Showing posts with label கிளிக்கிய போட்டோஸ். Show all posts
Showing posts with label கிளிக்கிய போட்டோஸ். Show all posts
Friday, November 21, 2014
Thursday, February 7, 2013
இயற்கையோடு கொஞ்சம் வாழ்ந்து பாருங்கள்...
திரும்பிய பக்கமெல்லாம் கான்கிரீட் சுவர்களாய் இருக்கும் இந்த மாநகரங்களில் இயற்கையோடு வாழ முடியாதுதான். ஆனால் கொஞ்சம் முயன்றால் முடிந்த அளவு நம்மால் இயற்கையோடு ஒன்ற முடியும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் தவிர்த்து அனைவரும் செடி கொடிகள் வளர்க்கலாம். இடம் இல்லை என்பவர்கள் தொட்டியில் வளர்க்கலாம், மொட்டை மாடிகளில் வளர்க்கலாம். தேவை கொஞ்சம் அக்கறையும், ஈடுபாடும்.
சிறிய கிண்ணங்களில் தினமும் தண்ணீர் ஊற்றி வையுங்கள். மொட்டை மாடி கைப்பிடிச் சுவர்களில் வைப்பது நலம். நீங்கள் வைத்த முதல் நாளே பறவைகள் வந்து விடாது. கொஞ்ச நாட்கள் பழகிய பின்னரே, அவைகள் தொடர்ந்து வரும். எங்கள் வீட்டில் ஒன்பது மணி சுமாருக்கு காக்கைகளும், மற்ற பறவைகளும் குளியல் போட்டு சிறகுகளை உதறிக் கொண்டு இருக்கும். ஆனால், தொடர்ந்து நீர் மாற்றி விட வேண்டும், தினமும் கூட மாற்றினால் நல்லது. கொஞ்சம் பெரிய பாத்திரம் என்றால் இரண்டு மூன்று நாட்கள் தாங்கும். கலங்கிய நீரை அடிக்கடி மாற்றி விட வேண்டும்.
பறவைகளும், பட்டாம் பூச்சிகளும் உங்கள் வீட்டை வட்டமிட வேண்டுமெனில், செடிகளை நட்டு வையுங்கள். தோட்டம் முழுவதும் குரோட்டேன்ஸ் போன்ற வெளிநாட்டுத் தாவரங்கள் மட்டும் இல்லாமல், கொய்யா, பப்பாளி, சீத்தா என நட்டு வைத்தால் பறவைகள் தேடி வரும்.
இடம் இல்லையெனில், தொட்டிகளில் புதினா, கொத்தமல்லி, இஞ்சி, கீரை வகைகள் என வளர்க்கலாம். இப்போதெல்லாம் கடைகளில், பெரிய செடிகளை (பப்பாளி, முருங்கை) மொட்டை மாடிகளில் வளர்க்கக் கூடிய வகையில் பைகள் கிடைக்கின்றன. அவைகளை வாங்கி பயன்படுத்தலாம்.
வெந்தய விதைகளை தொட்டியில் தூவி விட்டால், இரண்டே வாரத்தில் அருமையான கீரை தயார். அதன் சுவையை அறிந்த பின்னர், நீங்கள் வெந்தயக் கீரையை வெளியே வாங்கவே மாட்டீர்கள்.
எக்காரணம் கொண்டும் பூச்சி மருந்துகளை அடிக்கக் கூடாது. எறும்பு மருந்து கூட போடாமல் இருப்பதே நல்லது. வேப்பம் புண்ணாக்கு, மண்புழு உரம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
அவரைக்காய், பீர்க்கை, சுண்டை, தண்டுக் கீரை, வாழை..... என வளர்த்து வருகிறோம். இந்த வருட பொங்கலுக்கு எங்கள் வீட்டில் வளர்ந்த மஞ்சள் கிழங்கு தான். மீண்டும் அதே மஞ்சளையே விதைத்தும் விட்டோம். பொங்கலுக்கு கடையில் வாங்கிய கரும்பில் கொஞ்சம் நட்டு வைக்க, அதுவும் குருத்து விட்டு வளர்ந்து வருகிறது. அடுத்த வருடம் கடையில் கரும்பு வாங்கப் போவதில்லை :)
முயன்றால் நம்மாலும் சிறிய அளவில் இயற்கையோடு வாழ முடியும்.
எங்கள் வீட்டில் வளர்ந்தவை:
(சேனைக் கிழங்கு)
(பாகற்காய் )
(புடலை கொடியில் வண்ணத்துப் பூச்சி)
Monday, September 3, 2012
Thursday, August 16, 2012
சுதந்திர தினம் - விழுதுகள்
எங்கள் விழுதுகள் அமைப்பு பற்றி ஏற்கனவே இந்தப் பதிவுகளில் எழுதியிருக்கிறேன்.
சுதந்திர தினமான நேற்று, விழுதுகள் மையங்களில் சிறப்பாக கொண்டாடினோம்.
அனைத்து மையங்களிலும் விழா நடத்த முடியாது என்பதால், கள்ளிப்பாளையம், ஜெ.ஜெ
நகர் மற்றும் எம். கவுண்டம்பாளையம் ஆகிய மையங்கள் இணைந்து விழாவை, எம்.
கவுண்டம்பாளையம் பள்ளி அரங்கில் நடத்தினோம்.
விளையாட்டு, நாடகம், நடனம், பேச்சு என மாணவர்கள் அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக பங்கேற்றார்கள். சளைக்காமல் அவர்கள் பங்கேற்று பெற்ற மகிழ்ச்சி என்பதோடு
அல்லாமல், எங்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டார்கள் எங்கள் மாணவர்கள்.
அங்கு எடுத்த புகைப்படங்கள்:
Friday, April 27, 2012
சித்திரை மழையில்
வழக்கமாக வைகாசி பாதிக்கு மேல்தான் மழை பெய்ய ஆரம்பிக்கும். இந்த வருடம் சித்திரை மாதத்திலேயே பெய்ய தொடங்கிவிட்டது. நான்கு நாட்களாக மழையில் ஊரே பசுமை போர்த்தியது போல இருக்கிறது. வாடிகிடந்த செடி கொடிகள் எல்லாம் மழையில் தளிரத் தொடங்கியிருக்கிறது. மழையால் வெயில் ஓடிபோய் ஒளிந்து கொண்டது போல, நிலம் சில்லென்று இருக்கிறது.
வண்ணநிலவன் நாவலில் இப்படிச் சொல்கிறார்; "மழையை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை
அடைந்து விடுகிறது. யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போல
தோன்றுவார்கள் மழையின்போது" -- ஆம் மழை கடவுள், மழையை நேரில் பார்க்கும்போது சில நேரங்களில் நாமும் கடவுள் தன்மை பெற்று விடலாம்.
மழை பெய்து ஓய்ந்த நேரம் எடுத்த படங்கள் இவை;
Subscribe to:
Posts (Atom)