உறங்காத தெரு
அங்கங்கு குப்பை கிடக்கும் இந்தத் தெருவின் காலைப் பொழுதுகளில் அழகிய கோலங்கள், பால் வண்டிகளின் ஓசைகள் நடை செல்வோரின் செருப்போசைகள் வேப்ப மரக் காக்கையின் சத்தம் வீடு திரும்பும் கூர்க்கா என விடியும்.. அலுவலகம், பள்ளி என சரசரக்கும் மக்கள் கிளம்பிப் போன பின்னர் காய்கறி வண்டி, தபால் எனவும் மாலைப் பொழுதுகளில் குழந்தைகளின் சத்தம் எனவும் நீள்கிறது பகல்... மெல்லிய வெளிச்சம் மட்டும் பரவிக் கிடக்கும் இரவுகளில் நைட் ஷிப்ட் போய் வரும் ஓரிருவர் திரும்ப வரும் கூர்க்கா சுற்றி வரும் நாய்கள் எனவும்.. தெரு எப்போதும் உறங்குவதேயில்லை. ************* புகைப்படம் http://www.flickr.com/photos/seeveeaar/3837563809/ இங்கிருந்து.. நன்றி.