Posts

Showing posts with the label புதிய தலைமுறை

பாலாஜி: வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி - இரண்டாம் பரிசு - தி ஹிந்து நாளிதழ்

Image
பாலாஜியின் அறிவியல் முயற்சிகளைப் பற்றி எனது பதிவுகளில் நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  அந்தப் பதிவுகள்; ஓர் இளம் விஞ்ஞானி பாலாஜியின் இன்னுமொரு முயற்சி நேற்று(20/07/2012), புதிய தலைமுறையின் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி - 2012' கோவையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில்,  பாலாஜி தனது கண்டுபிடிப்பான 'Eco Bike'-கை  இடம்பெறச் செய்திருந்தான். அவனின் முயற்சிக்கு கிடைத்த பலனாக, பாலாஜியின் கண்டுபிடிப்பு இரண்டாம் பரிசு பெற்றுள்ளது.  அதைப் பற்றிய செய்திக் குறிப்பு தி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ளது. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article3664437.ece பாலாஜியின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் பாலாஜியின் பெற்றோருக்கு எங்களின் நன்றிகள். 

காட்டை வளர்த்தவர்

Image
அஸ்ஸாம் மாநிலத்தில், ஆற்றின் ஓரத்தில் ஒரு காட்டையே உருவாக்கி உள்ளார் ஜாதவ் பயங்(jadav payeng) என்பவர். இவரின் சிறுவயதில், ஆற்றின் மணல் கலந்த திட்டுகளில், மரம் வளர்க்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. அவரும் அதில் ஒருவராக இருந்திருக்கிறார். நாளடைவில் அந்தத் திட்டத்தில் கலந்து கொண்ட எல்லோரும் அங்கிருந்து அகன்று விட, இவர் மட்டும் தன் குடும்பத்துடன் அந்தக் காட்டுக்குள்ளேயே தங்கி, மரங்களை வளர்த்துள்ளார். முதலில் மூங்கில் மரம் மட்டும் வளர்ந்த அந்த மண்ணில், எறும்புகளை கொண்டு போய் அங்கே விட்டு, மண்ணை வளமாக்கி அனைத்து மரங்களையும் நட்டு இன்று அதை ஒரு பெரிய வனமாக மாற்றி இருக்கிறார் ஜாதவ் பயங். காட்டின் பரப்பு முன்னூறு ஹெக்டேர். இவர் எடுத்த இந்த முயற்சியால் இன்று அந்தக் காட்டில் பல பறவைகளும், விலங்குகளும் வாழ்ந்து வருகின்றன. இதற்கு முன்னர் மரங்களின் தந்தை - திரு.அய்யாசாமி என்கிற தலைப்பில் அய்யாசாமி அய்யாவைப் பற்றி எழுதி இருந்தேன். அவரும் இயன்ற அளவு மரங்களை வளர்த்தவர். மரங்களை வெட்டித் தள்ளி, பணம் சம்பாதிக்கும் மனிதர்களுக்கு மத்தியில் இவர்களைப் போன்றவர்களே நமக்கு முன்னோடிகளாக இரு...

இரு கப் டீ

போன வாரம் புதிய தலைமுறை இதழில், எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எழுதும் 'மனிதர் தேவர் நரகர்' தொடரில் தனது நண்பர் தோழர் சோமு என்பவரைப் பற்றி எழுதியிருந்தார். கல்லூரி வேலை, பொதுப் பணித் துறை வேலை என தான் வேலை செய்த இடங்களில் மலிந்து கிடந்த ஊழல்களை வெறுத்து வெளியே வந்தவர் அவர். ஒரு நாள் சோமு மற்றும் சோமுவின் மனைவி ஆகியோரிடம் பிரபஞ்சன் பேசியிருந்ததை கட்டுரையின் ஓரிடத்தில் பகிர்ந்திருந்தார். ======================= 'நான் சொல்றேன் காம்ரேட். நான் சினேகத்தைக் கேட்டேன். இவர், ஒரு டீக்குத்தான் என்னிடம் காசு இருக்கு. உங்ககிட்ட சில்லறை இருந்தா வாங்க. டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்னார்' 'சாப்பிட்டீங்களா' ' எங்களுக்கு முன்னால இரு கப் டீ. எங்க இரண்டு பேரின் வாழ்க்கையும் போல. அதை எப்படியும் குடிக்கலாம். ஆடிக்கொண்டோ, பாடிக்கொண்டோ குடிக்கலாம். ஆனால் டீ சிந்திடக்கூடாது. ஏன்னா, மறுமுறை டீ கிடைக்காது . அப்புறம் மூன்று வருசத்துக்குப் பிறகுதான், என் காதலை அவர்ட்ட சொன்னேன்' ======================= நாம் பார்க்க அல்லது படிக்கத் தவறிய மனிதர்கள் நம் பக்கத்து வீடுகளில் கூட இருக்...