Posts

Showing posts with the label தேவதேவன்

புல் வெளியில் ஒரு கல் - கவிஞர் தேவதேவன்

Image
காட்டுச் செடி காக்கை திருடி வைத்திருக்கும் வடையோ அதைப் பறிக்க நினைத்த நரியோ அல்ல மர்மமான துக்க இருள் நடுவே ஒரு காட்டுச் செடி தூய்மையின் வண்ணத்துடன் பூக்கிறது ஒரு சின்னஞ்சிறு தேன்மலர் ஆக மெல்லிய அதன் மணக் கைகள் தட்டுகின்றன எல்லோர் கதவையும் ************************* நீர்ப்பயம் நாய் கடிக்காது பார்த்துக்கொள் அதிலும் வெறிநாய் கடித்தால் பேராபத்து அந்த வெறிநாய் போலே ஊளையிட்டுத் திரிவாய் தண்ணீர் அருந்த இயலாது தொண்டை நரம்புகள் தெறிக்கும் அப்புறம் தண்ணீரைக் கண்டாலே அலறித் துடிப்பாய் மரணத்தில்தான் உனக்கு விடுதலை ஆகவே நாய்க்கு வரும் நோய்பற்றிக் கவலை கொள் நாய் பற்றிக் கவலை கொள் ************************* புல்வெளியில் ஒரு கல் புல்வெளி மீது சிறு குருவி வந்திறங்கித் தத்திய காட்சி, அழிந்து புல்வெளிமீது  ஒரு கல் இப்போது. மனிதச் சிறுவன் ஒருவனால் அந்தப் பறவை நோக்கி எறியப்பட்ட கல்லாயிருக்கலாம் அது. இப்...

மாற்றப்படாத வீடு - தேவதேவன்

கவிஞர் தேவதேவன் அவர்களின் 'மாற்றப்படாத வீடு' தொகுப்பிலிருந்து... இருள் ஓளி கேள்வி இருளுக்கு ஒளி பதிலானது எவ்விதம் ? இருளை உற்று நோக்க நோக்க இருளே ஒளியாயிற்று ஒளி நோக்கும் உந்தலற்று அற்று ஒளியே இருளாயிற்று. இவ்விதமே இருளும் ஒளியும் ஒன்றாகி பேரொளி. கேள்வியும் பதிலும் இணைந்து பெருவியப்பு. =================== துள்ளல் நீரின் மேற்பரப்பில் ஒரு மீன் துள்ளி விழுகையில் கண்டது கடும்பாறை. மீண்டும் துள்ளியதில் பறவையின் கொடுங்கால். மேலும் ஒரு துள்ளலில் மரணம் மரித்த கணமே பறவை. =================== அழைப்பு கடைசி மத்தாப்பும் உதிர்ந்து மரணம் என்னைச் சூழ.. உதிராத மத்தாப்புகள் கோடி ஏந்தி வானம் என்னை அழைக்கிறது..

விஷ்ணுபுரம் 2012 விருது விழாவில்..

Image
விஷ்ணுபுரம் விருது 2010 ல் எழுத்தாளர் ஆ.மாதவன் அவர்களுக்கும், 2011 ல் எழுத்தாளர் பூமணி அவர்களுக்கும் வழங்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டுக்கான விருது கவிஞர் தேவதேவன் அவர்களுக்கு, கடந்த சனிக்கிழமை(22/12/2012)  அன்று கோவையில் வழங்கப்பட்டது.  விழாவில் இசை ஞானி இளையராஜா கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார். அவரின் திரை இசையில் தோன்றிய பாடலான, 'மாசறு பொன்னே வருக..' பாடலுடன் விழா துவங்கியது. எங்கு இந்தப் பாட்டைக் கேட்டாலும், கொஞ்ச நாட்களுக்கு இந்தப் பாட்டை வாய் பாடிக் கொண்டே இருக்கும். அழகான இந்தப் பாட்டை, அழகாகப் பாடிய இரண்டு சிறுமிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். திரு. அரங்கசாமி அவர்கள் வரவேற்புரை வழங்க, எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கினார். இசை ஞானியை தான் முதன் முதலாக சந்தித்ததைப் பற்றியும், அதற்குப் பின்னர் அவரைப் பற்றியும் குறிப்பிட்டார் நாஞ்சில் நாடன். அவரின் உரையில், தேவதேவன் அவர்களின் இரண்டு கவிதைகளைப் பற்றிக் குறிப்பிட்டார். அதில் ஒன்று, கீழ்வரும் கவிதை; ஒரு கர்ப்பிணிப் பெண்ணை அவளின் தாயிடம் ஒப்படைப்பது போல உன்னை...