ஜெயமோகன் - கோவை வாசகர் சந்திப்பு
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் கடந்த 23/01/2010 அன்று கோவையில் நடைபெற்ற அவருடைய வாசகர் சந்திப்புக்கு வந்திருந்தார். ஜெயமோகன் மற்றும் நாஞ்சில் நாடனை தவிர தெரிந்த முகம் எதுவும் இல்லை. ஆதலால் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டு கவனித்தேன். எதாவது பிரச்சினை என்றால் ஓடுவதற்கு எளிதாக இருக்கும் என்பதால் ஓரமான இருக்கை. சிறிது நேரம் கழித்து என்னை சுற்றியும் இருக்கையை போட்டு விட்டார்கள். கூட்டம் முடியாமல் நம்மை வெளியே விட மாட்டார்கள் என மனதிற்குள் பயம். நாம்தான் முகத்தில் எதையும் காட்டி கொள்ள மாட்டோமே !. சிறிது நேரம் கழித்து நாஞ்சில், ஜெயமோகன் என மேடைக்கு வந்தார்கள். வரவேற்பு முடிந்தவுடன், கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்வி கேட்டவர்கள் கேட்ட தொனியை பார்த்த பொழுது, 'ரூம் போட்டு யோசிச்சு இருப்பங்களோ' என தோன்றியது. இந்த கூட்டத்தில்தான் முதன் முதலாக கோவை ஞானி அவர்களை பார்த்தேன். இதுவரைக்கும் அவரை நான் பார்த்ததில்லை. ஒரு சில கேள்விகளின் பதில்கள் புரிந்தன. சில கேள்விகளும், பதில்களும் புரியவில்லை. இது எனக்கு மட்டும்தான் இருந்திருக்கும் என நினைக்கிறேன். மார்க்சியம் பத்தி எல்லாம் ஒண்ணும் தெரியாது. நெறைய படிக்க வ...