Showing posts with label பாடல். Show all posts
Showing posts with label பாடல். Show all posts

Monday, January 7, 2013

ஆக்காட்டி.. ஆக்காட்டி..

'தவமாய் தவமிருந்து' படத்தில் இடம்பெற்ற பாடலான 'ஆக்காட்டி..' பாடல்,  ஓர் அற்புதம். படம் வெளியாகும் முன்னரே, நண்பன் ஒருவன் திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்தான். ஒரு ஒப்பாரி போல இருக்கும் இந்தப் பாட்டை அவன் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தான். நாங்கள் அவனை ஒரு மாதிரியாகப் பார்க்க, 'இந்தப் பாட்டை நல்லாக் கேளு.. அந்த வார்த்தைகளோட..' என்றான். பிறகு தான் நாங்கள் அந்தப் பாட்டை உன்னிப்பாக கேட்க ஆரம்பித்தோம். பாடல் முடிந்தவுடன், அதிலும் குறிப்பாக 'வலை என்ன பெருங் கனமா?' என்று முடியும்போது மனதை உலுக்க ஆரம்பித்து விட்டது.  

'வலியும் வேதனையும் வலையோடு போயிருச்சு..' என்று இந்தப் பாடல் முடியும்போதெல்லாம் ஒரு புதிய நம்பிக்கை உதிக்கும் மனதில். திரையில் இந்தப் பாடலும், காட்சிகளும் இடம் பெறவில்லை.

ஒரு குருவி, தன் குஞ்சுகளுக்கு இரை தேடிப்  போகும்போது, வலையில் மாட்டிக் கொண்டு விடுகிறது. அதிலிருந்து தப்பித்து வெளிவருவதை நடித்துக் காட்டுவார்கள் படத்தில். 

இது குருவிகளின் கதை மட்டும் அல்ல, நாள்தோறும் அல்லல் படும் மனிதர்கள் பற்றியும் தான்.  இங்கு போராடாமல் எதுவுமே கிடைப்பதில்லை, உயிர் வாழ்தல் கூட.






Wednesday, July 20, 2011

நின்னைச் சரணடைந்தேன்

நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்
பொன்னை உயர்வை புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று...
துன்பமினியில்லை.. சோர்வில்லை.. தோற்பில்லை..



உச்சி தனை முகர்ந்தால்
கர்வம் ஓங்கி வளருதடி
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடி





பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா
நின்றன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா
நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா




போனதெல்லாம் கனவினைப் போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஒரு கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ ? - அங்கு
குணங்களும் பொய்களோ

காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ