Posts

Showing posts from April, 2013

இரை விழுங்கும் பல்லிகள்

அதிகாலையில் அடுத்த அறைக்குச் செல்ல மின் விளக்கு பொத்தானை அழுத்தினேன். அறையில் ஏதோ ஒரு பக்கம் பதுங்கி இருந்த கரப்பான் பூச்சி ஒன்று காலுக்கடியில் ஓடியது. பெரியதும் இல்லை, ரொம்ப சின்ன பூச்சியும் இல்லை. என் காலைக் கடந்து அது மூலைக்கு ஓடியது. அங்கே ஒரு பல்லி இருப்பது அதுக்கு தெரியவில்லை போலும். அந்தப் பல்லியும் சின்னதுதான். பதுங்கி இருந்த பல்லி, அந்த கரப்பான் பூச்சியின் தலையைப் பிடித்துக் கொண்டது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கத் தொடங்கியது. இரண்டொரு நிமிடத்தில், மொத்தமும் பல்லியின் வயிற்றுக்குள் சென்று விட்டது. பல்லி வீங்கிய வயிற்றுடன் சுவர் மேலே ஏறி விட்டது.  இந்தப் பல்லி என்று இல்லை. சில வருடங்களுக்கு முன், ஒரு பெரிய மலைப்பாம்பு, ஒரு மானை விழுங்குவதைப் பார்க்க நேர்ந்தது. அப்படியே இறுக்கி பிடித்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே போனது மான். பாம்பு இறுக்கிப் பிடிக்கும் வேகத்தில், மானின் எலும்புகள் உடைந்து எளிதாக உள்ளே போய் விடும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நம்மைப் போல தொலைக்காட்சி பார்த்துக்கொண்டோ, ஒரு நாளைக்கு மூன்று வேளை என்றோ அவைகளுக்கு வாய்க...

ஒரு வனதேவதையின் உக்கிரம்

Image
ஆதியில் தண் பசுமையும் குளிர் காற்றும் பட்சிகளின் வாழ்வும் பகலவனின் ஒளி புகாத கானகத்தினுள் ஒரு வேம்பினடியில் மடித்து வைத்த பாதங்களோடு அமர்ந்து சாந்தம் கொண்டிருந்தேன். கொடும் கரம் கொண்டு பசுமையழித்து கரும் நிறம் கொண்ட சாலைகள் போட்டு என்னை ஒரு நாற் சுவருக்குள் அடைத்தது ஒரு கூட்டம். தூக்கிய காலும் வெறித்த பார்வையுமாய் மாறிப்போன எனக்கு தினந்தோறும் பூசைகள் பலிகல்லில் வடிக்கப்பட்ட குருதி தெளிக்கப்பட்ட பன்னீர், வாடிய மாலைகள் என எதுவும் பிரியமில்லை. அறிந்துகொள்ளுங்கள் மக்களே நான் இன்னும் சாந்தம் கொள்ளவில்லை எனக்கு ஒரு கானகம் வேண்டும். படங்கள் : இணையத்திலிருந்து.

சினிமா - மாடர்ன் டைம்ஸ் (Modern Times)

Image
சென்னை, திருப்பூர் போன்ற நகரங்களில் காலை நேரங்களில் (உங்களுக்கு நேரமிருந்தால் !) சாலைகளை உற்றுப் பாருங்கள். வேகமாக மக்கள் ஓடிக் கொண்டிருப்பார்கள். கொஞ்சம் தாமதித்தால் முதலாளிகள் அல்லது மேலாளர்களிடம் திட்டு கிடைக்கும். எனவே அந்த தாமதம் தவிர்க்க பேருந்திலும், இரு சக்கர வாகனங்களிலும், சென்னை போன்ற ஊர்களில் மின்சார ரயில்களிலும் மக்கள் பறந்து கொண்டே இருக்கிறார்கள். அதுவும் காலையும், மாலையும் சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் மக்கள் அடித்துக் கொண்டு ஓடும் பொழுது நமக்கு வாழ்க்கை பற்றிய பயம் தானாகவே வரும். ஒரு நாளில் இது முடிந்து விடப் போவதில்லை, தினமும் உணவு வேண்டும். அப்படி அரக்கப் பறக்க ஓடும் மனிதனின் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் பட்டினியில் கிடக்க கூடும். நோய் தீர மருத்துவ மனைக்கு கூட்டிச் செல்ல வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் இவன் (இவள்) மட்டும் சம்பாதித்துக் கொண்டிருக்கலாம். கூடுதலான வீட்டு வாடகை கொடுக்க சிரமப் பட்டுக் கொண்டிருக்கலாம். ஆசையாக குழந்தை கேட்ட தின்பண்டமோ அல்லது துணியோ வாங்க ஓடிக் கொண்டிருக்கலாம். ஆக, இத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு வேலை மற்றும் அதன்...

தொலைந்த எழுத்து

வெகு நாளாக புரட்டாத புத்தகத்தில் ஒரு பூச்சி உயிர் விட்டிருந்தது... உயிர் விட்டிருந்த பக்கத்தில் ஓர் எழுத்தை மறைத்து கிடந்தது.. பூச்சியை எடுத்த பின் அவ்விடத்தில் இருந்த எழுத்தும் காணவில்லை... எந்த எழுத்தை போட்டும் அவ்வாக்கியத்தை நிரப்ப முடியவில்லை அதன் உயிரைப் போல.. குறிப்பு: முன்னரே இத்தளத்தில் பதிந்த கவிதை.  

மஞ்சள் நீராட்டு

மு தன் முதலாக, மாரியம்மன் கோவில் திருவிழாவன்று சந்திரா அத்தையை புதிதாகப் பார்ப்பவர்கள் ஒரு மாதிரியாகத்தான் பார்ப்பார்கள். ஐம்பது வயதாகியும், சின்னஞ் சிறுசுகளுடன் சேர்ந்து கொண்டு மஞ்சள் தண்ணி சொம்பை தூக்கி எல்லோர் மேலும் ஊற்றும் அத்தையை அவர்கள் அப்படிப் பார்ப்பதில் தப்பொன்றும் இல்லை. ஊரில் உள்ளவர்கள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். பழகிப் போனது கூட ஒரு காரணமாக இருக்கலாம். பெண்கள் ஆண்களையும், ஆண்கள் பெண்களையும் துரத்திக் கொண்டு இருக்க, எந்த பேதமும் இல்லாமல் கிடைத்தவர்கள் எல்லோர் மேலும் தண்ணி ஊத்திக் கொண்டிருக்கும் அத்தை. சாமி நெரமனை எடுத்து வரும்போது முதலில் மஞ்ச தண்ணியை யாரோ ஒருவர் மேல் ஊற்றி ஆரம்பித்து வைப்பதும் சந்திரா அத்தை தான். திருவிழா ஆரம்பித்து, முடியும் அந்த ஒருவார காலத்தில் சந்திரா அத்தை அவ்வளவு அழகாக இருப்பாள். தினமும் தலைக்கு குளித்து, சிறு கதம்பத்தை வைத்துகொண்டு, மங்களகரமாக கோவிலையே சுத்தி வருவாள். சந்திரா அத்தை இப்படி இருப்பதை ஊர்க்காரர்கள் பார்த்தால்,  'இப்படியாவது அவ சந்தோச பட்டுக்கட்டும்'  என்று...