Posts

Showing posts from February, 2013

நமது மாணவர்கள்

விஜய் தொலைக்காட்சியின் 'நீயா, நானா' - மாணவர்கள் - களப் பணியாளர்கள் என்ற நிகழ்ச்சி பற்றி எழுத்தாளர் ஜெயமோகனின் இணைய தளத்தில் ( அசடுகளும் மகாஅசடுகளும் ) எழுதியிருந்தார். நானும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன். மாணவர்களைப் பார்த்து அவர்களின் சிரிப்பும், அந்தப் பார்வையும்..  இவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்ற பேச்சும்... . கொடுமை. மாணவர்களுக்கு இந்தச் சமூகம் பற்றிய பிரக்ஞை இல்லை என்றால் அது யார் குற்றம்? மாணவர்களுக்கு, இந்த உலகம் பற்றி எதுவும் தெரியவில்லை என்றால், நாம் அதற்காக என்ன முயற்சி செய்தோம்?. அரசியலும், கல்வியும் பணத்தின் பிடியில் இருக்கும் போது, அதற்காக நாம் என்ன செய்தோம்? நாம் என்ன கற்றுக் கொடுத்தோமோ, அது தானே இங்கே இருக்கிறது. அவர்களின் தடுமாற்றத்தைப் பார்த்து நாமே சிரிப்பது, அவர்கள் நமது அடுத்த தலைமுறை, நம் குழந்தைகள் என்பது நமக்குத் தெரியாமல் போனதேன்.

தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன்

Image
தலைகீழ் விகிதங்கள் - நாவல் 'சொல்ல மறந்த கதை' யாக திரையில் பார்த்ததை விட, புத்தகத்தில் படிக்கும் பொழுது ஒவ்வொரு வரிகளாக அசை போட முடிந்தது. படம் நன்றாகவே எடுக்கப் பட்டிருந்தாலும், புத்தகத்தில் தான் அதன் உயிரோட்டத்தை அறிந்து கொள்ள முடிந்தது. ஒரே பத்தியை இரண்டு மூன்று முறை கூட திரும்ப திரும்பப்  படிக்கலாம். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் முதல் நாவலாக வெளிவந்தது இந்த தலைகீழ் விகிதங்கள். முன்பின் எந்த பழக்கமும் இல்லாத இருவர் மண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் பொழுது, அங்கே விட்டுக் கொடுத்தல்கள் இல்லை என்றாலோ, சரியான புரிதல் இல்லை என்றாலோ.. அவர்கள் இருவரின் வாழ்க்கையும் முள்ளில் பட்ட துணி போல மாட்டிக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கும். மருமகன் பெண் வீட்டாருக்கு புதியவன் என்றால், மருமகளோ மாப்பிள்ளை வீட்டாருக்கு புதியவளாக இருக்கிறாள். மாமியார் கொடுமை, நாத்தானார் கொடுமை என்றெல்லாம் மருமகள் பற்றி ஆயிரக் கணக்கில் கதைகள் எழுதப் பட்டாலும், ஒரு மருமகனின் கதையைச் சொல்லிச் செல்வது இந்த நாவல். ******************* மூன்று பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையுமாக இருக்கும...

ஆதலினால் காதல்..

உலகம் என்ன சொல்லும் என்கிறாய் உன்னையும் என்னையும் தவிர உலகத்தில் யாருமில்லை கண்ணே ! ********************************* உனது கைப்பேசிக்கு அழைத்தால் முதலில் ஏதோ ஒரு இசை கேட்கிறது.. நீ பேச ஆரம்பித்த பின்னர்தான் மெல்லிசை கேட்கிறது.. ******************************* நீ வெட்டி விலகிச் செல்லும் போதெல்லாம் வெட்ட வெட்ட மீண்டும் தழைக்கும் தாவரமென வளர்கிறது உன்மேலான என் பிரியம் ! ********************************* தென்றலாய் நடந்தாய் மணியாய் சிரித்தாய் தண் நிலவாய்ப் பார்த்தாய் ஒரு நாள் கவிதையாய்ப் பேசியபோதுதான் நான் கவிதை கிறுக்க ஆரம்பித்தேன் ! ********************************* சுருட்டிப் போட்ட பழைய போர்வையாய் நடந்து கிடக்கிறேன் சாலைகளில் ஒரு நாளேனும் திரும்பி புன்னகை பூத்து விட்டுப் போ. அன்று முதல் நான் பறக்க ஆரம்பிப்பேன் .. ********************************* அனைவரின் காலடித் தடங்களையும் உள் வாங்கிக் கொண்டு அமைதியாக கிடக்கும் கடற்கரை ஈர மணல் போல் நீ பேசிய சொற்களை அசைபோட்டுக் கொண்டே ஆழ்ந்து கிடக்கிறேன் ! (இந்தத் தளத்தில் நான் எழுதிய பழைய கவிதைகள் ! )

தி கோல்ட் ரஷ் (The Gold Rush - Charlie Chaplin)

Image
தங்கத்தைத் தேடி, கடுங் குளிர் என்று பாராமல், பனிப்புயல் அடிக்கும் அந்த மலை மீது மக்கள் ஏறிக் கொண்டே இருக்கிறார்கள். தப்பி பிழைத்து கொஞ்சம் தங்கத்தோடு வந்தால் ராஜ வாழ்வுதான். புயலில் மாட்டி அங்கேயே இறந்து போய்விடக் கூடிய சூழலும் உண்டு. அந்தக் கூட்டத்தில் ஒருவராக நம் சாப்ளின். பனி மலை மீது ஒரு கூடாரத்தில் சாப்ளின், பசியைப் பொறுக்காத பயில்வான் மாதிரி இருக்கும் ஜிம் என்பவனுடன் தங்கி இருக்கிறார். உண்பதற்கு உணவில்லாமல் காலில் அணிந்திருக்கும் ஷூவை வேகவைத்து அதன் தோலை சாப்பிடும் காட்சியை வாழ்நாளில் ஒரு முறையேனும் பார்க்க வேண்டும். ஒரு பெரிய விருந்தைச் சமைப்பது போல அந்த ஷூவைக் கையாள்வதும், அது வெந்த பின்னர் அதை எடுத்து போட இருக்கும் தட்டில் உள்ள சிறு தூசுகளை நன்றாகத் துடைப்பது ஆகட்டும், அதன் பின்னர் அதைச் சாப்பிடும் முறை ஆகட்டும்.. சாப்ளின் என்னும் மகா கலைஞனின் நடிப்பு நிற்கிறது. அதிலும், ஷூவில் இருக்கும் ஆணிகளை, ஏதோ எலும்பில் ஒட்டி இருக்கும் இறைச்சித் துணுக்குகளை சாப்பிடுவது போல, ஆணியில் ஒட்டி இருப்பவற்றை சாப்ளின் உண்ணும் பொழுது, அங்கே சாப்ளினை விட பசித்த ஒருவனே ந...

இயற்கையோடு கொஞ்சம் வாழ்ந்து பாருங்கள்...

Image
திரும்பிய பக்கமெல்லாம் கான்கிரீட் சுவர்களாய் இருக்கும் இந்த மாநகரங்களில் இயற்கையோடு வாழ முடியாதுதான். ஆனால் கொஞ்சம் முயன்றால் முடிந்த அளவு நம்மால் இயற்கையோடு ஒன்ற முடியும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் தவிர்த்து அனைவரும் செடி கொடிகள் வளர்க்கலாம். இடம் இல்லை என்பவர்கள் தொட்டியில் வளர்க்கலாம், மொட்டை மாடிகளில் வளர்க்கலாம். தேவை கொஞ்சம் அக்கறையும், ஈடுபாடும். சிறிய கிண்ணங்களில் தினமும் தண்ணீர் ஊற்றி வையுங்கள். மொட்டை மாடி கைப்பிடிச் சுவர்களில் வைப்பது நலம். நீங்கள் வைத்த முதல் நாளே பறவைகள் வந்து விடாது. கொஞ்ச நாட்கள் பழகிய பின்னரே, அவைகள் தொடர்ந்து வரும். எங்கள் வீட்டில் ஒன்பது மணி சுமாருக்கு காக்கைகளும், மற்ற பறவைகளும் குளியல் போட்டு சிறகுகளை உதறிக் கொண்டு இருக்கும். ஆனால், தொடர்ந்து நீர் மாற்றி விட வேண்டும், தினமும் கூட மாற்றினால் நல்லது. கொஞ்சம் பெரிய பாத்திரம் என்றால் இரண்டு மூன்று நாட்கள் தாங்கும். கலங்கிய நீரை அடிக்கடி மாற்றி விட வேண்டும். பறவைகளும், பட்டாம் பூச்சிகளும் உங்கள் வீட்டை வட்டமிட வேண்டுமெனில், செடிகளை நட்டு வையுங்கள். தோட்டம் முழுவதும் குரோட்டேன்ஸ்...

நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்

Image
இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம், இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளைப்பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டாம். ஏனெனில் அவனுக்கும் - நம்மில் பலருக்குப் போலவே - நாளை மற்றுமொரு நாளே ! புத்தகத்தின் முதல் பக்கத்தில் இருக்கும் மேற்கண்ட வரிகளே, நாவலின் போக்கைச் சொல்கிறது. ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை தான் நாவலில் வருகிறது. காலையில் எழுந்து, காலைக் கடன்களை முடித்து, கிடைக்கும் நேரத்தில் உணவருந்தி, அலுவலகம் ஓடி, திரும்ப கூட்டுக்கு ஓடி வரும் பறவை போல மாலை திரும்பும் மனிதர்கள் பற்றிய நாவல் இல்லை இது. சாதாரண மனிதர்கள்தான் நாவலில் வருகிறார்கள். வீட்டை விட்டு வெளியே வந்தால் சாக்கடை, காலி பாட்டில்களை சேகரித்து காசு தேற்றும் நிலை, பத்து ரூபாய் பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் மக்கள் தான் நாவல் முழுவதும் வருகிறார்கள...