப்பார்கள். சரி விட்டுத் தள்ளுங்கள், சினிமாவில் கூட அழகான நல்ல கலரான (இல்லை மேக்-அப் போட்டுக்கொண்டு) பெண்களே காணக் கிடைக்கிறார்கள். கிராமப் படம் என்றால் இயக்குனரைப் பொருத்து கலர் வேண்டுமா, வேண்டாமா என்று தீர்மானிக்கப் படுகிறது. அப்படி என்றால் அழகில்லாதவர்கள் எல்லாம் என்ன செய்ய வேண்டும்?. அதற்கும் வழி உண்டாம். தொலைக்காட்சிப் பெட்டிகளில், தொடர்களுக்கு மத்தியில், சிவப்பழகு க்ரீம்களின் விளம்பரங்கள் இதையே வலியுறுத்துகின்றன. தனது தோலின் நிறம் பற்றி கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் பெண்ணுக்கு இதெல்லாம் வரப் பிரசாதம் போல் சொல்கிறார்கள். அது எப்படி ஒரே வாரத்தில், ஸ்லைட் மாற்றுவது போல மின்னுகிறார்கள் எனத் தெரிவதில்லை. அதன் பின்னர் திரும்பிப் பார்க்காத ...

நாடும், மக்களும் என்ன செய்வர்..

Image
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாட்டைப் பற்றி சில எண்ணங்கள் . இவர்கள் இப்படித்தான் , அவர்கள் அப்படித்தான் என நாமாகவே ஒரு முடிவுக்கு வருகிறோம் . அண்டை வீட்டுக்காரர்கள் முதல் அடுத்த நாட்டுக்காரன் வரை நமக்குள்ளாகவே ஒரு கற்பிதம் . இரண்டு வருடங்களுக்கு முன்னர் தன்னந் தனியாக ஒரு வெளிநாட்டில் போய் நான் இறங்கியபொழுது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது . இரண்டு பேருடன் நான் ஒரு வீட்டைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் . கூட இருந்த ஒரு பிரெஞ்ச் நண்பனும் , ஜெர்மன் தோழியும் சகலமும் சொல்லிக் கொடுத்தார்கள் . அடுப்பு பற்ற வைப்பது முதல் வீட்டைப் பூட்டுவது வரை ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுத்தார்கள் . சரியாக சொல்லப் போனால் மொழியோ , நாடோ அங்கே பிரச்சனையாக இல்லை . சக மனிதர்கள் மேல் உள்ள அக்கறை தான் , எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருக்கிறது . ஒவ்வொரு நாட்டுக்கும் வித்தியாசமான பண்பாடுகள் . இங்கே இருப்பதை அங்கேயும் , அங்கே இருப்பதை இங்கேயும் தேடினால் எப்படிக் கிடைக்கும் ?. நாடுகளின் அரசியல் தலைவர்கள் வேண்டுமானால் ஒரு சில நோக்கங்களோடு இருக்க...

பாதி உடல் தங்கமாக அலையும் நரி.. !

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் உப பாண்டவம் நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார். அந்தக் கதை நாம் ஏற்கனவே கேட்ட கதைதான். அந்தக் கதை இதோ மீண்டும். கொடும் பஞ்சம் சூழ்ந்த முன்னொரு காலத்தில், ஒருவன் தன் மனைவி மகன் மருமகளோடு ஒரு ஊரில் வசித்து வந்தான். பஞ்சத்தால் எதுவும் கிடைக்காத ஒரு நாளன்று வெளியே சென்ற அவன் கொஞ்சம் சோள தானியத்தோடு தன் வீட்டுக்கு வருகிறான். அவன் மனைவி அதை அரைத்து மாவாக்கி கஞ்சி சமைக்கிறாள். சமைத்த பின்னர் அதை அருந்தும்பொழுது ஒரு துறவி பசியால் அவன் வீட்டுக்கு வருகிறார். துறவியின் பசியை அறிந்த அவன் தனக்கான உணவின் பங்கை அவருக்கு கொடுக்க, அதைத் துறவி அருந்துகிறார். மீண்டும் அவர் பசியடங்காமல் இருக்க, மனைவி மகன் மற்றும் மருமகள் ஆகியோரும் தங்கள் பங்கை அந்த துறவிக்கு அளிக்க பசியடங்கிய அவர் அந்த இடத்தை விட்டுப் போகிறார். இவர்களின் செயலால் மனம் மகிழ்ந்த தேவதை ஒன்று இனி அவர்கள் எப்போதும் செல்வத்தில் திளைப்பார்கள் என வரம் தந்து விட்டுச் செல்கிறது. அப்பொழுது அங்கே வந்த நரி ஒன்று, சோளம் அரைத்த இடத்தில் படுத்துப் புரள அதன் உடல் பாதி தங்கமாக மாறிவிடுகிறது. எ...

கஞ்சி குடிப்பதற்கு இலார் - வீணாகும் உணவு தானியங்கள்

Image
இரவு மீதமான இரண்டு இட்லிகளை, காலையில் வந்து பசிக்கு கேட்கும் பிச்சைக்காரனுக்குப் போடாமல், சாக்கடையிலோ அல்லது குப்பையிலோ கொண்டுபோய்க் கொட்டும் செயலுக்கு நிகரானது வீணாகும் உணவு தானியங்களை வறுமையால் வாடுவோருக்கு அளிக்காமல் வீணாக்குவது. சரி அந்த தானியங்களை என்ன அவர்கள் காசிலா வாங்கினார்கள். ஒரு லிட்டர் பெட்ரோல் அடித்தால் வரி, தலை வலிக்கு மாத்திரை வாங்கினால் வரி, சோப்பு வாங்கினால் வரி என எல்லாவற்றிலும் வரியை வாங்குகிறார்கள். அப்புறம் அதுவும் பத்தவில்லை என்று, எங்கள் மக்களைக் காண்பித்து 'எங்களுக்கு கடன் கொடுங்கள்' என்று உலக வங்கிகளிடமும் வாங்கி விடுகிறார்கள். ஆக இந்த பணத்தை வைத்து அவர்கள் எங்கள் விவாசாயிகளிடம் தானியங்களை பெரிய கொள்முதல் பண்ணி வாங்கி விடுகிறார்கள். (இதில் எத்தனை பேர் ஊழல் செய்கிறார்களோ). வாங்கிய தானியங்களை வைத்து பாதுகாக்க போதுமான கிடங்குகள் இல்லை என்று சொல்லுகிறார்கள். ஒரு அமைச்சர் வருகிறார் என்றால் ஒரு வாரத்தில் இடம் பிடித்து, பெரும் மேடை அமைத்து, புதிய சாலை போட்டு, தோரணம் கட்டி அவரை வரவேற்க முடிகிற இவர்களால் ஒரு கிடங்கை அமைக்க முடியவில்லை என்பது எப்படி இருக்கிறது?...

புத்தகம் - எனக்குப் பிடிக்கும்

Image
இலக்கியத்தை படிப்பவர்கள் பொழுது போகாமல் இருப்பவர்கள்தான் என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது. சின்ன வயதில் காமிக்ஸ், சிறுவர் மலர், அம்புலி மாமா என படித்து வளர்ந்த நான் கொஞ்ச நாட்கள் கழித்து, ராணி, தேவி, ராஜேஷ் குமார் க்ரைம் நாவல் என்று தொடர்ந்தது. இன்னும் கொஞ்சம் வளர்ந்து, பாலகுமாரன், ஆனந்த விகடனில் வரும் சிறுகதைகள் என்றாகி, இன்றும் இலக்கியங்களைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன். இதற்கு காரணம் என் அப்பாதான். பள்ளிக்கு செல்லாமலே படித்து, பக்திப் பாடல்கள், ஜோசியம் என எல்லாவற்றிலும் தேர்ந்தவராக இருந்தார். சொல்லப் போனால் என் ப்ரோக்ரேஸ் கார்டு-ல் ஆங்கிலத்தில் கையெழுத்து போடுவார். என் நண்பர்கள், உங்க அப்பா என்ன படித்து இருக்கிறார் என்று கேட்பார்கள் கையெழுத்தைப் பார்த்து. பள்ளிக் கூடமே போனதில்லை என்று சொன்னால், ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். எங்கள் அம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. புத்தகங்களைப் படிக்க கற்றுக் கொடுத்ததே அப்பாதான். வீடு பூராவும் ராணி, தேவி, குமுதம் என வார மலர்கள் நிறைந்து கிடக்கும். சாப்பிடும் பொழுது புத்தகம் படித்தால் கூட திட்டாத ஒரே வீடு எங்கள் வீடாகத்தான் இருக்கும். எங்கள் ஊர் ...

காம்பஸ் ஊசியும்.. தோஷ நிவர்த்தியும்...

குழந்தையை கிழக்கு முகமாக உட்கார வைத்து, சாம்பிராணி தூபம் காட்டி, பின்வரும் மந்திரத்தை 108 முறை ஜெபித்து, பூசைக்கு வைத்த பொருட்கள் அனைத்தையும் கிணற்றில் போட வேண்டும். 'ஓம் ஐயும் கிலியும் சவ்வும், சகல தோஷம் நிவர்த்தி...' இது, சகல தோஷ நிவர்த்தி என்ற புத்தகத்தில் காணப்படும் வரிகள். எங்கள் கிராமத்தில் இதை ஏட்டுப் புத்தகம் என்பார்கள். அந்தப் புத்தகத்தின் விலை இரண்டு ரூபாயாக இருந்தது. மீறிப் போனால் ஒரு இருபது பக்கமிருக்கும். குழந்தை பிறந்த 1-நாள் 1-மாதம் 1-வருடம், 2-நாள் 2-மாதம் 2-வருடம் என பன்னிரண்டு வருடங்களுக்கு, அந்த வருடங்களுக்குரிய தேவதைகளுடன், சக்கரங்களும் மூல மந்திரங்களும் இருக்கும். எங்கள் வீட்டில் குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை என்றால் தலையணைக்கு அடியில் வைத்து விடுவார்கள். கைக் குழந்தையாக இருந்தால் தொட்டிலில் கட்டி விடுவார்கள். இந்த மந்திரங்களை ஒரு பனையோலையில் எழுதி, நூல் போட்டு இறுக்கி கட்டி, மஞ்சள் பூசி கையிலும் கட்டிருவாங்க. ஊரில் ரெண்டு, மூன்று பேர் இந்த ஏடுகளை எழுதிக் கொடுப்பார்கள் மற்றவர்களுக்கு. அதற்கு காணிக்கையும் வாங்கிக் கொள்வார்கள். எங்கப்பாவும் ஏடு எழுதிக் கொடு...

கதவின்றி அமையாது...

Image
மரங்களின் தந்தை திரு . அய்யாசாமி அவர்களைச் சந்தித்துவிட்டு திரும்பும்பொழுது, அவர் வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டில் சாத்தி இருந்த கதவைப் பார்க்க நேர்ந்தது. அந்தக் கதவை என் செல்லில் படம் பிடித்துக் கொண்டேன். அந்த இரவு அந்தக் கதவைப் பற்றிய நினைவுகள் வந்த வண்ணம் இருந்தன. எங்கள் கிராமத்து வீட்டிலும் அதே போல் ஒரு கதவு வீட்டுக்குள் இருக்கிறது. மூன்று படிகள் வைத்து, சின்ன சின்ன பூக்கள் போட்ட கதவாக இருக்கும். ஒவ்வொரு படியிலும் ஏறி கதவைத் தள்ளி விட்டு விளையாடுவோம். கதவுக்கு மேலே ஒரு அட்டாரி இருந்தது. அட்டாரியில் எதாவது எடுக்க வேண்டும் என்றால் கதவு மேல் ஏறித்தான் எடுக்க வேண்டும். சாமி படங்கள், நடிகர்கள் படங்கள், இயற்கைப் படங்கள் என கதவுகளில் ஒட்டிக் கொண்டே இருப்பேன். புதிய படங்கள் கிடைத்தால், பழைய படங்களை கிழித்து விட்டு புதியதை ஒட்டி விடுவேன். கி.ரா. வின் 'கதவு' சிறுகதையில் ஒரு கதவுக்காக அழும் சிறுவர்களைப் பற்றி சொல்லியிருப்பார். தீர்வை கட்டாமல் இருந்ததற்காக கதவைத் தலையாரி பெயர்த்து கொண்டு செல்லுகின்றான். கொஞ்ச நாள்கள் கழித்து, அந்த கதவு வைத்திருந்த இடத்தை கண்டுபிடிக்கிறார்கள். கதவு ...

மரங்களின் தந்தை - திரு.அய்யாசாமி

Image
புத்தகங்களிலும், வலைத் தளங்களிலும் சுமார் மூவாயிரம் மரங்களை வளர்த்த பெரியவர் திரு.அய்யாசாமி அவர்களைப் பற்றி படிக்கும் பொழுதெல்லாம், இவர் நம் ஊருக்கு பக்கத்தில் இருக்கிறார், போய்ப் பார்க்கவேண்டும் எனத் தோன்றும். அந்த எண்ணம் கடந்த சனிக் கிழமை அன்று நிறைவேறியது. T.N. பாளையத்தில் நண்பனின் பெண் குழந்தையைப் பார்க்க நானும், நண்பன் கமலக்கண்ணனும் சென்றோம். கிளம்பும் போதே, கமலக் கண்ணன், 'அய்யாசாமி அய்யாவையும் பார்த்துட்டு வந்திரலாம், பக்கத்துலதான் அவர் வீடும் இருக்கு' என்றான். பிறந்த அன்று குழந்தையைப் பார்ப்பதில் உள்ள மகிழ்ச்சியை சொல்லித் தெரியவேண்டியதில்லை. புத்தம் புது மலர் போன்று இருந்த குழந்தையைப் பார்த்து விட்டு திரு.அய்யாசாமி அவர்களுக்கு செல்லில் அழைத்தோம். அவர் செல் அணைத்து வைக்கபட்டிருக்க, ஈரோடு கதிர் அவர்கள், பெரியவரின் பக்கத்துக்கு வீட்டில் குடியிருக்கும் நண்பர் திரு.விஜய் அவர்களின் எண்களைத் தன் வலைப் பக்கங்களில் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு செல்லில் அழைக்க, வழியைச் சொன்னார். அவருக்கும், ஈரோடு கதிர் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள். ஏலூரில் இருந்து உள்ளே செல்லும் பாதையில், வேட்...

மரங்களில்லா வாழ்வு.. ? (ஒரு கேள்விக்குறி)

Image
நாம் இருக்கும் அலுவலகம், வீடு என எல்லாமே ஒரு காலத்தில் மரங்கள் சூழ்ந்த காடுகளாகவும், விவசாய நிலங்களாகவும் இருந்தது தான். அழிக்க மட்டும் முடிந்த நம்மால் ஒரு சிறு மரத்தை நட்டு பாதுகாக்க முடிவதில்லை. கோவை - மேட்டுப்பாளையம் சாலை அகலப்படுத்தும் பணிக்காக, சாலையின் இருபுறமும் இருந்த புளிய மரங்கள் வெட்டப் பட்டுக் கொண்டிருக்கின்றன. மரமா, மனிதனா என்று கேட்டால் மனிதன் தான் முக்கியம் எனச் சொல்லும் மனிதர்கள் உள்ள இந்த காலத்தில் மரங்கள் அழிவதை எப்படித் தடுக்க முடியும். மரங்களைப் பற்றி யாருக்கு என்ன கவலை, எல்லாவற்றுக்கும் சட்டத்தில் வழி உண்டு. நண்பர் திரு.பிரகாஷ் அவர்கள் தனது வலைத்தளத்தில் இது பற்றி எழுதியிருந்தார். http://saamakodangi.blogspot.com/2010/07/blog-post.html . அவருக்கு எனது நன்றிகள் பல. அந்த மரங்களுக்கு அருகில் இருந்தவன் என்பதனால் எனக்கு மிக்க வருத்தம். எல்லா மரங்களையும் வெட்டி விட்டு சுவாசக் காற்றுக்கு வரிசையில் நிற்க வேண்டி வந்தாலும் வரலாம். நம் சந்ததிகளுக்கு எதை கொடுக்க போகிறோம்?. வாடகைக்கு அறைகள் கட்டும் இடங்களில், கொஞ்சம் மரங்கள் வளர்க்கவும் இடம் ஒதுக்கலாம். ஓங்கி வளர்ந்த அழகு மரங்க...

மாட்டி வைத்து என்ன பயன்?

Image
உண்டு , உடை , உறை என் மனிதனுக்கு மூன்று தேவைகள் . இதில் முதல் இரண்டுக்கும் உறுதுணையாக இருப்பது விவசாயமும் , நெசவும் . எங்கள் கிராமத்தில் நெசவும் உழவும் இரண்டும் இருந்தன ஒருகாலத்தில் . இன்று இரண்டுமே அழிவின் விளிம்பில் . ஊர் முழுவதும் முப்பது கைத் தறிகள் நெய்த காலம் போய் , இன்று இரண்டு தறிகள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன . இன்னும் நெய்து கொண்டிருப்பவர்களில் எங்கள் அப்பாவும் ஒருவர் . கைத் தறி என்றால் , சர்வோதயா சங்க வேட்டி ( இப்பொழுது கிடைக்கிறதா எனத் தெரியவில்லை ). வேட்டியில் கூலி குறைவாக இருந்ததால் , பத்து வருடங்களுக்கும் மேலாகவே அப்பா கைத்தறி கொசுவலை நெய்து கொண்டிருக்கிறார் . அடுத்த தலைமுறையில் யாருமே நெசவைக் கற்றுக்கொள்ளவில்லை . கற்றுக்கொள்ள பிரியபடவும் இல்லை . அப்படியே இந்த தொழில்களை செய்தாலும் குடும்ப வருமானம் தினமும் இருநூறு ரூபாயைத் தாண்டாது . அந்த காலத்தை விட இப்பொழுது கூலி அதிகம் என்கிறார்கள் . இதற்கு குடும்பத்தில் மூன்று பேர் உழைக்க வேண்டும் . அதே மூன்று பேர் வேறு வேலைக்கு சென்றால் , பக்கத்தி...

செம்மொழி மாநாடு மற்றும் டாஸ்மாக் தாராளம்

புது சாலைகள் , புது விளக்குகள் , புது கட்டிடங்கள் ... என கோலம் (!) கொண்டு நிற்கிறது கோவை , செம்மொழி மாநாட்டுக்காக . மாநாடு நடந்து முடிந்த பின்னர்தான் தெரியும் , தமிழ் எப்படி இருக்கிறதென்று . எப்படி இருந்தாலும் ' பை மா ', ' ஹாய் டாடி ', ' ஹொவ் ஆர் யு ', ' வெரி குட் '..... போன்றவைகள் நம்மிடம் இருந்து மாற போவதில்லை . வரும் தலைமுறைக்கு தமிழை சொல்லி கொடுக்க போவதும் இல்லை . தமிழ் படித்தால் சம்பாதிக்க முடியாதென்று நம் மக்களின் மண்டையில் பதிந்து எவ்வளவோ நாட்களாகி விட்டன . போன வாரம் இரண்டு குழந்தைகளை பார்த்தேன் . இரண்டு குழந்தைகளின் பெற்றோரும் ஒரு நல்ல அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டும் . அவர்களுக்கும் அந்த குழந்தைகளுக்கும் நடந்த உரையாடல்கள் இப்படித்தான் இருந்தன . 'Oh Dear.. dont do that', 'please ma...', 'why are you crying now?' இப்படித்தான் ... ஒரு குழந்தை போனில் சொல்லியது 'mom.. scolding me.. ' .... எப்படியோ தமிழ் வளர்ந்தால் சரிதான் . இன்றைய தினமலரில் ஒரு செய்த...

வாழ்க்கைப் பயணம்

ஒரு சனிக்கிழமை காலையில் , தாம்பரம் செல்வதற்காக குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன் . சனிக்கிழமை என்பதாலும் , அலுவலக நேரத்தை தாண்டி விட்டதால் கூட்டம் அதிகமில்லை . மின்தொடர் வண்டி வந்து சேர்ந்ததும் பெட்டியில் ஏறினேன் . பெட்டிக்குள் நான்கைந்து பேர்களே இருந்தார்கள் . காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தேன் . அப்பொழுதுதான் கவனித்தேன் , எனக்கு எதிராக இரண்டு இருக்கைகள் தள்ளி , ஐம்பது வயது உள்ள ஓர் அம்மா அமர்ந்திருந்தார் . அவருக்கு பக்கத்தில் நல்ல உடம்புடன் ஒரு இருபத்தி ஐந்து வயசுள்ள பையன் உட்கார்ந்திருந்தான் . ஒண்ட வெட்டிய தலையுடன் , சிரித்து கொண்டே வந்தான் . சட்டையும் , டவுசரும் மட்டுமே அணிந்திருந்தான் . பார்த்த கொஞ்ச நேரத்திலயே மன நிலை குறைபாடுள்ளவன் என்று தெரிந்தது . அந்த அம்மா சோகமே உருவாக அமர்ந்திருந்தார் . வாழ்வில் எண்ணற்ற துயரங்களையும் பார்த்த சுருக்கம் முகத்தில் படர்ந்திருந்தது . அவன் அவ்வபொழுது முகத்தை திருப்பி சிரிப்பதும் , மெதுவாக கையால் அம்மாவை செல்லமாக அடிப்பது போல் செய்து கொண்டே வ...

அய்யோ.. ஆப்பிள்... !!

Image
ஆப்பிள் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது நிறைய சத்துக்கள் நிறைந்த பழம். எல்லா பழ கடைகளிலும் அடுக்கி அடுக்கி வைத்திருக்கிறார்கள். பார்த்தாலே மின்னுகிறது. விலையை கேட்டால் நூறு ரூபாய்க்கு மேலே சொல்லுகிறார்கள். சரி, அப்போ நமக்கு எங்கே தெரியுது, 'மின்னுவது எல்லாம் பொன்னல்ல' என்று. வாங்கி கொண்டு வந்து கழுவி அப்படியே சாப்பிடுகிறோம், நல்ல பெரிய கடையில் வாங்கியது வேறு !. நானும் இத்தனை நாளாக இப்படித்தான் அப்படியே தோலோடு சாப்பிட்டு கொண்டிருந்தேன். தோலில்தான் சத்து அதிகம் அல்லவா !! உமர் பாருக் என்பவர் எழுதிய "உடலின் மொழி" என்கிற புத்தகத்தில், ஆப்பிள் கெடாமல் இருக்க சில ராசயனங்களில் முக்கி எடுத்தும், மின்னுவதற்கு மெழுகும் பூசுகிறார்கள் என்று சொல்லி இருந்தார். வீட்டில் இருந்த ஒரு ஆப்பிள் மின்னுகிறதே என நினைத்து கொண்டு, கத்தி எடுத்து சுரண்டினேன், வந்தது தோல் அல்ல.. மெழுகு !! அது மெழுகா அல்லது வேறு எதாவது பொருளா எனத் தெரியவில்லை.. ஆனால் அழுக்கு போல வந்து கொண்டே இருந்தது.. வெள்ளையாக... அப்பொழுது போட்டோவும் எடுத்தேன்... நீங்களும் பாருங்கள்.. உடல் நலத்துக்காக சாப்பிடும் பழங்களிலும் இவ...

அரசு இயந்திரங்கள்

பிறப்பு சான்றிதழ் , சாதி சான்றிதழ் , ரேஷன் கார்டு மற்றும் பிற தேவைகளுக்காக நாம் அணுகுவது அரசு அலுவலகங்களை . நமக்காக அவர்கள் வேலை செய்ய வேண்டும் என்றுதான் அரசாங்கங்கள் சொல்லுகின்றன . ஒரு வேலை நிமித்தமாக நேற்று ஒரு அரசு அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது . அங்கே நடந்தவை இங்கு : - நான் பார்க்க வேண்டிய அலுவலர் இன்னும் வரவில்லை . நேரம் 10:15 - இன்னொரு அலுவலர் வந்தார் . இரண்டு ஊது பத்திகளை பற்ற வைத்து அறை முழுவதும் காட்டி விட்டு அவரின் இருக்கையில் அமர்ந்தார் . - ஒரு ஏழை பெண்மணி எதுவோ அவரிடம் கேட்க , ' எத்தன தடவ சொல்லுறது ... இன்னும் ஒரு வாரம் கழித்து வா .. ' என்றார் . - ஒருவர் ஓரமாய் நின்று கொண்டிருந்தார் . சரி , நம்மை போல அவரும் யாரோ ஒருவருக்காக வெயிட் பண்ணுகிறார் என்று நினைத்திருந்தேன் . ஒரு பத்து நிமிடம் கழித்து , அரசு ஊழிய பெண்மணி ஒருவர் வந்தார் . அந்த அம்மாவை பார்த்ததும் குசலம் விசாரித்து விட்டு , கொண்டு வந்த விண்ணப்பத்தை காண்பித்தார் . இருவரும் உறவினர்களாக அல்லது தெரிந்தவர்களாக இருக்க வேண்டும...

தண்ணீர்.. தண்ணீர்..

தண்ணீர்.. இது இல்லையென்றால் உயிர்களின் வாழ்வு அவ்வளவுதான். திருவள்ளுவர் கூட மழை இல்லையெனில், பசும் புல் கூட தலை நீட்டலரிது என்கிறார். காடுகளை அழித்து, மரங்களை வெட்டி சாம்பல் ஆக்கிவிட்டோம். வெய்யில் எரிக்கிறது என்று புலம்புகிறோம். இளநீர் குடித்தும், தர்பூசணி சாப்பிட்டும் தாகம் தணிக்கிறோம். காட்டில் உள்ள விலங்குகள் என்ன செய்யும். ஒருவேளை கால போக்கில் கடல் நீரில் இருந்து பெற்று கொள்வீர்கள். நம் நாட்டு விலங்குகள் தண்ணி இல்லாமல் மடிய வேண்டுமா?. வெளிநாட்டு தோழி பேசும்பொழுது சொன்னது "எனக்கு இந்தியாவை பிடிக்கும். அங்குதான் யானைகளும், குரங்குகளும் நிறைய உள்ளன" என்றாள். அனைத்து புலிகளையும் கொன்றுவிட்டு, புலிகளை காப்போம் என கூவுகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் மற்ற விலங்குகளையும் இழந்து விடுவோமா நண்பர்களே ?. அனைத்துக்கும் ஆதாரம் தண்ணீர். அதை இழந்துவிட்டு நம்மால் உயிர் வாழ முடியாது. நம்மால் முடிந்த சிலவற்றை செய்யலாம். - முடிந்த அளவு நீரை குறைவாக பயன்படுத்துங்கள். முழுவதும் குழாயை திறந்து விட்டு வீணாவதை தடுங்கள். - குழாயில் நீர் வீணாவது தெரிந்தால் நன்றாக அடைத்து விடுங்கள். - தோட்டம் செடிக...