Posts

Showing posts from December, 2008

தீட்டு

நான் இல்லாத பொழுதில் வீட்டுக்கு வந்த நண்பன் புத்தகம் கேட்க "உள்ள வந்து எடுத்துட்டு போ" என சொல்ல அவன் புத்தகத்தை தேடும் சமயம் "ஏம்பா.. நீ நம்ம சாதி தானே" "இல்லைங்க" "அப்புறம்... ? " "நான் வந்து.. நான் வந்து" "மூஞ்சிய பாத்தப்பவே நெனச்சேன்... வெளிய போ" அப்புறமாய் வீட்டுக்குள் தெளிக்கப்பட்ட மாட்டு சாணியின் வாசம் இன்னும் போகவில்லை !

அழைப்பு வராத இரு எண்கள்

" ஹலோ பிரகாஷ் ” “ மச்சி , எப்படிடா இருக்க ?” “ நான் நல்லா இருக்கேன் , அப்புறம் நான் நாளைக்கு சென்னை கெளம்பனும் .. மண்டே நியூ கம்பெனில ஜாஇன் பண்ணனும் . உன்கிட்ட சொல்லனும்னுதான் கூப்பிட்டேன் டா ” “ ஓகே டா மச்சான் , ஆல் த பெஸ்ட் , போன் பண்ணு .. ஊருக்கு வந்தா கூப்பிடு என்ன ” “ சரிடா ..” என்று போனை வைத்தேன் . இந்த உரையாடல்தான் அவனிடம் நான் பேசிய கடைசி பேச்சாக இருக்குமென்று , இன்னும் என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை . ஒரு வருடத்துக்கும் முன்னால் , பிரகாஷ் , நான் மற்றும் சில நண்பர்கள் ஒரே கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தோம் . எனக்கப்புறம் வந்து சேர்ந்தவன் என்பதால் , முதலில் வாங்க , போங்க என்று கூப்பிட்டு பின்னர் வா , போ என சுருங்கி , கடைசியில் டாய் மச்சி வரை வந்து விட்டது எங்களின் நட்பு . இதில் கூத்து என்னவென்றால் , என் நண்பர்களை வாங்க , போங்க எனக் கூப்பிடுவான் . அவனிடம் கேட்டதற்கு , " டாய் மச்சான் நீ நம்ம ஆளு .. அவங்கள அப்படி கூப்பிட முடியல .. நீ அப்படி இல்லடா .." என்றான் . எனக...

முந்தின இரவு

இரண்டு மாத கருவுடன் தூக்கில் தொங்கியவள் சாணி பவுடரைக் குடித்த பத்தாம் வகுப்பு படித்தவள் பொண்டாட்டியும் குழந்தையுமிருக்க பால் டயரை குடித்தவன் இவர்கள் சாவதற்கு முந்தின இரவு அழுதிருப்பர்களா ?

சோறு

உயர உயரப் பற என்றார்கள் நானும் பறந்தேன் கடைசியில் சோற்றை மறந்து பிரெட்டும், பீட்சாவும் இரையாய் என் தொண்டைக்குள் திணிக்கப்பட்டன !

பசி

பசியோடு போய் படுக்கையில் விழுந்தேன் பசி தீர்ந்தது நாளைக்கும் பசிக்கும் நிச்சயமாக !