Posts

Showing posts with the label தமிழ் பாடல்

சிறுநுரை போல...

காமந் தாங்குமதி யென்பேர் தாமஃ தறியுநர் கொல்லோ வனைமது கையர்கொல் யாமெங் காதலர்க் காணே மாயிற் செறிதுளி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் கல்பொரு சிறுநுரை போல மெல்ல மெல்ல இல்லா குதுமே. (குறுந்தொகை, கல்பொரு சிறுநுரையார்) *************** பிரிவை தாங்கிக்கொள் என்பவர்கள் தாங்கள் அதை அறிந்தவர்கள்தானா ? அத்தனை வல்லமை உடையவர்களா ? நான் என் தலைவனை காணேன் என்றால் துயர் நிரம்பிய நெஞ்சத்துடன் நீர்விரிவிலிருந்து வந்து கல்லில் மோதி மறையும் சிறுநுரை போல் மெல்ல மெல்ல இல்லாமலாவேன். - ஜெயமோகன், சங்க சித்திரங்கள்

மனம் எனும் தோணி

வாழ்க்கை - நாம் வாழ்வது. வாழ்வைப் பற்றிப் பேசும்பொழுது பெரும்பான்மையான கவிஞர்கள், படகோடு ஒப்பிடுவார்கள். கணியன் பூங்குன்றனார், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடலில், 'நீர்வழிப் படூம் புனை போல்' எனச் சொல்கிறார். 'வாழ்க்கை என்னும் ஓடம்.. வழங்குகின்ற பாடம்..' என்று கே.பி. சுந்தராம்பாள் அவர்கள் பாடிய பாடலையும் கேட்டு இருக்கிறோம். திருநாவுக்கரசர் பாடிய கீழ்க்கண்ட பாடல், பள்ளியில் படிக்கும்பொழுது மனப்பாடச் செய்யுளாக இருந்தது. இது ஒரு பக்திப் பாடலாக இருந்தாலும், சொல்லப்பட்ட உவமைகளும், பொருளும் என்னைக் கவர்ந்தவை. மனமெனும் தோணி பற்றி மதியெனுங் கோலை ஊன்றிச் சினமெனும் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது மதனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா உனையுனு முணர்வை நல்கா யொற்றியூர் உடைய கோவே. பாடல் பொருள் எளிதில் விளங்கக் கூடியதே. "மனம் என்ற தோணியில், மதி எனும் துடுப்பைக் கொண்டு, சினம் என்ற சரக்கை ஏற்றி இந்த வாழ்க்கை எனும் கடலில் ஓடும்போது, ஆசைகள்(பற்றுகள்) எனும் பாறையில் மோதி, நினைவிழக்கும் பொழுது உன்னை நினைக்கும் உணர்வைத் தருவாய்... ஒற்றியூர் ப...