Posts

Showing posts from July, 2010

கதவின்றி அமையாது...

Image
மரங்களின் தந்தை திரு . அய்யாசாமி அவர்களைச் சந்தித்துவிட்டு திரும்பும்பொழுது, அவர் வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டில் சாத்தி இருந்த கதவைப் பார்க்க நேர்ந்தது. அந்தக் கதவை என் செல்லில் படம் பிடித்துக் கொண்டேன். அந்த இரவு அந்தக் கதவைப் பற்றிய நினைவுகள் வந்த வண்ணம் இருந்தன. எங்கள் கிராமத்து வீட்டிலும் அதே போல் ஒரு கதவு வீட்டுக்குள் இருக்கிறது. மூன்று படிகள் வைத்து, சின்ன சின்ன பூக்கள் போட்ட கதவாக இருக்கும். ஒவ்வொரு படியிலும் ஏறி கதவைத் தள்ளி விட்டு விளையாடுவோம். கதவுக்கு மேலே ஒரு அட்டாரி இருந்தது. அட்டாரியில் எதாவது எடுக்க வேண்டும் என்றால் கதவு மேல் ஏறித்தான் எடுக்க வேண்டும். சாமி படங்கள், நடிகர்கள் படங்கள், இயற்கைப் படங்கள் என கதவுகளில் ஒட்டிக் கொண்டே இருப்பேன். புதிய படங்கள் கிடைத்தால், பழைய படங்களை கிழித்து விட்டு புதியதை ஒட்டி விடுவேன். கி.ரா. வின் 'கதவு' சிறுகதையில் ஒரு கதவுக்காக அழும் சிறுவர்களைப் பற்றி சொல்லியிருப்பார். தீர்வை கட்டாமல் இருந்ததற்காக கதவைத் தலையாரி பெயர்த்து கொண்டு செல்லுகின்றான். கொஞ்ச நாள்கள் கழித்து, அந்த கதவு வைத்திருந்த இடத்தை கண்டுபிடிக்கிறார்கள். கதவு ...

சினிமா - ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் (Schindler's List)

Image
உலகின் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றான 'ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட்' படத்தை இந்த வாரம் பார்த்து விட்டேன். 'லைப் இஸ் பியுட்டிபுல்' படத்துக்கு நான் எழுதிய பதிவு க்கு பின்னூட்டம் இட்டிருந்த திரு.ஜெய் அவர்கள் இப்படத்தைப் பார்க்குமாறு பரிந்துரைத்தார். ஏற்கனவே படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் , படம் பார்க்க தூண்டிய திரு.ஜெய் அவர்களுக்கு என் நன்றிகள். நண்பர் திரு.முரளி பரிந்துரைத்த ' Boy with stripped Pyjama' பார்க்க வேண்டும். படத்தின் ஆரம்பத்தில் ஒரு மெழுகுவர்த்தி உருகி, அணைந்த பின்னர் வரும் புகையை மேலே காட்டி அப்படியே போய் ரயிலில் வரும் புகையில் போய் முடிகின்றது. கூடவே வண்ணத்தில் இருந்த காட்சிகள் கருப்பு, வெள்ளைக்கு மாறுகின்றன. ஆறு மில்லியன் மக்கள் கொல்லப்பட்ட வருடத்துக்கும், இடத்துக்கும் படம் நம்மை இழுத்துச் செல்கின்றது. போலந்து நாட்டில் தங்கி இருந்த யூத மக்கள் குடியிருந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப் பட்டு, ரயிலில் நாஜி முகாம்களுக்கு அனுப்பி வைக்கபடுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் பெயர்களைச் சொல்லி முகாம்களில் அடைக்கப் படுகிறார்கள். முகாம்களில் இருந்த மக்களை என...

மரங்களின் தந்தை - திரு.அய்யாசாமி

Image
புத்தகங்களிலும், வலைத் தளங்களிலும் சுமார் மூவாயிரம் மரங்களை வளர்த்த பெரியவர் திரு.அய்யாசாமி அவர்களைப் பற்றி படிக்கும் பொழுதெல்லாம், இவர் நம் ஊருக்கு பக்கத்தில் இருக்கிறார், போய்ப் பார்க்கவேண்டும் எனத் தோன்றும். அந்த எண்ணம் கடந்த சனிக் கிழமை அன்று நிறைவேறியது. T.N. பாளையத்தில் நண்பனின் பெண் குழந்தையைப் பார்க்க நானும், நண்பன் கமலக்கண்ணனும் சென்றோம். கிளம்பும் போதே, கமலக் கண்ணன், 'அய்யாசாமி அய்யாவையும் பார்த்துட்டு வந்திரலாம், பக்கத்துலதான் அவர் வீடும் இருக்கு' என்றான். பிறந்த அன்று குழந்தையைப் பார்ப்பதில் உள்ள மகிழ்ச்சியை சொல்லித் தெரியவேண்டியதில்லை. புத்தம் புது மலர் போன்று இருந்த குழந்தையைப் பார்த்து விட்டு திரு.அய்யாசாமி அவர்களுக்கு செல்லில் அழைத்தோம். அவர் செல் அணைத்து வைக்கபட்டிருக்க, ஈரோடு கதிர் அவர்கள், பெரியவரின் பக்கத்துக்கு வீட்டில் குடியிருக்கும் நண்பர் திரு.விஜய் அவர்களின் எண்களைத் தன் வலைப் பக்கங்களில் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு செல்லில் அழைக்க, வழியைச் சொன்னார். அவருக்கும், ஈரோடு கதிர் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள். ஏலூரில் இருந்து உள்ளே செல்லும் பாதையில், வேட்...

ஏமாற்று வியாபாரிகள்

காய்கறி அங்காடியில் பேரம் முடிந்து விற்றவனும், வாங்கியவனும் விலை அதிகம் எனவும் குறைவு எனவும் சிறு முணுமுணுப்புடன் விலகினர்... இரண்டு சொத்தைக் காய்களைத் தள்ளிவிட்டதில் விற்றவனும் கிழிந்து போனதொரு பத்து ரூபாய்த் தாளை மடித்துக் கொடுத்ததில் வாங்கியவனும் உள்ளூர மகிழ்ந்த கணத்தில்... கடவுள் தன் கையிலிருந்த தராசையும் எடைக் கற்களையும் வீசியெறிந்து விட்டு நித்திரையைத் தொடர்ந்தார்.

சினிமா - லைப் இஸ் பியுட்டிபுல் (Life Is Beautiful)

Image
பரந்து விரிந்த இந்த பூமியில், எவ்வளவு மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் பின்னாலும் மிக நீண்ட கதை இருந்திருக்கும். ஒரு சிலர் தங்கள் கதைகளை சொல்லிவிட்டு சென்றார்கள். மற்றவர்கள் மண்ணில் புதைக்கப் படும்போதே, அவர்களின் வரலாறும் சேர்ந்தே புதைக்கப்படுகிறது. சொல்லப்பட்ட கதைகளை விட, சொல்லாமல் விட்ட கதைகள் தான் அதிகமாக இருக்கும். உலகம் அழகானது. வாழ்க்கையும் கூட அழகானதுதான். ஆனால், வாழ்க்கையே போராட்டமாக மாறினால்?. 'Life Is Beautiful' படம் பற்றி நிறையத் தடவை கேள்விப்பட்டிருந்தாலும் நேற்றுதான் பார்க்க முடிந்தது. 'இது ஒரு சாதாரணக் கதை.. ஆனால் அவ்வளவு எளிதாக சொல்லிவிட முடியாது.. .' என படத்தின் ஆரம்பித்திலேயே சொல்லிவிடுகிறார்கள். உலகப் போரின்போது சித்திரவதை செய்யப்பட்ட யூத மக்களின் கண்ணீர் துளிகளில், ஒரு துளி இந்தக் கதை. பல வருடங்கள் ஓடியும் இன்னும் இந்த சமுதாயம் திருந்தவில்லை, அதற்கு சான்று இலங்கை. பட்டியில் அடைப்பது போல அடைக்கப்பட்ட மக்களின் குடும்பம் என்ன ஆனது, குழந்தைகள் என்ன ஆனார்கள், வயதான பெற்றோர் என்ன பண்ணியிருப்பார்கள். இதைவிடக் கொடுமை,யூதர்களை ஆண்கள், பெண்கள், குழந்த...

மரங்களில்லா வாழ்வு.. ? (ஒரு கேள்விக்குறி)

Image
நாம் இருக்கும் அலுவலகம், வீடு என எல்லாமே ஒரு காலத்தில் மரங்கள் சூழ்ந்த காடுகளாகவும், விவசாய நிலங்களாகவும் இருந்தது தான். அழிக்க மட்டும் முடிந்த நம்மால் ஒரு சிறு மரத்தை நட்டு பாதுகாக்க முடிவதில்லை. கோவை - மேட்டுப்பாளையம் சாலை அகலப்படுத்தும் பணிக்காக, சாலையின் இருபுறமும் இருந்த புளிய மரங்கள் வெட்டப் பட்டுக் கொண்டிருக்கின்றன. மரமா, மனிதனா என்று கேட்டால் மனிதன் தான் முக்கியம் எனச் சொல்லும் மனிதர்கள் உள்ள இந்த காலத்தில் மரங்கள் அழிவதை எப்படித் தடுக்க முடியும். மரங்களைப் பற்றி யாருக்கு என்ன கவலை, எல்லாவற்றுக்கும் சட்டத்தில் வழி உண்டு. நண்பர் திரு.பிரகாஷ் அவர்கள் தனது வலைத்தளத்தில் இது பற்றி எழுதியிருந்தார். http://saamakodangi.blogspot.com/2010/07/blog-post.html . அவருக்கு எனது நன்றிகள் பல. அந்த மரங்களுக்கு அருகில் இருந்தவன் என்பதனால் எனக்கு மிக்க வருத்தம். எல்லா மரங்களையும் வெட்டி விட்டு சுவாசக் காற்றுக்கு வரிசையில் நிற்க வேண்டி வந்தாலும் வரலாம். நம் சந்ததிகளுக்கு எதை கொடுக்க போகிறோம்?. வாடகைக்கு அறைகள் கட்டும் இடங்களில், கொஞ்சம் மரங்கள் வளர்க்கவும் இடம் ஒதுக்கலாம். ஓங்கி வளர்ந்த அழகு மரங்க...

களம்

அவனுக்கும் இவனுக்கும் பகை களத்தில் நின்றார்கள் ஒருவன் ஐநூறு என்றும் ஒருவன் ஐந்தாயிரம் என்றும் கொன்றார்கள் பகைவர்களை இறுதியில் ஐந்தாயிரம் கொன்றவனே வெற்றி பெற்றவன் ஆனான் அவனே நாயகனும் அவனே பாட்டுடைத் தலைவனும் ஆனான் அதிகம் கொன்றவனே அரியணையிலும் அமர்ந்தான் !!

மாட்டி வைத்து என்ன பயன்?

Image
உண்டு , உடை , உறை என் மனிதனுக்கு மூன்று தேவைகள் . இதில் முதல் இரண்டுக்கும் உறுதுணையாக இருப்பது விவசாயமும் , நெசவும் . எங்கள் கிராமத்தில் நெசவும் உழவும் இரண்டும் இருந்தன ஒருகாலத்தில் . இன்று இரண்டுமே அழிவின் விளிம்பில் . ஊர் முழுவதும் முப்பது கைத் தறிகள் நெய்த காலம் போய் , இன்று இரண்டு தறிகள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன . இன்னும் நெய்து கொண்டிருப்பவர்களில் எங்கள் அப்பாவும் ஒருவர் . கைத் தறி என்றால் , சர்வோதயா சங்க வேட்டி ( இப்பொழுது கிடைக்கிறதா எனத் தெரியவில்லை ). வேட்டியில் கூலி குறைவாக இருந்ததால் , பத்து வருடங்களுக்கும் மேலாகவே அப்பா கைத்தறி கொசுவலை நெய்து கொண்டிருக்கிறார் . அடுத்த தலைமுறையில் யாருமே நெசவைக் கற்றுக்கொள்ளவில்லை . கற்றுக்கொள்ள பிரியபடவும் இல்லை . அப்படியே இந்த தொழில்களை செய்தாலும் குடும்ப வருமானம் தினமும் இருநூறு ரூபாயைத் தாண்டாது . அந்த காலத்தை விட இப்பொழுது கூலி அதிகம் என்கிறார்கள் . இதற்கு குடும்பத்தில் மூன்று பேர் உழைக்க வேண்டும் . அதே மூன்று பேர் வேறு வேலைக்கு சென்றால் , பக்கத்தி...