Posts

Showing posts from March, 2012

எனது டைரியிலிருந்து - 5

எட்டுக்காலியும் நானும் எட்டுக்காலியும் நானும் ஒண்ணு இருவரும் பிழைப்பது வாய் வித்தையால். எட்டுக்காலிக்கு எச்சில் எனக்குப் பொய் இருவரும் வலை பின்னுகிறோம் அது எச்சிலைக்கூட்டி நான் உண்மையைக் குறைத்து எட்டுக்காலி வலை ஜீவித சந்தர்ப்பம் எனது வலை சந்தர்ப்ப ஜீவிதம் எட்டுக்காலிக்குத் தெரியும் எச்சிலின் நீளமும் ஆயுளும் எனக்குத் தெரியும் பொய்யின் தடுமாற்றமும் அற்பமும். வாய் வித்தைக்காரர்கள் இருவரும் எனினும் எட்டுக்காலி என்னைவிட பாக்கியசாலி... சொந்த வலையில் ஒருபோதும் சிக்குவதில்லை அது. -- சுகுமாரன் (ஆனந்த விகடன்) குற்ற மனசு ஆறாயிரத்துக்கு விற்றுவிட்ட பிறகும் ராவோடு ராவாக புதிய எஜமானனின் தொழுவத்துக் கயிற்றை அறுத்துக்கொண்டு பத்து கிலோ மீட்டர் பயணம் செய்து மூச்சிரைத்தபடி வீட்டு வாசலில் வந்து நிற்கிற வெள்ளைப் பசுவைப் பார்க்கும்போது உறுத்தத்தான் செய்கிறது தனிக்குடித்தனம் வந்தவனுக்கு. --- ஜெ. முருகன் (ஆனந்த விகடன்) திருத்தப்பட்ட வருத்தம் இறந்தவன் இறுதிப் பயணத்தில் எத்தனை பேர் வருகிறார்கள் என்று ஒருமுறை கண்களைத் திறந்து பார்த்தான் வாழ்ந்ததற்கு ...

வலி

காலை நேரம் பதினொரு மணி இருக்கும். கொஞ்சம் வெளி வேலையாக, வெளியே சென்றுவிட்டு தகிக்கும் வெய்யிலில் வண்டியில் வந்து கொண்டிருந்தேன். ஒரு சிறுபையன் வழியில் லிப்ட் கேட்டான். அவனுக்கு வயது பதினைந்துக்குள் இருக்கும். சட்டையும், அங்கங்கே கருப்பு மையுடன் கூடிய கால்சட்டையும் அணிந்திருந்தான். வண்டியை நிறுத்தி "எது வரைக்கும்?" என்றேன். "அம்பேத்கார் நகர் வரைக்கும்ணா" என்றான். "சரி ஏறு" "போலாங் ணா" என்றான். "ஸ்கூலுக்குப் போறியா" "இல்லீன்னா" "அப்புறம் இப்போ எங்க போயிட்டு இருக்க" "வீட்டுக்கு ணா... அம்மா எறந்திடுச்சு",  எனக்கு பக்கென்றது. "எப்படி, ஒடம்பு சரியில்லாம இருந்தாங்களா" "நல்லாதான்ணா இருந்தாங்க... என்னாச்சுன்னு தெரியல" "இப்போ எங்க போயிட்டு வர்றே" "வேலைக்கு ணா" "என்ன வேலை" "லேத் ணா" "நீ ஒரே பையனா" "இல்லன்னா.. தங்கச்சி ஒண்ணு இருக்குது" "வீட்ல வேற யாரு இருக்கா..." "பாட்டி இருக்குது" ...

உண்மை கலந்த நாட்குறிப்புகள் - அ. முத்துலிங்கம்

Image
வாழ்க்கை எங்கே ஆரம்பித்து எப்படி முடியும் என்பதை யார் அறிவார். ஆனாலும், ஒவ்வொரு கணத்தையும் நேசித்து வாழ துறவிகளால் மட்டுமே முடிகிறது. எழுத்தாளர் அ.முத்துலிங்கம் கூட அப்படிதான் இந்த நாவலை எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். ஒவ்வொரு கணத்தையும் இந்த மனிதர் என்னமாய் வாழ்ந்து பார்த்து, அதை நினைவில் வைத்துக்கொண்டு எவ்வளவு அற்புதமாய் எழுதியிருக்கிறார். அவர் இந்த நாவலைப் புனைவு என்று சொன்னாலும், ஒவ்வொரு அத்தியாயத்திலும், இது புனைவு இல்லை, நடந்தது என்றே நினைக்க வைக்கிறது அவரின் எழுத்து. எத்தனை நாடுகள், எத்தனை வகைப்பட்ட மனிதர்கள், அவர்களின் பழக்கங்கள் என உலகத்தை சுற்றிக்காட்டுகிறது புத்தகம். அவரே சொல்வது போல, நாவலை எங்கே இருந்து வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். அவர் சென்ற ஊருக்கெல்லாம் நம்மையும் கூடவே கூட்டிக்கொண்டு போகிறார். அவரது தளத்தில் இருக்கிற இந்தப் பேட்டி முழுவதும் இந்த நாவலைப் பற்றியே இருக்கிறது. அ. முத்துலிங்கம் - நேர்காணல் அந்த நேர்காணலில் ஓரிடத்தில் இப்படிச் சொல்கிறார்; "பல சம்பவங்கள் என் மன அடுக்கின் அடியில் போய் கிடக்கும். அந்தச் சம்பவம் நடந்தபோது அது பெரிதா...

சினிமா: காந்தி(Gandhi)

Image
என் சிறுவயதில், வெள்ளிக்கிழமை காலை வேளைகளில் ரேடியோவில் 'சத்திய சோதனை செய்தவரே, ஒரு சரித்திர சாதனை புரிந்தவரே' என்ற பாடலுடன், நம் தேசத் தந்தை மகாத்மாவின் சத்திய சோதனையைப் படிப்பார்கள். அதற்குப் பின்னர், ஒரு போட்டியில் வெற்றி பெற்றதற்காக 'சத்திய சோதனை' புத்தகத்தை எனக்குப் பரிசாகத் தந்தார்கள். மகாத்மாவின் சிறுவயதிலிருந்து, அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பி விடுதலைப் போரில் பங்கேற்றது வரை அதில் எழுதியிருப்பார். இப்படி அங்குமிங்குமாக, மகாத்மாவைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறேன். அது மட்டுமில்லாமல், எங்கள் அப்பா ஒரு கைத்தறி நெசவாளர் என்பதால் காந்தியின் மீது சிறுவயதில் இருந்தே ஒரு பற்று இருந்தது. அன்று எங்கள் ஊருக்கு யாராவது  வந்தால், கையால் தயாரித்த நூல் மாலையைத்தான் போடுவார்கள். அத்தனை பேர் வீட்டிலும் கைத்தறி சத்தம் கேட்ட ஊரில், இன்று ஓரிருவரைத் தவிர வேறு யாரும் நெய்வதில்லை. அது கிடக்கட்டும். கொஞ்ச நாட்களுக்கு முன்னர், விஜய் டிவியின் 'நீயா நானா' நிகழ்ச்சியில், கோபிநாத் 'எத்தனை பேர் காந்தி படத்தைப் பார்த்திருக்கிறீர்கள்?...

வரைதல் என்பது

Image
ஓவியப் பீரியட் என்றால் எங்கள் எல்லோருக்கும் ஒரே சந்தோசமாக இருக்கும். ஆஜானுபாகுவான தோற்றத்தில் இருக்கும் ஓவிய ஆசிரியர், கிளாசுக்கு வந்தவுடன் சாக்பீஸை எடுத்து கரும்பலகை முழுவதும் சித்திரங்களாக வரைவார். சின்ன கோடுகள், பெரிய கோடுகள் இணைந்து ஒரு விலங்காகவோ, பறவையாகவோ மாறும். சுமார் முப்பது படங்கள் இருக்கும் ஓவிய புத்தகத்தில் அவர் வரும்பொழுது, அடுத்த வாரம் மூன்று படங்கள் வரைந்து கொண்டு வர வேண்டும் எனச் சொல்லுவார்.  இப்படியே ஒவ்வொரு வாரமாக, ஓவியப் புத்தகப் படங்கள் அனைத்தும் எங்கள் திறமையால்(!) நிரம்பி விடும். சில நேரங்களில் கதைகளும் சொல்லுவார். நாங்கள் வரைந்த ஓவியங்களுக்கு அவர் பத்துக்கு இவ்வளவு மதிப்பெண் என்று போடுவார். பெரும்பாலும் ஐந்து என்றே என் படங்களுக்கு விழும். ஒரு சில படங்களுக்கு அவர் v.good மற்றும் v.v.good என்று எழுதுவார். எனக்கு ஒரே ஒரு படத்துக்கு மட்டும் எட்டு மார்க் போட்டு v.good என்று கிறுக்கினார். "டேய் நீ கூட எட்டு மார்க் வாங்கிட்டியாடா" என்று பொறாமைப் பட்டான், எப்பொழுதும் எட்டுக்கு மேல் மார்க் வாங்கும் கண்ணன். பெரிய வகுப்புகளுக்குச் செல்லச் செல...

வழக்கம் போலவே..

இன்றைய கூட்டத்துக்கு வேண்டி முந்தின நாள் அழகு நிலையத்தில் போட்ட ஒப்பனை அப்படியே இருந்தது.. பேச வேண்டியவைகள் எல்லாவற்றையும் சுருக்கி எழுதி வைத்தாகி விட்டது.. அனைத்து நிருபர்களுக்கும் தகவல் சொல்லியாகி விட்டது.. நகரத்தின் முக்கிய பெண்மணிகளுக்கு அழைப்பு அனுப்பியாகி விட்டது.. சிற்றுண்டிக்கு கூட ஏற்பாடுகள் நடந்து விட்டன.. இன்னும் ஒருமுறை ஒப்பனை சரிபார்த்து விட்டு மகளிர் தின கூட்டத்துக்கு புறப்பட்டு விட்டார் அந்தப் பெண்...  சாயம் போன சேலையில் கொத்து வேலைக்கு பூ வியாபாரத்துக்கு வீட்டு  வேலைக்கு எனப் புறப்படும் பெண்களுக்கு வழக்கம் போல்  இது மற்றுமொரு நாளே...     

சமூக வலை

Image
மனதில் தோன்றுவதையும் எடுத்த புகைப்படங்களையும் சட்டென்று சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளத் துடிக்கும் மகனைப்  பார்த்து, "ஏன், எங்களிடம் நீ ஒன்றையும் சொல்வதில்லை" எனக் கேட்கும் தாயிடம்.. "நீயும் பேஸ்புக்ல லாகின் பண்ணும்மா" எனச் சொல்கிறான் மகன். (படம்: இணையத்தில் இருந்து - நன்றி) 

ஊட்டி

Image
சில வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் ஊட்டியில் பைகாரா அருகில் இந்த புகைப்படங்களை எடுத்தேன். வாட்டி எடுக்கும் இந்த வெயிலுக்கு, இப்படிப்பட்ட இடங்கள்தான் எவ்வளவு அழகு...