ஜோசியம்
" எட்டாமிடத்தில் சனி இருக்க துன்பம் போகுமப்பா நாலாமிடத்தில் செவ்வாய் இருக்க " எனப் பாடிக் கொண்டே சென்றார் ஜோசியர் . அவருடைய பேர் என்னவென்றே எனக்கு தெரியாது . ஆனால் ஜோசியர் என்றால் ஊருக்கே தெரியும் . சுற்றி உட்கார்ந்து இருந்த அனைவரும் அவரையே உற்று பார்த்து கொண்டிருந்தோம் . கணீரென்ற குரல் , வயதாகி விட்டதால் சற்று பிசிறடித்தது . கிருபானந்த வாரியாருக்கு அண்ணன் போலிருப்பார் . நான் பார்த்த முதல் சுருட்டு பிடித்தவர் இவர்தான் . பக்கத்தில் போனாலே சுருட்டு வாசம் வீசும் . மனைவி மகன் இல்லாததால் தனியாகத்தான் இருந்தார் . அவராகவே சமைத்து கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தார் . பக்கத்துக்கு ஊரில் இருந்தெல்லாம் சிலர் வந்து ஜோசியம் கேட்டு விட்டு போவார்கள் . ஒரு சிலர் , பைக்கில் உட்கார வைத்து வீட்டுக்கே கூட்டிபோய் ஜோசியம் பார்த்துவிட்டு திரும்ப கொண்டு வந்து விடுவார்கள் . எங்கள் வீட்டுக்கு மாமா அத்தை மற்றும் சில சொந்த காரர்கள் வந்தால் ஜோசியம் பார்க்க வேண்டும் என்பார்கள் . உடனே என்னை அவருடைய வீட்டுக்கு அனுப்பி , அவரை ...