Posts

Showing posts with the label எனது டைரியிலிருந்து

சிறுநுரை போல...

காமந் தாங்குமதி யென்பேர் தாமஃ தறியுநர் கொல்லோ வனைமது கையர்கொல் யாமெங் காதலர்க் காணே மாயிற் செறிதுளி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் கல்பொரு சிறுநுரை போல மெல்ல மெல்ல இல்லா குதுமே. (குறுந்தொகை, கல்பொரு சிறுநுரையார்) *************** பிரிவை தாங்கிக்கொள் என்பவர்கள் தாங்கள் அதை அறிந்தவர்கள்தானா ? அத்தனை வல்லமை உடையவர்களா ? நான் என் தலைவனை காணேன் என்றால் துயர் நிரம்பிய நெஞ்சத்துடன் நீர்விரிவிலிருந்து வந்து கல்லில் மோதி மறையும் சிறுநுரை போல் மெல்ல மெல்ல இல்லாமலாவேன். - ஜெயமோகன், சங்க சித்திரங்கள்

எனது டைரியிலிருந்து - 6

Image
விற்ற காசு தோப்பும் துரவும் வீடும் கிணறும் விற்று வாங்கிய தொகையை எண்ணிக்  கொண்டிருக்கையில் ஐந்நூறு ரூபாய் நோட்டுகள் அனைத்திலும் அப்பாவின் முகம். - ந. கண்ணன் (ஆனந்த விகடன்) =================================================== தோல்வி கடைசி சவம் விழுந்ததும் கட்டாயம் அறிவிக்கப்படும் வெற்றிபெற்ற கடவுள் பெயர். - எஸ். ஏ. நாசர் (ஆனந்த விகடன்) =================================================== நடைபாதை ஓவியன் கோவர்த்தன மலையை குடையென ஆக்கி மக்களைக் காக்கும் கண்ணனை வயிற்றுப் பசியுடன் வரைந்து முடித்து நிமிர்ந்து பார்க்க வந்தது மழை. குடையுடன் கடவுள் அழிந்து கொண்டிருந்தார். - எம். மாரியப்பன் (ஆனந்த விகடன்) =================================================== அகத்தகத்தினிலே காதலர் தினம், அன்னையர் தினம் என வரிசையாய் எல்லா தினங்களின் போதும் நீ கொடுத்த முத்தங்கள், கடிதங்கள் வாழ்த்து அட்டைகள், பரிசுகள் என எல்லாவற்றையும் அடிக்கடி நினைத்துப் பார்த்து உயிர்த்திருக்கிறேன் பலமுறை. வழக்கமானதொரு மாலைப்பொழுதில் என் தலை கோதி, உச்சி முகர்ந்து '......ப் போல இருக்கிறாய்' என்று அனிச்சையாய் யாரோ ஒ...

எனது டைரியிலிருந்து - 5

எட்டுக்காலியும் நானும் எட்டுக்காலியும் நானும் ஒண்ணு இருவரும் பிழைப்பது வாய் வித்தையால். எட்டுக்காலிக்கு எச்சில் எனக்குப் பொய் இருவரும் வலை பின்னுகிறோம் அது எச்சிலைக்கூட்டி நான் உண்மையைக் குறைத்து எட்டுக்காலி வலை ஜீவித சந்தர்ப்பம் எனது வலை சந்தர்ப்ப ஜீவிதம் எட்டுக்காலிக்குத் தெரியும் எச்சிலின் நீளமும் ஆயுளும் எனக்குத் தெரியும் பொய்யின் தடுமாற்றமும் அற்பமும். வாய் வித்தைக்காரர்கள் இருவரும் எனினும் எட்டுக்காலி என்னைவிட பாக்கியசாலி... சொந்த வலையில் ஒருபோதும் சிக்குவதில்லை அது. -- சுகுமாரன் (ஆனந்த விகடன்) குற்ற மனசு ஆறாயிரத்துக்கு விற்றுவிட்ட பிறகும் ராவோடு ராவாக புதிய எஜமானனின் தொழுவத்துக் கயிற்றை அறுத்துக்கொண்டு பத்து கிலோ மீட்டர் பயணம் செய்து மூச்சிரைத்தபடி வீட்டு வாசலில் வந்து நிற்கிற வெள்ளைப் பசுவைப் பார்க்கும்போது உறுத்தத்தான் செய்கிறது தனிக்குடித்தனம் வந்தவனுக்கு. --- ஜெ. முருகன் (ஆனந்த விகடன்) திருத்தப்பட்ட வருத்தம் இறந்தவன் இறுதிப் பயணத்தில் எத்தனை பேர் வருகிறார்கள் என்று ஒருமுறை கண்களைத் திறந்து பார்த்தான் வாழ்ந்ததற்கு ...

நட்பின் இலக்கணம்

Image
நட்புக்கு இலக்கணமாக சங்க காலத்தில் இருந்து இருவர் சுட்டிக் காட்டப்படுகிறார்கள். பிசிராந்தையாரும் சோழனும். அப்பாடலைப் பற்றி, ஆனந்த விகடனில், எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்கள் 'சங்க சித்திரங்கள்' பகுதியில் எழுதியிருந்தார். என் டைரியில் எழுதி வைத்திருந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். ============== அன்னச் சேவ லன்னச் சேவல் ஆடுகொள் வென்றி யடுபோ ரண்ணல் நாடுதலை யளிக்கு மொன்முகம் போலக் கோடுகூடு மதிய முகில்நிலா விளங்கும் மையன் மாலையாங் கையறு பிணையக் குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி வடமலைப் பெயர்குவை யாயி னிடையது சோழநன்னாட்டுப் படினே கோழி உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ வாயில் விடாது கோயில் புக்கெம் பெருங்கோக் கிள்ளி கேட்க விரும்பிசிர் ஆந்தை யடியுறை எனினே மாண்டநின் இன்புறு பேடை யணியத்தன் நன்புறு நன்கல நல்குவ னினக்கே. -- பிசிராந்தையார் பொருள்: ======== அன்னச் சேவலே, அன்னச் சேவலே போரில் வென்று, யானை மீதேறி ஊர்க்கோலம் வரும் மன்னனின் முகம்போல மலைமடிப்பில் முழுமதி ஒளிரும் இந்த அழகிய இரவில் நான் மட்டும் துயருற்று இருக்கிறேன். நீ குமரிக் கடலில் இருந்து அயிரை பிடித்து உண்டு வடக்குமல...

எனது டைரியிலிருந்து - 4

ஈரம் படிந்த வீடு ============== எப்படி விடுபட்டேன்.. நான் மட்டும்! ஒரு சொல், ஒரு ஜாடை ஒரு முகக்குறி காட்டியிருந்தால் அந்த இரவில் நிழலாய் தங்கியிருப்பேனே உன்னோடு.. தொப்பூழ் கொடி சுவாசம் தந்த தாயே நீ மாரடைத்து இறந்த அந்த சுவாச கணத்தில் என் முகம் ஓடிற்றா அம்மா தகர மயானம் முன் குவிந்த விராட்டிப் படுக்கையில் நீ இரட்டை வடம் மார்புச் சங்கிலி மேல் மூத்தவனுக்கு குறி. அன்னம் பொங்கி அடுப்படியில் வெந்த உன் வலது கரத்தில் குறடு நுழைத்து வெட்டியா வளையலோ அடுத்தவனுக்கு. மகளே உனக்கு என்னம்மா வேண்டுமென்ற அப்பாவிடம் கொடிக்கம்பியில் காயும் உன் நைந்த உள் பாவாடை காட்டி அழுகிறேன் பெருங்குரலில்.. - பா. சத்தியமோகன் (ஆனந்த விகடன்)

எனது டைரியிலிருந்து - 3

தோற்ற மயக்கம் எஸ்.ஆர். இராஜாராம் (ஆனந்த விகடன்) துல்லிய நீர்ப்பரப்பில் துறவிபோல் வந்தமர்ந்து மெல்லிய தன் உடலை மேற்பரப்பில் பிரதியாக்கி தண்ணீரில் தவம் செய்யும்.. பார்ப்பதற்கு பரவசம்தான் மீனுக்குத்தானே தெரியும் கொக்கின் குரூரம். ============================================ துபாய் இ. இசாக் (ஆனந்த விகடன்) கனவுகளில் வந்து கொஞ்சுகிற முகத்தைக் காணப் போகிற மகிழ்ச்சி எனக்குள். ரசித்து ரசித்து வாங்கிய பொம்மைகளோடு காத்திருக்கிறேன் நெடுநேரமாக. வீடு நுழைந்த முகம் கண்டு தொட்டுக் கொஞ்சி மகிழ நெருங்கையில் 'யாரும்மா.. இவங்க?' என்கிறாள் மழலை மொழியில் என் மகள். ============================================ வதை ஜி. விஜயலெட்சுமி (ஆனந்த விகடன்) திருவிழாக் கூட்டத்தில் குழந்தையைத் தொலைத்துவிட்டு தவிக்கையில்.. சின்ன வயதில் வீட்டுத் தொழுவத்தில் தெருநாய் ஈன்ற குட்டிகளை கோணிப்பையில் திணித்து ஊருக்கு வெளியே கள்ளிக்காட்டில் கொண்டுபோய் விட்டதெல்லாம் நினைவுக்கு வருகிறது. ============================================ கவனம் சே. சதாசிவம் (ஆனந்த விகடன்) நகரும் தார்ச்சாலை இருபக்க மரங்கள் பசுமையான வயல்வெளிகள் முப்பரி...

எனது டைரியிலிருந்து - 2

குறையொன்றுமில்லை சு.வெங்குட்டுவன் (ஆனந்த விகடன்) வழக்கம்போல் இம்முறையும் வானம் பொய்த்திருக்கும் இருக்கும் தண்ணிக்கு வெச்சுள்ள கத்தரியில் இலைச்சுருட்டை விழுந்திருக்கும் நிலவள வங்கியின் நகை ஏல அறிவிப்பு தபால்கார்டில் வந்து சேரும் காதுகுத்தும் பிள்ளைக்கு தோடு போடவேண்டுமென இளைய தங்கை சொல்லிப்போவாள் முகங்கண்ட மறுகணமே அம்மாவென குரலெழுப்பும் காளைகளை விற்றுவிட்டு ஊர் திரும்புவாய் நீ விரும்பிய பெண் தான் விரும்பும் புருசனுடன் பஸ் ஸ்டாண்டில் எதிர்ப்படுவாள் திரும்பி நிற்கும் உன்னிடத்தே வலிய வந்து உரையாடி சௌக்கியமா எனக் கேட்பாள் நல்ல சௌக்கியம் என்று சொல். ****************************** ****************************** ********** பாலபாரதி ஆனந்த விகடன் ஜிலீர் ஆசிரியராகும் கனவு உடைந்து நொறுங்கியது அரசு மது பாட்டில்களை அடுக்கி வைக்கும் வேலையில்... ****************************** ****************************** ********** மறதி கற்புக்கரசி கண்ணகி, சீதை நளாயினி பெயரெல்லாம் நினைவில் நிற்கிறது கற்றுக்கொடுத்த தமிழ் ஆசிரியை பெயர்தான் மறந்துவிட்டது ****************************** ****************************** ****...

எனது டைரியிலிருந்து..

Image
ஒரு காலத்தில் எனக்குப் பிடித்த சில கவிதைகளை டைரியில் எழுதி வைத்திருந்தேன். அதிலும் ஆனந்த விகடனில் வரும் கவிதைகள் தான் அதிகம் இருக்கும். அவற்றில் சிலவற்றை இங்கே பகிர்கின்றேன்; இருந்தவை .. தொலைந்தவை .. - கல்யாண்ஜி (ஆனந்த விகடன்) கார்த்திகை ராத்திரி ஏற்றின கடைசி விளக்கை வைத்துத் திரும்புமுன் அணைந்து விடுகிறது முதல் விளக்குகளுள் ஒன்று. எரிகிறபோது பார்க்காமல் எப்போதுமே அணைந்த பிறகுதான் அதைச் சற்று அதிகம் பார்க்கிறோம். எரிந்த பொழுதில் இருந்த வெளிச்சத்தைவிட அணைந்த பொழுதில் தொலைந்த வெளிச்சம் பரவுகிறது மனதில் பிரகாசமாக. ******************************** வலி - ஜி.ஆர்.விஜய் (ஆனந்த விகடன்) விழுங்கிய மீன் தொண்டையில் குத்துகையில் உணர்கிறேன் தூண்டிலின் ரணம். ******************************** வானம் மட்டும் இருக்கிறது - பா.சத்தியமோகன் (ஆ.வி. கற்றதும் பெற்றதும் பகுதியில் - சுஜாதா குறிப்பிட்டது) ஆமாம் ஆமாம் நீ பேசும் ஒவ்வொன்றும் வரிக்கு வரி நிஜம் முற்றுப்புள்ளி உள்ளிட்ட அனைத்தும் ஏற்கத் தயார் அனைத்துக்கும் ஆமாம். சங்கிலியால் கட்டப்பட்டது யானையென்றாலே தப்புதல் கடினமாச்சே சங்கிலியால் கட்டுண்ட டம்ளர் தப்பு...