ஆதலினால் காதல்..
உலகம் என்ன சொல்லும் என்கிறாய் உன்னையும் என்னையும் தவிர உலகத்தில் யாருமில்லை கண்ணே ! ********************************* உனது கைப்பேசிக்கு அழைத்தால் முதலில் ஏதோ ஒரு இசை கேட்கிறது.. நீ பேச ஆரம்பித்த பின்னர்தான் மெல்லிசை கேட்கிறது.. ******************************* நீ வெட்டி விலகிச் செல்லும் போதெல்லாம் வெட்ட வெட்ட மீண்டும் தழைக்கும் தாவரமென வளர்கிறது உன்மேலான என் பிரியம் ! ********************************* தென்றலாய் நடந்தாய் மணியாய் சிரித்தாய் தண் நிலவாய்ப் பார்த்தாய் ஒரு நாள் கவிதையாய்ப் பேசியபோதுதான் நான் கவிதை கிறுக்க ஆரம்பித்தேன் ! ********************************* சுருட்டிப் போட்ட பழைய போர்வையாய் நடந்து கிடக்கிறேன் சாலைகளில் ஒரு நாளேனும் திரும்பி புன்னகை பூத்து விட்டுப் போ. அன்று முதல் நான் பறக்க ஆரம்பிப்பேன் .. ********************************* அனைவரின் காலடித் தடங்களையும் உள் வாங்கிக் கொண்டு அமைதியாக கிடக்கும் கடற்கரை ஈர மணல் போல் நீ பேசிய சொற்களை அசைபோட்டுக் கொண்டே ஆழ்ந்து கிடக்கிறேன் ! (இந்தத் தளத்தில் நான் எழுதிய பழைய கவிதைகள் ! )