தாத்தா வீடு
தக்க ஊதியம் கிட்டாததற்க்கும் எப்பொழுதும் பற்றாக்குறையில் ஓடிய தின வாழ்வுக்கும் காரணம் இது பாட்டன் வீடாம்... பாட்டன் வீட்டில் மகன் இருக்கலாம் பேரனுக்கு ஆகாதெனச் சொல்லிக் கொண்டிருக்கிறான் கட்டம் போட்டு குறி சொல்லியவன். மங்கிப் போன புகைப்படத்தில் கையில் கைத்தடியுடன் அந்தக் கட்டங்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் தாத்தா..