Showing posts with label பாரதி. Show all posts
Showing posts with label பாரதி. Show all posts

Wednesday, July 20, 2011

நின்னைச் சரணடைந்தேன்

நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்
பொன்னை உயர்வை புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று...
துன்பமினியில்லை.. சோர்வில்லை.. தோற்பில்லை..



உச்சி தனை முகர்ந்தால்
கர்வம் ஓங்கி வளருதடி
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடி





பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா
நின்றன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா
நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா




போனதெல்லாம் கனவினைப் போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஒரு கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ ? - அங்கு
குணங்களும் பொய்களோ

காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ





Sunday, December 12, 2010

பாரதி








சாதிகள்
பெண் கொடுமைகள்
படித்தவர்கள் செய்யும் சூது
வேடிக்கை மனிதர்கள் என்று
நிறைந்து கிடக்கும்
எமது காணி நிலங்களில்
உனது அக்கினிக் குஞ்சுகளை
தேடிக் கொண்டிருக்கிறோம் பாரதி
ஒருநாள் அகப்பட்டு
அவைகளை வெந்து தணிப்போம்
என்ற தாகத்தோடு.

Monday, November 15, 2010

சொல்லிக்கொடுத்த பாரதி..


தமிழ் மேல் எனக்கும் ஆர்வம் ஏற்பட காரணம் மகாகவி பாரதியார். பள்ளி நாட்களில் பேச்சுப் போட்டிகளுக்கும், கட்டுரைப் போட்டிகளுக்கும் வேண்டி பாரதியைப் படிக்க ஆரம்பித்தவன் நான். கொஞ்சம் கொஞ்சமாக அவரின் கவிதைகள் என்னை ஈர்த்தன.

ஒரு கவிஞராக, காதலராக, போராட்ட குணம் நிரம்பியவராக, தமிழ் ஆர்வம் மிக்கவராக, எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து உயிர்களையும் நேசித்த ஒரு மா மனிதன் பாரதி.

"காக்கை குருவி எங்கள் சாதி
நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம் " - என்று நேசித்தவர் பாரதி.

சாதி வெறியும் தீண்டாமையும் மிகுந்திருந்த காலத்தில் 'சாதிகள் இல்லையடி பாப்பா.. ' என்று ஓங்கி குரல் கொடுத்தவர் பாரதி. ஆனால் காலங்கள் மாறியும் இன்னும் சாதிக் கொடுமை தீரவில்லை பாரதி.

இந்தக் கவிதையை யார் படித்தாலும், சிறு மாற்றமாவது மனதில் வரும்.

"தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் மிக வாடித் துன்புற்று பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போல்
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ.. "

"தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ" - ஒரு சிறு பொறி கூட ஒரு பெரும் காட்டை அழித்து விடும் என்று அக்னிக் குஞ்சாய் முழங்குகிறார்.

"தனி மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்து விடுவோம்" - என்னும் வரிகளில் அந்த மா மனிதனின் உள்ளம் தெரிகிறது.

இன்னும் நிறைய இருக்கிறது, பாரதியைப் பற்றி எழுத நினைத்தால் எவ்வளவோ வந்து விழுகின்றன.. இன்னும் ஒரு நாள் மற்றொரு பதிவில்...

என்னையும் தமிழை நேசிக்க வைத்த மகா கவிக்கு என் நன்றிகள்.

***************
ஒரே பாரதி புலம்பல் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். நானும் ஒரு சில வரிகள் இங்கு எழுதுகிறேன் என்றால் அதற்கு பாரதியைப் போன்றவர்களும், எனக்கு தமிழ் சொல்லித் தந்த ஆசிரியர்களுமே காரணம். இந்தப் பதிவு எனது நூறாவது பதிவு. இந்நேரத்தில் அவர்களுக்கு இந்தப் பதிவின் மூலமாக என் நன்றிகளையும், இந்த எழுத்துக்களை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

கூடவே பயணிக்கும் அனைத்து நண்பர்களுக்கு - என் வணக்கங்களும் நன்றிகளும்.

படம் தந்து உதவிய கூகிளாண்டவருக்கு நன்றி.


Sunday, December 13, 2009

பாரதியும் ரஜினியும்

டிசம்பர் 11 அன்று மகா கவி பாரதியின் பிறந்த நாள். ஊரும் உலகமும் மறைந்த அந்த கவியை நினைத்து பார்க்க நேரமில்லாமல் இருந்தனர். அக்னி குஞ்சாய் வலம் வந்த பாரதியை நினைக்கவும் ஆள் இல்லை. ஒரு சில வலை தளங்களில் மட்டும் பாரதியை பற்றிய கட்டுரைகள் காணக் கிடைத்தன.

அதற்கு அடுத்த நாள்....

பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திரை படங்கள் அனைத்து டிவி களிலும், ஊர் எங்கும் அன்ன தானங்கள், சிறுவர்களுக்கு சில பரிசளிப்புகள், அனைத்து நாளிதழ்களிலும் ஒரு பக்க வண்ண புகைப்படம், தலைப்பு செய்திகள், இடை விடாமல் அவர் புகழ் பாட எப்.எம். ரேடியோக்கள், பட்டாசு வெடிப்புகள்... இன்னும் நிறைய நடந்தது..

இதை எல்லாம் விட உச்ச பட்சம்.. அவருக்காக பால் குடம் எடுத்த ரசிக மக்களும், சிறப்பு பிரார்த்தனை நடத்திய மக்களும் தான்...

அவர் வேறு யாருமில்லை.. நமது சூப்பர் ஸ்டார் ரஜினி தான்..

ரஜினி கொண்டாட பட வேண்டியவர்தான்.. இல்லை என்று சொல்லவில்லை.. ஆனால் பாரதியின் பிறந்த நாள் அன்று ஊடகங்கள் எல்லாம் எங்கே சென்றன என்று தெரியவில்லை.. நம் மக்களும் பாரதியை நினைத்து என்ன ஆக போகிறது என்று நினைத்து இருக்கலாம்... காலையில் இருந்து பொழுது சாயும் நேரம் வரையும் ரஜினியை புகழந்து தள்ளிய இவர்களுக்கு, பாரதியை பற்றிய ஒரு சிறு குறிப்பு கூடவா கிடைக்கவில்லை.. ? அது சரி, ரஜினியை பற்றி நிகழ்ச்சி போட்டால் வருமானம் வரும், இந்த பாரதியை போட்டால் விளம்பரம் கூட கிடைக்காது.. சிட்டுக் குருவிக்கு போட அரிசி கூட வாங்க முடியாது என எல்லாரும் நினத்திருக்கலாம்... !!


இன்னும் சில காலங்களில், புதிய சூப்பர் ஸ்டார்கள் வரலாம். போகலாம். ஆனால் பாரதி போன்றவர்களை காலம் வெல்ல முடியாது

அவரே சொல்வது போல;

தேடி சோறு நிதந் தின்று சில சின்ன சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்புற்று பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப் பருவம் எய்தி
கொடுங் கூற்றுக்கு இரையென பின்மாயும்
சில வேடிக்கை மனிதரை போல் நானும்
வீழ்வேன் என்று நினைத்தாயோ ?



காலனை எட்டி உதைக்க கூப்பிட்ட கவியே, உனக்கு மரணமில்லை....