Posts

Showing posts from October, 2011

ஓட்டுப் போட்டவன்

எல்லா நாளும் இந்நாட்டு மன்னர்களாய் வீதிக்கு கவுன்சிலர் வார்டுக்கு மெம்பெர் நகரத்துக்கு தலைவர் மாநகரத்துக்கு மேயர் தொகுதிக்கு உறுப்பினர் என்றிருக்க ஓட்டுப் போட்டவன் ஓட்டுப் போட்ட தினம் மட்டும் மன்னன்.

காப்பாத்திக்கோ

Image
கோவிலில் 'பையனக் காப்பாத்து' 'குழந்தைகளக் காப்பாத்து' என்று பாட்டி வேண்டிக் கொண்டிருக்க, குழந்தையோ கடவுளைப் பார்த்து 'உன்னையக் காப்பாத்திக்கோ' எனச் சொல்லிக் கொண்டிருக்கிறது. (மேலே உள்ள படங்கள் என் செல் பேசியில் எடுத்தவை)

நட்பின் இலக்கணம்

Image
நட்புக்கு இலக்கணமாக சங்க காலத்தில் இருந்து இருவர் சுட்டிக் காட்டப்படுகிறார்கள். பிசிராந்தையாரும் சோழனும். அப்பாடலைப் பற்றி, ஆனந்த விகடனில், எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்கள் 'சங்க சித்திரங்கள்' பகுதியில் எழுதியிருந்தார். என் டைரியில் எழுதி வைத்திருந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். ============== அன்னச் சேவ லன்னச் சேவல் ஆடுகொள் வென்றி யடுபோ ரண்ணல் நாடுதலை யளிக்கு மொன்முகம் போலக் கோடுகூடு மதிய முகில்நிலா விளங்கும் மையன் மாலையாங் கையறு பிணையக் குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி வடமலைப் பெயர்குவை யாயி னிடையது சோழநன்னாட்டுப் படினே கோழி உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ வாயில் விடாது கோயில் புக்கெம் பெருங்கோக் கிள்ளி கேட்க விரும்பிசிர் ஆந்தை யடியுறை எனினே மாண்டநின் இன்புறு பேடை யணியத்தன் நன்புறு நன்கல நல்குவ னினக்கே. -- பிசிராந்தையார் பொருள்: ======== அன்னச் சேவலே, அன்னச் சேவலே போரில் வென்று, யானை மீதேறி ஊர்க்கோலம் வரும் மன்னனின் முகம்போல மலைமடிப்பில் முழுமதி ஒளிரும் இந்த அழகிய இரவில் நான் மட்டும் துயருற்று இருக்கிறேன். நீ குமரிக் கடலில் இருந்து அயிரை பிடித்து உண்டு வடக்குமல...