Posts

Showing posts from January, 2011

சிறு துளிகள் (31/01/2011)

விழுதுகள் மையத்தில்... இந்த வாரம் ஒரு மாலை வேளையில், எங்கள் விழுதுகள் அமைப்பினால் நடக்கும் ஒரு மையத்துக்குச் சென்றிருந்தேன். வாரமொரு முறை நடக்கும் பிரார்த்தனையில், தெரிந்தவர்கள் யாருக்கேனும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களுக்காக வேண்டுவது வழக்கம். இந்த வாரம், ஒவ்வொரு மாணாவராகத் தங்கள் பாட்டி, தாத்தா, அம்மா என உடல் நிலை சரியில்லாதவர்கள் பெயர்களைச் சொன்னார்கள். அதில் ஒரு மாணவன், "சார்.. என்னோட அக்காவுக்கு கையில காயம் சார்.." என்றான். "ஏன்.. என்னாச்சு".. என்றோம். "கையில் அரிவாள் பட்டிருசுங்க சார்.." என்றான். "அருவாளா? கையில எப்படி பட்டுச்சு" கொஞ்சம் தயங்கி "சார்.. வீட்ல அம்மாவுக்கும். அப்பாவுக்கும் சண்டை சார். அப்பா, அருவாளா எடுத்துட்டு அம்மாவா அடிக்க வர, அக்கா நடுவுல பூந்து கையில காயம் ஆயிருச்சு சார்.." என்று எங்கள் கண்களையே பார்த்தான். வேறு ஒன்றும் பேச இயலாதவராய், "சரிப்பா.. உங்க அக்கா பேரச் சொல்லு" என்றோம். பெரிய குடும்பமோ (உதாரணதுக்கு நடிகர் விஜயகுமார் பேரன்), அல்லது இந்த மாதிரி ஒரு கிராமத்துக் குடும்பமோ பெற்றோர்களின் சண்ட...

உயர் ரகம்

புசுபுசுவென்ற முடிக் கற்றைகள் இல்லையெனில் முடி இல்லாமல் பிறந்து ஒரு வாரம் என்றாலும் பத்து, இருபது ஆயிரங்களில் விலை உயரம், எடை, உணவு என்று நாட்டு இனங்களை விட வித்தியாசங்கள் நிறைந்தவை... எனினும் நெடுஞ்சாலை கனரக வாகனங்களில் தவறியும் அடிபடுவதில்லை கூண்டில் அடைபட்ட உயர் ரகங்கள். நாட்டு நாய்களைப் போல்..

கடைத்தெருவின் கலைஞன்

Image
திரு.ஜெயமோகன் அவர்களின், ஆ.மாதவன் புனைவுலகு பற்றிய 'கடைத்தெருவின் கலைஞன்' படித்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் புத்தகத்தில் இருக்கும் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். திரு.ஆ.மாதவனிடம் ஜெயமோகன் பேசிக் கொண்டிருக்கும்போது, மாதவன் அவர்கள் சொல்லுவதாக; 'நாம கண்ணுக்குப் பட்டதை அப்டியே எழுத நினைக்கிற ஆளு. நாம நினைகப்பட்டதுக்கு யதார்த்தத்திலே எடமில்லை. வாழ்க்கை கண்ணு முன்னாலே ஓடிட்டு இருக்கு' என்றார். 'அதோ பார்த்தீங்களா?' என்று ஒருவரைக் காட்டினார். ஒரு ஆசாமி சபரிமலை பக்தர் கோலத்தில் சென்று கொண்டிருந்தார். 'அய்யப்பனாக்கும். விஷூவுக்கு மலைக்குப் போக மாலை போட்டிருக்கான். இந்த சாலைத் தெருவிலே பேரு கேட்ட கேடி. மூணு சீட்டும் முடிச்சவுப்பும் ஜோலி. குடி கூத்தி எல்லாம் உண்டு. மாசத்திலே எட்டு நாள் லாக்கப்பிலே உறக்கம். எடைக்கிடைக்கு ஜெயிலுக்கும் போவான். நாலஞ்சாளை குத்தியிருக்கான். ஆனா இப்பம் பார்த்தேளா... இந்தக் கோலம் சத்யமாக்கும். உண்மையிலேயே மன்சலிஞ்சுதான் மலைக்குப் போறான். பெரிய பக்திமான். இதை நாம் எப்படி புரிஞ்சுக்கிட முடியும்?. நாம இதைப் பதிவு பண்ணி வைக்கலாம். வாசகர்க...

காதல் செய்வீர் உலகத்தீரே ! - 3

Image
அல்லும் பகலும் காதொற்றி பேசுபவர் செல்போன் காதலர் ஆவர். ====================== அள்ளித் தீராத சமுத்திரம் போல் சொல்லித் தீராதது காதல். ====================== கவிதையில் காதலைப் பகிர்ந்த தருணத்தில் புவியில் யாவும் அழகாகும். ====================== படம் : இணையத்தில் இருந்து (http://thesituationist.wordpress.com/2008/02/10/crazy-little-thing-called-love-2/) - நன்றி.

சர்க்கரைப் பொங்கல்

Image
செவுரு முச்சூடும் சுண்ணாம்பு பூசி வாசத் தொரவெல்லாம் சாணி வளிச்சு பெரிய பாத்திரங்கள வெளக்கி ஊரே பொங்கலை எதிர் பாத்துட்டு இருக்க... "இந்த வருசமும் மகன் வரல.. லெட்டர் போட்டிருக்கான்.. " அப்படின்னு பக்கத்துக்கு வூட்டு லெட்சுமியிடம் பொலம்பறாங்க கண்ணம்மா பாட்டி.. உள்ளிருந்து கண்ணம்மா தாத்தா "இந்த வருசமும் வெள்ளைப் பொங்கலே போதும் சர்க்கரைப் பொங்கல் வேண்டாம்" என்று கத்திக் கொண்டிருக்கிறார்.. ******************************** அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ..

ஒரு கூடு

அந்த காலை நேரத்தில் சென்ட்ரலில் இருந்து நுங்கம்பாக்கம் ஸ்டேசனில் இறங்கிய போது நகரம் கொஞ்சம் தான் விழித்திருந்தது. கண்ணனுக்கு செல்லில் கூப்பிட்டேன். வந்து கொண்டிருப்பதாகவும், மேல் படி ஏறி பிள்ளையார் கோவில் பக்கத்தில் நிற்கச் சொன்னான். சென்னை, தி நகரில் ஒரு வேலைக்கான இன்டர்வியு இருப்பதால் ஊரிலிருந்து நேற்று இரவு ரயிலேறினேன். முன்னமே சென்னை வந்தால், 'ரூமுக்கு வாடா' என்று சொல்லி இருந்தான் கண்ணன். நேற்றிரவே அவனிடம் பேசி நான் வருவதை அவனிடம் சொல்லிவிட்டேன். மற்ற நண்பர்கள் இருந்தாலும், இண்டர்வியுவுக்குப் போவதற்குப் பக்கமாக இருக்கும் என்றுதான் அவன் அறைக்கு வருவதாக சொன்னேன். அவனுக்காக நின்று கொண்டிருந்தேன். அதோ வந்து விட்டான். "எப்படிடா இருக்க.. ஊர்ல எல்லாரும் எப்படி இருக்காங்க.. வேலை எப்படிப் போகுது.. " என இருவரும் பரஸ்பரக் கேள்விகளை அடுக்கிப் பதிலைப் பெறலானோம். ரொம்ப தூரம் நடந்து கொண்டிருந்தோம். "என்னடா.. ஊரைச் சுத்திக் காட்டுறியா.. ரூம் எங்கடா.." என்றேன். "இதென்ன.. வந்தாச்சு" என்று பக்கத்தில் இருந்த நான்கடுக்கு மேன்சன் கட்டிடத்தைக் காட்டினான். மேன்சன் என...

விடுமுறை தினத்தில்

Image
விடுமுறை தினங்களில் முகச்சவரமோ அல்லது முடி பின்னலோ தேவையில்லை சூடான சமையலை உள்ளே திணிக்கும் அவசரம் இல்லை பறக்கும் சாலைகளில் கசங்கிச் செல்ல வேண்டியதில்லை சுடு டப்பா உணவு மதியத்துக்கு தேவையில்லை... எல்லாவற்றையும் விட அலுவலகத்தில் உள்ளே குமைந்து கொண்டு வெளியே செயற்கையாக புன்னகைக்க வேண்டியதில்லை... படம் : இணையத்தில் இருந்து .. நன்றி ...

பாலிதீன் என்னும் பிசாசு..

Image
பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களால் சுற்றுச் சூழல் அழிந்து கொண்டே வருகிறது. எந்தப் பொருள் வாங்கினாலும் கூடவே ஒரு பாலிதீன் பையைக் கொடுத்து விடுகிறார்கள் கடைக்காரர்கள். அப்படி அவர்கள் கொடுக்கவில்லை என்றாலும் கேட்டு வாங்குபவர்கள் நிறையப் பேர். இதில் திரும்ப பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் கொஞ்சமே, பெரும்பாலும் தரமில்லாத பிளாஸ்டிக் பொருட்களே நம்மை வந்தடைகிறது. முன்னொரு காலத்தில் எல்லாம் வீட்டில் இருந்து பாத்திரங்களைக் கொண்டு போய் இட்லி, சட்னி, சாம்பார் என வாங்கி வருவார்கள். எண்ணெய் வாங்க வேண்டுமென்றால் வீட்டில் இருந்து பாட்டில்களை கொண்டு போய் வாங்கி வருவார்கள். இப்பொழுது எல்லாமே கவர்களில். கடைக்கு கையை வீசிக் கொண்டு போய்விட்டு, வரும்போது இரு கை நிறைய பாலிதீன் பைகளை சுமந்து கொண்டு வருகிறோம். சில வருடமாக, டீக் கடைகளில் கொதிக்க கொதிக்க டீயை பாலிதீன் கவர்களில் ஊத்தி தருகிறார்கள். ஒவ்வொரு வீதிகளின் குப்பை போடும் இடத்தில் பரந்து கிடக்கும் பாலிதீன் பைகள் எத்தனை. குப்பை வண்டிகள் அள்ளிக் கொண்டு போனாலும் அவர்களும் ஒரு இடத்தில் கொட்டித்தானே வைப்பார்கள். அதுவும் நாம் வாழும் பூமியின் ...

காதல் செய்வீர் உலகத்தீரே ! - 2

உனது கைப்பேசிக்கு அழைத்தால் முதலில் ஏதோ ஒரு இசை கேட்கிறது.. நீ பேச ஆரம்பித்த பின்னர்தான் மெல்லிசை கேட்கிறது.. ******************************* சுருட்டிப் போட்ட பழைய போர்வையாய் நடந்து கிடக்கிறேன் சாலைகளில் ஒரு நாளேனும் திரும்பி புன்னகை பூத்து விட்டுப் போ. அன்று முதல் நான் பறக்க ஆரம்பிப்பேன் ..