அரசு இயந்திரங்கள்
பிறப்பு சான்றிதழ் , சாதி சான்றிதழ் , ரேஷன் கார்டு மற்றும் பிற தேவைகளுக்காக நாம் அணுகுவது அரசு அலுவலகங்களை . நமக்காக அவர்கள் வேலை செய்ய வேண்டும் என்றுதான் அரசாங்கங்கள் சொல்லுகின்றன . ஒரு வேலை நிமித்தமாக நேற்று ஒரு அரசு அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது . அங்கே நடந்தவை இங்கு : - நான் பார்க்க வேண்டிய அலுவலர் இன்னும் வரவில்லை . நேரம் 10:15 - இன்னொரு அலுவலர் வந்தார் . இரண்டு ஊது பத்திகளை பற்ற வைத்து அறை முழுவதும் காட்டி விட்டு அவரின் இருக்கையில் அமர்ந்தார் . - ஒரு ஏழை பெண்மணி எதுவோ அவரிடம் கேட்க , ' எத்தன தடவ சொல்லுறது ... இன்னும் ஒரு வாரம் கழித்து வா .. ' என்றார் . - ஒருவர் ஓரமாய் நின்று கொண்டிருந்தார் . சரி , நம்மை போல அவரும் யாரோ ஒருவருக்காக வெயிட் பண்ணுகிறார் என்று நினைத்திருந்தேன் . ஒரு பத்து நிமிடம் கழித்து , அரசு ஊழிய பெண்மணி ஒருவர் வந்தார் . அந்த அம்மாவை பார்த்ததும் குசலம் விசாரித்து விட்டு , கொண்டு வந்த விண்ணப்பத்தை காண்பித்தார் . இருவரும் உறவினர்களாக அல்லது தெரிந்தவர்களாக இருக்க வேண்டும...