சிறுநுரை போல...
காமந் தாங்குமதி யென்பேர் தாமஃ தறியுநர் கொல்லோ வனைமது கையர்கொல் யாமெங் காதலர்க் காணே மாயிற் செறிதுளி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் கல்பொரு சிறுநுரை போல மெல்ல மெல்ல இல்லா குதுமே. (குறுந்தொகை, கல்பொரு சிறுநுரையார்) *************** பிரிவை தாங்கிக்கொள் என்பவர்கள் தாங்கள் அதை அறிந்தவர்கள்தானா ? அத்தனை வல்லமை உடையவர்களா ? நான் என் தலைவனை காணேன் என்றால் துயர் நிரம்பிய நெஞ்சத்துடன் நீர்விரிவிலிருந்து வந்து கல்லில் மோதி மறையும் சிறுநுரை போல் மெல்ல மெல்ல இல்லாமலாவேன். - ஜெயமோகன், சங்க சித்திரங்கள்