Posts

Showing posts from June, 2011

சிறு துளிகள் (25/06/2011)

சேனல் 4 இலங்கையில் தமிழர்கள் வதம் செய்யப்பட்ட காட்சிகளை இங்கிலாந்து நாட்டின் சேனல் நான்கு ஒளிபரப்பி இருக்கிறது. எந்த ஊடகங்களும் இதைப் பற்றிய விவவரங்களை வெளியிடவில்லை இந்தியாவில். பத்தோடு சேர்ந்து இதுவும் ஒரு செய்தியாக சில சேனல்களில் படித்தார்கள். இந்த வார விகடனில் வெளியான கட்டுரையில் 'அந்தக் காட்சிகளை இங்கு இருக்கும் ஊடகங்கள் திரும்ப திரும்ப காட்ட, அது என்ன சாமியாரின் படுக்கை அறையா?' என்று இறுதியாக கேட்டிருந்தார் கட்டுரை ஆசிரியர். இதைப் பார்க்கும்பொழுது நமக்கு என்ன தேவை என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக ஊடகங்கள் மாறி வருகின்றன என்பதைத்தான் காட்டுகிறது. பெட்ரோலியப் பொருட்கள் செய்தி ஒன்று: கச்சா எண்ணெய் விலை குறைவால், மும்பை பங்குச் சந்தை ஐநூறு புள்ளிகள் ஒரே நாளில் ஏற்றம். செய்தி இரண்டு: கச்சா எண்ணெய் விலை உயர்வால், தத்தளித்த (!!) எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை ஈடு கட்ட நள்ளிரவு முதல் டீசல் மூன்று ரூபாயும், சிலிண்டர் ஐம்பது ரூபாயும் உயர்ந்தது. இதில் எது உண்மை.. ?? எது நடக்கிறதோ இல்லையோ இன்னும் விலைவாசி ஏறத்தான் போகிறது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் நாம் நம் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக...

எனது டைரியிலிருந்து - 3

தோற்ற மயக்கம் எஸ்.ஆர். இராஜாராம் (ஆனந்த விகடன்) துல்லிய நீர்ப்பரப்பில் துறவிபோல் வந்தமர்ந்து மெல்லிய தன் உடலை மேற்பரப்பில் பிரதியாக்கி தண்ணீரில் தவம் செய்யும்.. பார்ப்பதற்கு பரவசம்தான் மீனுக்குத்தானே தெரியும் கொக்கின் குரூரம். ============================================ துபாய் இ. இசாக் (ஆனந்த விகடன்) கனவுகளில் வந்து கொஞ்சுகிற முகத்தைக் காணப் போகிற மகிழ்ச்சி எனக்குள். ரசித்து ரசித்து வாங்கிய பொம்மைகளோடு காத்திருக்கிறேன் நெடுநேரமாக. வீடு நுழைந்த முகம் கண்டு தொட்டுக் கொஞ்சி மகிழ நெருங்கையில் 'யாரும்மா.. இவங்க?' என்கிறாள் மழலை மொழியில் என் மகள். ============================================ வதை ஜி. விஜயலெட்சுமி (ஆனந்த விகடன்) திருவிழாக் கூட்டத்தில் குழந்தையைத் தொலைத்துவிட்டு தவிக்கையில்.. சின்ன வயதில் வீட்டுத் தொழுவத்தில் தெருநாய் ஈன்ற குட்டிகளை கோணிப்பையில் திணித்து ஊருக்கு வெளியே கள்ளிக்காட்டில் கொண்டுபோய் விட்டதெல்லாம் நினைவுக்கு வருகிறது. ============================================ கவனம் சே. சதாசிவம் (ஆனந்த விகடன்) நகரும் தார்ச்சாலை இருபக்க மரங்கள் பசுமையான வயல்வெளிகள் முப்பரி...

என் கேமராவின் சிறைக்குள்..

Image
நாங்க எப்பவுமே அழகுதான் ( இடம் : மேட்டுப்பாளையம் ) எங்களப் பிடிச்சு கூண்டில் அடைச்சு ரசிக்கிற உலகம் ( இடம் : மேட்டுப்பாளையம் ) நாங்க இருக்கிற இடம் எப்பவும் இப்படி பசுமையா இருக்கும் ( இடம் : ஏற்காடு ) நாங்களும் பசுமைக்கு காரணம் ( இடம் : ஏற்காடு ) எவ்வ்ளோ உசரம் !! (இடம்: அவினாசி பெரிய கோவில்) வருசம் ஒரு தடவதான் இப்படி. (இடம்: அவினாசி தெப்ப தேர் திருவிழா) நாங்க எப்பவும் இப்படித்தான் , சிரிச்சுக்கிட்டே இருப்போம் . படங்கள் அனைத்தும் என் செல்போனில் எடுத்தவை.