Posts

Showing posts from October, 2010

சின்னஞ்சிறு துளிகள் (31/10/2010)

விசுவின் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் ஒருவர் பள்ளிகளில் கழிப்பறை இல்லாததைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். தனியார் பள்ளியோ, அரசுப் பள்ளியோ முறையாக எந்தப் பள்ளிகளிலும் கழிவறை வசதிகள் இல்லை. அரசுப் பள்ளிகளில் இன்னும் கொடுமை. அதை அனுபவித்தவர்களுக்குத் தெரியும் அந்த நரகத்தைப் பற்றி. பசங்கள் கூட பரவாயில்லை, கொஞ்சம் பெரிய பெண்கள் எல்லாம் என்ன செய்வார்கள்?. எவ்வளவோ இலவசங்களை அள்ளி வழங்கும் அரசுகள் கொஞ்சம் கவனித்தால் நமது செல்வங்கள், பள்ளியில் ஒரு பிரச்சனையிலிருந்து தப்பி விடுவார்கள். ******************************** தன்னை பாதித்த சம்பவமாக ஆவணப் பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் ஆனந்த விகடனில்; "ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வைத்தியனாதபுரம் என்ற கிராமத்தில் குழந்தைத் தொழிலாளர்களுக்கான சிறப்புப் பள்ளி ஒன்று இயங்குகிறது. வெறும் பத்துக்குப் பத்து அறையில் ஒன்று முதல் ஆறு வகுப்பு வரையிலும் 25 மாணவர்கள் படிக்கின்றனர். எல்லோரும் ஒரே அறையில்தான் அமர்ந்திருக்க வேண்டும். ஒரு மேசை, நாற்காலி கூடக் கிடையாது. மிக மிகக் குறைந்த சம்பளத்தில் அந்தப் பள்ளியில் ஒரு பெண் ஆசிரியை வேலைக்கு அமர்த்தப்பட்டு இருக...

தலைவர்கள் வருகிறார்கள்..

Image
தேர்தலுக்கும் இடைத் தேர்தலுக்கும் வெள்ளம் வந்தாலும் தீ வைத்துக் கொண்டாலும் கட்சியினர் இல்லத் திருமணத்திற்கும் உதவிகள் வழங்கவும் கடைகள் திறப்பிற்கும் எங்கள் தலைவர்கள் அன்று ஒரு நாள் மட்டும் பார்க்க வருகிறார்கள் நோயுற்றிருக்கும் நோயாளியை பார்க்க வருவது போன்றும் மீதியுள்ள நாட்களை மறந்தும்.... ! { இது ஒரு மீள் பதிந்த பதிவு :) } நன்றி: புகைப்படம் கொடுத்த கூகிள் ஆண்டவருக்கு. --------------------------------------------------

நாடும், மக்களும் என்ன செய்வர்..

Image
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாட்டைப் பற்றி சில எண்ணங்கள் . இவர்கள் இப்படித்தான் , அவர்கள் அப்படித்தான் என நாமாகவே ஒரு முடிவுக்கு வருகிறோம் . அண்டை வீட்டுக்காரர்கள் முதல் அடுத்த நாட்டுக்காரன் வரை நமக்குள்ளாகவே ஒரு கற்பிதம் . இரண்டு வருடங்களுக்கு முன்னர் தன்னந் தனியாக ஒரு வெளிநாட்டில் போய் நான் இறங்கியபொழுது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது . இரண்டு பேருடன் நான் ஒரு வீட்டைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் . கூட இருந்த ஒரு பிரெஞ்ச் நண்பனும் , ஜெர்மன் தோழியும் சகலமும் சொல்லிக் கொடுத்தார்கள் . அடுப்பு பற்ற வைப்பது முதல் வீட்டைப் பூட்டுவது வரை ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுத்தார்கள் . சரியாக சொல்லப் போனால் மொழியோ , நாடோ அங்கே பிரச்சனையாக இல்லை . சக மனிதர்கள் மேல் உள்ள அக்கறை தான் , எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருக்கிறது . ஒவ்வொரு நாட்டுக்கும் வித்தியாசமான பண்பாடுகள் . இங்கே இருப்பதை அங்கேயும் , அங்கே இருப்பதை இங்கேயும் தேடினால் எப்படிக் கிடைக்கும் ?. நாடுகளின் அரசியல் தலைவர்கள் வேண்டுமானால் ஒரு சில நோக்கங்களோடு இருக்க...

ஒரு நாளிதழின் முன்பக்கம்

Image
பெரும் விளம்பரங்கள் அரசியலாளர்களின் அறிக்கைகள் நடிகர்களின் விவாகரத்துச் செய்திகள் காதற் கொலைகள் போலிகளின் தரிசனங்கள் என முன்பக்கம் நிரம்பிய ஒரு நாளிதழில் ஒரு விவசாயியின் தற்கொலைச் செய்தி அவனின் மரணக் குழி போலவும் அவனின் வறுமை போலவும் எங்கோ ஒரு மூலையில் சிறு கட்டத்துக்குள்..

கவிதை எழுதாத நாள்

Image
துரோகத்தைச் சந்திக்காத நட்பை உணராத புன்னகை உதிர்க்காத புதியவை கற்காத காதலிக்கத் தோன்றாத குழந்தை முகம் பார்க்காத பூக்களின் வாசம் முகராத வெயிலின் தீண்டல் அறியாத காற்றின் உயிர் காணாத நாட்களெல்லாம் கவிதை எழுதாத நாளாகவே முடிகிறது ! படம் : இணையத்திலிருந்து - நன்றி. ================================

எல்லாம் யோசிக்கும் வேளையில்...

Image
புயலிலே ஒரு தோணி நாவலைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. எல்லாக் கதைகளையும் படமாக எடுத்து விட்டார்கள், ஒரு கதையும் கிடைப்பதில்லை எனப் பலர் சொல்லி நீங்கள் கேட்டிருக்கலாம். 1984 வருடத்தில் ந.முருகேசபாண்டியன் என்பவர் ப.சிங்காரம் அவர்களை நேர்கொண்டு பேசியுள்ளார். புயலிலே ஒரு தோணி புத்தகத்தில் இவர்களின் பேச்சு இடம் பெற்றுள்ளது. அந்தப் பேட்டியில் அவர் பேசியுள்ள சிலவற்றை இங்கே தருகிறேன்; "புயலிலே ஒரு தோணி நாவலைப் போட்டால் இன்னிக்கி யாரு காசு கொடுத்து வாங்கி படிப்பாங்க.. இங்க சீரியசாப் படிக்கிற வழக்கமே இல்லாம போச்சு. சீரியசா எழுதத்தான் எவ்வளவோ விசயமிருக்கு. இன்னக்கி நம்ம ஆளுக இல்லாத இடம் உலகத்தில் எங்க இருக்கு? ஆனால் போன இடத்துல என்ன இருக்குன்னு கூர்மையாப் பார்க்க மாட்டாங்க.. அப்படிப் பார்த்திருந்தாங்கன்னா இன்னக்கித் தமிழில ஏகப்பட்ட புத்தகம் வந்திருக்கும்... பாருங்க புயலிலே ஒரு தோணி நாவல்ல தோணில போறதப்பத்தி ஒரு இடம் வருது. அது நாங்க யுத்த நேரத்ல இந்தோனேஷியாவாலிருந்து மலேயாவுக்கு சரக்குகளோட போனதுதான். நாவல் எழுதறப்போ தோணுன சில சந்தேகங்களைக் கூட வந்தவங்க கிட்ட கேட்டேன். ஆமா போன...

பதேர் பாஞ்சாலி

Image
சின்ன வயதில் ஞாயிற்றுக் கிழமைகள் மாலையில் மட்டும் தமிழ் படம் போடுவார்கள். ஒரு சில வீடுகளில் மட்டும்தான் தொலைக்காட்சிப் பெட்டி வைத்திருந்தார்கள். அதுவும் ரொம்ப தூரம் தள்ளி உள்ள வீட்டுக்குச் சென்றுதான் பார்க்க முடியும். சில ஞாயிற்றுக் கிழமை மதியங்களில் வேற்று மொழிப் படங்களைப் போடுவார்கள். அதில் தமிழ்ப் படங்களும் ஒவ்வொரு நாள் வரும். தமிழ் படம் போடுவார்கள் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்த ஒரு மதிய நேரத்தில்தான் 'பதேர் பாஞ்சாலியைத்' திரையிட்டார்கள். அந்தச் சின்ன வயதில் கருப்பு வெள்ளையில், மொழி புரியாத படமாக இருந்த இப்படத்தில் ஒரு சில காட்சிகள் கடந்த பின்னர் பிடிக்காமல் வீட்டுக்கு ஓடி வந்து விட்டேன். ஒரு கிராமத்தில் நடக்கும் கதைதான் பதேர் பாஞ்சாலி. மேல் மாடத்தில் இருந்து துளசியை வணங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண்மணி, அவளின் தோட்டத்திலிருந்து ஒரு சிறுமி கொய்யாவைப் பறித்துக் கொண்டு போவதைப் பார்த்துக் கத்துகிறாள். அந்தச் சிறுமிதான் துர்கா. எதிரே ஒரு பெண்(ஜெயா) வருவதைக் கண்ட துர்கா ஒளிந்து கொண்டு, அவள் போனதும் வீட்டுக்குப் போகிறாள். வீட்டுக்கு வந்த துர்கா கொய்யாவை ஒரு பாத்திரத்தில் போ...

குழந்தைகளுக்கு குழந்தைகளை மட்டும் பிடிக்கிறது !

Image
துளி கர்வமில்லை தேக்கி வைத்த புன்னகை எப்போதும் வழியும் அவர்களுக்கான உலகில் அறிவாளிகளை விட கோமாளிகளே அதிகம் சிடுமூஞ்சிகளை விட சிரிக்கும் முகமே அதி விருப்பம் தத்துவங்களை விட தத்துபித்துகள் கொஞ்சும் எனவேதான் குழந்தைகளுக்கு குழந்தைகளை மட்டும் பிடிக்கிறது !

நான் மந்தையிலிருந்து விலகிப் பிரிந்தவன் !

கவிதை போல் அமைந்த வரிகள் ப . சிங்காரம் அவர்கள் எழுதியுள்ள ' புயலிலே ஒரு தோணி ' நாவலில் விரவிக் கிடக்கின்றன . வரிகளை மடக்கி அதைக் கவிதை என வாசிக்கும் சூழலில் , கவிதை போன்ற வரிகளை பத்தியாக எழுதியுள்ளார் ப . சிங்காரம் . இதோ ஒரு சில வரிகள் ; (இந்த வரிகள் நாவலில் பத்தியாகவே இருக்கிறது. புத்தகத்தின் முன் அட்டையில் இவ்வாறு அச்சிட்டுள்ளார்கள்.) காரளகப் பெண் சிகாமணியே! நான் மந்தையிலிருந்து விலகிப் பிரிந்த ஓடுகாலி. பிரிந்ததால் மந்தையின் வெறுப்புக்கும், பிரிய நேர்ந்ததால் தன் வெறுப்புக்கும் உள்ளாகி, இந்தப் பரந்த வையகத்தில் காலூன்ற இடமின்றி, ஒட்டிப்பற்ற ஈரப்பசை காணாமல் தன்னந்தனியனாய் அலைந்து திரிகிறேன்; அலைந்தலைந்தே திரிவேன்; அலைந்தலைந்து திரிந்தே அழிவேன். கன்னற்சுவை மொழி மின்னிடையாய் ! உன் திரண்டுருண்ட மார்பிலே என்னைச் சயனித்து, உன் சேலொத்த விழியிலே என்னைக் கண்ணுற்று, உன் பாலொத்த மொழியிலே என்னைச் செவியுற்று, உன்னை அறிவதால் என்னை மறக்கிறேன். ஆகவே, உன் உடலணைப்பில் இருக்குங்காறும் சங்க நிதி பதும நிதி இரண்டும் வேண்டேன் ! கங்கை வார்சடை கரந்தான் அருளும் வேண்டேன்! எனினும்...

ஓர் இலையின் பயோடேட்டா

Image
ஓர் இலையின் பயோடேட்டா இது. பெயர் : இலை தாய் - தகப்பன் : மரம் நிறம் : பச்சை வசிப்பிடம் : எல்லா இடங்களிலும் தொழில் : மனிதன் சுவாசிக்க பிராண வாயு உற்பத்தி தொழில் ஓய்வு : மரத்திலிருந்து உதிரும் வரை பிடித்தவர்கள் : மரம் வளர்ப்பவர்கள் பிடிக்காதவர்கள் : மரம் வெட்டும் முதலாளிகள் சிறப்பு இயல்பு 1 : நிழல் தருவது சிறப்பு இயல்பு 2 : உதிர்ந்த பின்னும் உரமாவது [குறிப்பு: மேலே உள்ள புகைப்படம் என் கைப்பேசியில் எடுத்தது.]

துக்கம் மறையும் இரவு

Image
இரவுக்கு ஆயிரம் கண்கள் என்று ஒரு வழக்கு உண்டு. ஆயிரம் கண்கள் இருக்கிறதோ இல்லையோ, இரவு என்பது நாம் இளைப்பாற ஏற்பட்டது என்றுதான் எனக்குப் படுகிறது. காலை எழுந்தவுடன் விழித்த கண்கள் ஓய்வை நோக்கி காத்திருக்கும் நேரம் இரவு. உடல் மனம் என அனைத்தும் ஓய்வெடுத்து அடுத்த நாளுக்கு தயாராவதும் இரவில்தான். எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் உப பாண்டவம் நாவலில் ' எல்லாருடைய துக்கத்தையும் மறக்கச் செய்யும் இரவு ' என்று சொல்லியிருப்பார். ஆம், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு வேதனைகள், பிரச்சனைகள், சங்கடங்கள் அவை எல்லாவற்றையும் மறந்து போகச் செய்யும் ஆற்றல் இரவுக்கு உண்டு. நிசப்தமான இரவுகளில் அலைந்து கொண்டிருக்கும் நபர்கள், நெடுஞ்சாலையில் கனரக வண்டியை செலுத்திக் கொண்டிருப்பவர்கள், அயல் நாட்டு நேரத்தில் வேலை செய்யும் உள்ளூர் நண்பர்கள், உறவுகளை இழந்து வாடுபவர்கள் என எல்லோரையும் இரவு தன் வலிய கரங்களால் அணைத்துக் கொண்டிருக்கிறது. எண்ணிப் பார்த்தால் துக்கத்துக்கும் தூக்கத்துக்கும் ஒரு 'கால்' தான் வித்தியாசம். துக்கம் - தூக்கம். இரவில் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு எதாவது செய்து கொண்டிருந்தாலும் தூக்கம் ந...