Posts

Showing posts with the label எஸ்.ராமகிருஷ்ணன்

கதையெனும் நதியில் - 2

ஆ . மாதவன் பாச்சி ஒரு கடைத்தெருவில் வாழ்ந்து வரும் ஒருவனைப் பற்றியும், அவன் வளர்த்த பாச்சி என்ற நாயைப் பற்றியும் கதை சொல்கிறது. எந்த சொந்தமும் இல்லாத தெருவோரத்தில் வாழ்ந்து வரும் நாணுவுக்கு, பாச்சி வந்த பிறகுதான் ஒரு வேலையும் தங்க இடமும் கிடைக்கிறது. கதையின் முதல் வரியே 'பாச்சி செத்துப் போய்விட்டாள்' என்றுதான் ஆரம்பிக்கிறது. சக மனிதனை மதிக்கத் தெரியாத உலகத்தில், கதியற்று இருப்பவர்களுக்கு செல்லப் பிராணிகள் தானே ஆறுதலைத் தர முடியும். பொய் சொல்லத் தெரியாத, எதையும் எதிர்பார்க்கத் தெரியாத 'பாச்சி' போன்ற விலங்குகள் தான் உலகில் மொழியும், சொற்களும் இல்லாத அன்பை, வாலாட்டிக் கொண்டு தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. பெருமாள் முருகன் குமரேசனின் அதிர்ஷ்டங்கள் நான்கு ஒரு சிலரை நீங்கள் கவனித்திருக்கலாம், ஒரு பொருள் எங்கே இருந்ததோ அங்கேயே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். எதிலும் ஒரு ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கொஞ்சம் மாறி இருந்தால் கூட, கோபத்தில் யாரை வேண்டுமென்றாலும் திட்டுவார்கள். அவர்களுக்குத் தெரிந்தது அது அது அங்கங்கே இருக்க வேண்டும். இந்த ஒழுங்கு சில வேள...

பாதி உடல் தங்கமாக அலையும் நரி.. !

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் உப பாண்டவம் நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார். அந்தக் கதை நாம் ஏற்கனவே கேட்ட கதைதான். அந்தக் கதை இதோ மீண்டும். கொடும் பஞ்சம் சூழ்ந்த முன்னொரு காலத்தில், ஒருவன் தன் மனைவி மகன் மருமகளோடு ஒரு ஊரில் வசித்து வந்தான். பஞ்சத்தால் எதுவும் கிடைக்காத ஒரு நாளன்று வெளியே சென்ற அவன் கொஞ்சம் சோள தானியத்தோடு தன் வீட்டுக்கு வருகிறான். அவன் மனைவி அதை அரைத்து மாவாக்கி கஞ்சி சமைக்கிறாள். சமைத்த பின்னர் அதை அருந்தும்பொழுது ஒரு துறவி பசியால் அவன் வீட்டுக்கு வருகிறார். துறவியின் பசியை அறிந்த அவன் தனக்கான உணவின் பங்கை அவருக்கு கொடுக்க, அதைத் துறவி அருந்துகிறார். மீண்டும் அவர் பசியடங்காமல் இருக்க, மனைவி மகன் மற்றும் மருமகள் ஆகியோரும் தங்கள் பங்கை அந்த துறவிக்கு அளிக்க பசியடங்கிய அவர் அந்த இடத்தை விட்டுப் போகிறார். இவர்களின் செயலால் மனம் மகிழ்ந்த தேவதை ஒன்று இனி அவர்கள் எப்போதும் செல்வத்தில் திளைப்பார்கள் என வரம் தந்து விட்டுச் செல்கிறது. அப்பொழுது அங்கே வந்த நரி ஒன்று, சோளம் அரைத்த இடத்தில் படுத்துப் புரள அதன் உடல் பாதி தங்கமாக மாறிவிடுகிறது. எ...

ஒப்பாரி கோச்சியும், குதிரைகள் பேச மறுக்கின்ற கதையும்

Image
கடந்த ஒன்றிரண்டு மாதங்களாகத் தான் தீராநதி இதழைப் படித்து வருகிறேன். இந்த மாத இதழில் இரண்டு சிறுகதைகள் வெளியாகி உள்ளன. ஒன்று எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் - குதிரைகள் பேச மறுக்கின்றன கதையும், மற்றொன்று மு.சிவலிங்கம் அவர்களின் - ஒப்பாரி கோச்சி சிறுகதை. இரண்டு கதைகளும் மிக அற்புதமாக வாழ்கையின் போக்கை விவரிக்கின்றன. 'குதிரைகள் பேச மறுக்கின்றன' கதையில், தன் மகன் வீட்டுக்குச் செல்லும் பெரியவர், அந்த வீட்டில் வளரும் நாயை வாக்கிங் அழைத்துப் போகிறார். திரும்பி வரும்பொழுது நாய்க்குப் பதிலாக குதிரையைக் கூட்டி வருகிறார். மகன் கேட்டதற்கு 'அந்த டிங்கி இந்தக் குதிரையாக மாறி விட்டது' என்கிறார் அப்பா. அது எப்படி நாய் குதிரையாக மாறும் என்று மகனும், மருமகளும் குழம்பிப் போகின்றனர். ஒரு நாள் அப்பா ஊருக்குக் கிளம்பிப் போய்விட, குதிரை என்ன சாப்பிடும், அதுக்கு என்ன பிடிக்கும் எனத் தெரியாமல் மகன் தடுமாறுகின்றான். திரும்ப வரும் அப்பா, அடுத்த நாள் வாக்கிங் போய்விட்டு வரும்பொழுது, குதிரையானது நாயாக மாறிவிடுகிறது. 'நாயைப் போல குதிரைகள் ஏன் குரைப்பது இல்லை, எப்போதும் அமைதியாகவே இருக்கிறது' என...