Posts

Showing posts from May, 2020

இந்து ஞானம் ஓர் எளிய அறிமுகம் - க்ஷிதி மோகன் சென்

Image
க்ஷிதி மோகன் சென் சமஸ்கிருத வல்லுநர். தாகூரும் அவரும் நெருங்கிய நண்பர்கள். தாகூரின் அழைப்பை ஏற்று சாந்தி நிகேதனில் சேர்ந்து பணியாற்றி பங்களிப்புச் செய்தவர் சென். ஒரு ஆய்வாளராக அவர் எண்ணற்ற நூல்களை எழுதி இருக்கிறார். ஆங்கிலத்தில் இந்து மதம், அதன் ஞானத் தொடர்ச்சி பற்றி நூல்கள் இருந்தாலும், அவை பெரும்பாலும் புராணக்கதைகளை விவரிப்பதாக உள்ளது. எனவே, இந்து ஞானம் பற்றிய அறிமுகமாக சிறு நூலை வங்காள மொழியில் எழுதுகிறார். அதை ஆங்கிலத்தில் அவரின் பேரன் பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். மிகச் சிறிய நூலாக இருந்தாலும், அதற்குள் எவ்வளவு சொல்ல முடியுமோ அவ்வளவையும் சொல்லிச் செல்கிறார் சென். சில இடங்களில் விரிவாக சொல்லிக்கொண்டு அடுத்த பகுதிக்கு செல்கிறார். ஒரு சிறந்த அறிமுகப் புத்தகம் இந்நூல். மூன்று பகுதிகளாக இந்நூல் உள்ளது.  இந்து மத தோற்றம், வேதங்கள், பழக்க வழக்கம், உபநிடதங்கள், ஆறு தரிசனங்கள், வங்காள பால்கள்(baul) மற்றும் சைவ சித்தாந்தம் போன்ற மற்றைய போக்குகள், தற்கால அறிஞர்கள் பங்களிப்பு என்று விளக்குகிறார் சென். இந்நூலின் மூன்றாம் பகுதியில் முக்கியமான உபநிடத ...

ஏணிப் படிகள் - தகழி சிவசங்கரன் பிள்ளை

Image
'திருவாங்கூரிலிருந்து குருவாயூர், கொச்சி எனப் போக வேண்டும் என்றால் அடுத்த நாட்டுடன் அனுமதி வாங்க வேண்டுமா' என வியக்கிறாள் கார்த்தியாயினி. அவளின் கணவர் கேசவபிள்ளை 'பின்னே திருவாங்கூர் தனி நாடாகிவிட்டால் அதுதானே நடைமுறை' என்கிறார். கேசவபிள்ளை ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து இப்பொழுது அரசாங்கத்தில் மேல் பதவியான தலைமை காரியதரிசி பதவியில் இருப்பவர். அவருடைய மனைவி கார்த்தியாயினி. பெற்றோர் பார்த்து திருமணம் செய்த பெண். எந்த அலங்காரமும் இல்லாத எளிமையான கிராமத்து பெண்.   திருவாங்கூர் சமஸ்தானத்தில்  அரசாங்கத்தில் சாதாரண குமாஸ்தா வேலையில் அவர் இருந்தபொழுது, அவளை பெற்றோர் சொன்னதால் கல்யாணம் செய்துகொள்கிறார் கேசவ பிள்ளை. ஆனால் அவர் அலுவலகத்தில் வேலை செய்யும் தங்கம்மா என்ற பெண்ணை காதலிக்கிறார். ஏற்கெனவே கல்யாணம் ஆனதை மறைத்து தங்கம்மாளிடம் பழகுகிறார். அவளைப் பயன்படுத்தி பெரிய பதவியை அடைகிறார். ஊரில் கல்யாணம் செய்த மனைவி, இங்கே தங்கம்மாள் என குழப்ப நிலையில் இருக்கும்பொழுது தங்கம்மாளை விட்டு பிரிய நேர்கிறது.  கணவன் சொல்லை மறுக்காத கார்த்தியாயினி, எதையும் மறுத...