Posts

Showing posts from December, 2012

விஷ்ணுபுரம் 2012 விருது விழாவில்..

Image
விஷ்ணுபுரம் விருது 2010 ல் எழுத்தாளர் ஆ.மாதவன் அவர்களுக்கும், 2011 ல் எழுத்தாளர் பூமணி அவர்களுக்கும் வழங்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டுக்கான விருது கவிஞர் தேவதேவன் அவர்களுக்கு, கடந்த சனிக்கிழமை(22/12/2012)  அன்று கோவையில் வழங்கப்பட்டது.  விழாவில் இசை ஞானி இளையராஜா கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார். அவரின் திரை இசையில் தோன்றிய பாடலான, 'மாசறு பொன்னே வருக..' பாடலுடன் விழா துவங்கியது. எங்கு இந்தப் பாட்டைக் கேட்டாலும், கொஞ்ச நாட்களுக்கு இந்தப் பாட்டை வாய் பாடிக் கொண்டே இருக்கும். அழகான இந்தப் பாட்டை, அழகாகப் பாடிய இரண்டு சிறுமிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். திரு. அரங்கசாமி அவர்கள் வரவேற்புரை வழங்க, எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கினார். இசை ஞானியை தான் முதன் முதலாக சந்தித்ததைப் பற்றியும், அதற்குப் பின்னர் அவரைப் பற்றியும் குறிப்பிட்டார் நாஞ்சில் நாடன். அவரின் உரையில், தேவதேவன் அவர்களின் இரண்டு கவிதைகளைப் பற்றிக் குறிப்பிட்டார். அதில் ஒன்று, கீழ்வரும் கவிதை; ஒரு கர்ப்பிணிப் பெண்ணை அவளின் தாயிடம் ஒப்படைப்பது போல உன்னை...

குறும்படம்: Rags to Pads

அதைப் பற்றி பேசுவதே தவறு என்றுதான் நம் சமூகம் சொல்லிக் கொண்டிருக்கிறது, அதுவும் இந்த சமூகத்துக்கு அது ஒரு கேலிப் பொருள். ஆண்கள் மட்டும் அல்ல, பெண்களும் கூடத்தான். "நான் அவ வீட்டுக்கு வரல.. அவ ரொம்ப சுத்தம் பாக்குறவ.." என்று அந்த நாட்களில் வெளியே போகாமல் இருக்க காரணம், பெரும்பாலும் இன்னொரு பெண்தான். "வீட்லயே இருக்க வேண்டியது தானே.." என்று திட்டுபவர்களும் அதிகம். "மூன்று நாளா.." என்று கேலி செய்பவர்கள் திருந்துவது எப்போது?. அந்த நாள் என்று சொன்னாலே, முகத்தைச் சுளித்துக் கொள்பவர்களை என்ன செய்யலாம்.? மாதவிடாய் நாட்களில் நகரத்துப் பெண்கள் கூட சமாளித்துக் கொள்ளலாம். அதையும், கடையில் வாங்கிய பின்னர் பேப்பர் சுற்றி எடுத்து வரவேண்டிய கொடுமை இன்னொருபுறம். இயல்பாக இருப்பதை, மாத சுழற்சியை ஏன் நாம் மறைக்க நினைக்கிறோம். ஆனால், கிராமங்களில் இன்னும் பழைய துணிகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம் அல்லது அதன் விலை அவர்களுக்கு அதிகமாக இருக்ககூடும். பழைய துணிகளால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் நிறைய. கோவையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரை...

600 ரூபாய்

உங்களுக்குத் தெரியாது.. பத்துக்கு பத்துக்கு ஒரு அறை என்றால் கூட, வாடகை ஆயிரத்துக்கு மேல்.. உங்களுக்குத் தெரியாது.. என்னதான் அடித்து பிடித்து செலவு செய்தாலும் மளிகைக்  கடையில் ஐநூறு  ரூபாய் பாக்கி நிற்கிறது எல்லா மாதத்திலும் உங்களுக்குத் தெரியாது.. விலை குறைவென்று பண்டிகைக்கு வாங்கிய துணிகள் சாயம் போயும், கிழிந்தும் போகின்றன உங்களுக்குத் தெரியாது.. காய்ச்சல் சளி என்றால் கூட சமாளித்து விடலாம் மேலதிக நோய் என்றால் மருத்துவர் கட்டணம் நூறுக்கு குறைவில்லை.. உங்களுக்குத் தெரியாது.. பேருந்து, ரயில் போன்றவைகளின்  கட்டணம் நம் நாட்டில் இலவசம் இல்லையே.. அது போலவே கல்வியும்.. இதையெல்லாம் விட நீங்கள் எப்போதெல்லாம் பெட்ரோல் விலை ஏத்துகிறீர்களோ அப்போதெல்லாம் காய்கறிகள் உட்பட எல்லாம் விலை ஏறுகின்றன உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா ஒரு சவத்தை அடக்கம் செய்யக் கூட குறைந்த பட்சம் இரண்டாயிரம் ரூபாய் தேவை.. இவையெல்லாம் உங்களுக்கு எதற்கு தெரிய வேண்டும்... மாடங்களில் இருந்து பாருங்கள்... ஊரே செழிப்பாக இருக்கும் அவை ஆறுகள் அல்ல சாக்கடைகள் என்று ஒரு நாளும் நீங்கள் அறியப்போவதில்லை.. சொன்னதே ...

விஷ்ணுபுரம் விருது விழா - 2012

Image
விஷ்ணுபுரம் விருது இந்த வருடம் கவிஞர் தேவதேவன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. விருது வழங்கும் விழா டிசம்பர் 22 அன்று கோவையில் நடைபெறுகிறது. விஷ்ணுபுரம் விருது 2012 விஷ்ணுபுரம் விருது 2012 அழைப்பிதழ் சென்ற வருடங்களில் எழுத்தாளர்கள் ஆ.மாதவன் அவர்களுக்கும், பூமணி அவர்களுக்கும் வழங்கப்பட்டது. அந்நிகழ்வுகளைப் பற்றிய எனது பதிவுகள். விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில் பூமணி - விருது விழா

எனது டைரியிலிருந்து - 6

Image
விற்ற காசு தோப்பும் துரவும் வீடும் கிணறும் விற்று வாங்கிய தொகையை எண்ணிக்  கொண்டிருக்கையில் ஐந்நூறு ரூபாய் நோட்டுகள் அனைத்திலும் அப்பாவின் முகம். - ந. கண்ணன் (ஆனந்த விகடன்) =================================================== தோல்வி கடைசி சவம் விழுந்ததும் கட்டாயம் அறிவிக்கப்படும் வெற்றிபெற்ற கடவுள் பெயர். - எஸ். ஏ. நாசர் (ஆனந்த விகடன்) =================================================== நடைபாதை ஓவியன் கோவர்த்தன மலையை குடையென ஆக்கி மக்களைக் காக்கும் கண்ணனை வயிற்றுப் பசியுடன் வரைந்து முடித்து நிமிர்ந்து பார்க்க வந்தது மழை. குடையுடன் கடவுள் அழிந்து கொண்டிருந்தார். - எம். மாரியப்பன் (ஆனந்த விகடன்) =================================================== அகத்தகத்தினிலே காதலர் தினம், அன்னையர் தினம் என வரிசையாய் எல்லா தினங்களின் போதும் நீ கொடுத்த முத்தங்கள், கடிதங்கள் வாழ்த்து அட்டைகள், பரிசுகள் என எல்லாவற்றையும் அடிக்கடி நினைத்துப் பார்த்து உயிர்த்திருக்கிறேன் பலமுறை. வழக்கமானதொரு மாலைப்பொழுதில் என் தலை கோதி, உச்சி முகர்ந்து '......ப் போல இருக்கிறாய்' என்று அனிச்சையாய் யாரோ ஒ...