Thursday, February 14, 2013

ஆதலினால் காதல்..

உலகம் என்ன சொல்லும்
என்கிறாய்
உன்னையும் என்னையும் தவிர
உலகத்தில்
யாருமில்லை கண்ணே !

*********************************

உனது கைப்பேசிக்கு
அழைத்தால்
முதலில் ஏதோ ஒரு இசை கேட்கிறது..
நீ பேச ஆரம்பித்த பின்னர்தான்
மெல்லிசை கேட்கிறது..


*******************************

நீ
வெட்டி விலகிச்
செல்லும் போதெல்லாம்
வெட்ட வெட்ட
மீண்டும் தழைக்கும் தாவரமென
வளர்கிறது
உன்மேலான என் பிரியம் !

*********************************

தென்றலாய் நடந்தாய்
மணியாய் சிரித்தாய்
தண் நிலவாய்ப் பார்த்தாய்
ஒரு நாள்
கவிதையாய்ப் பேசியபோதுதான்
நான் கவிதை கிறுக்க ஆரம்பித்தேன் !

*********************************

சுருட்டிப் போட்ட
பழைய போர்வையாய்
நடந்து கிடக்கிறேன் சாலைகளில்
ஒரு நாளேனும்
திரும்பி புன்னகை
பூத்து விட்டுப் போ.
அன்று முதல் நான்
பறக்க ஆரம்பிப்பேன்..

*********************************

அனைவரின்
காலடித் தடங்களையும்
உள் வாங்கிக் கொண்டு
அமைதியாக கிடக்கும்
கடற்கரை ஈர மணல் போல்
நீ பேசிய சொற்களை
அசைபோட்டுக் கொண்டே
ஆழ்ந்து கிடக்கிறேன் !


(இந்தத் தளத்தில் நான் எழுதிய பழைய கவிதைகள் ! )

5 comments:

  1. அழகிய வெளிபாடு
    ஆழ்ந்த காதல்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்லா இருக்கு இளங்கோ .. அழகான கவிதைகள் ..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. @கோவை மு சரளா
    @ஷஹி
    நன்றிங்க

    ReplyDelete
  4. நல்லா இருக்கு கவிதை

    ReplyDelete
  5. @ஆதிரா
    நன்றிங்க..

    ReplyDelete