Posts

Showing posts from April, 2009

குப்பையும் நானும்

கவிதை எழுதலாம் என்றேன் என்ன கவிதை எனக் கேட்டாய் உன் பெயர் என்றேன் என் பெயர் குப்பை எனச் சொன்னாய் 'உன் பெயர் குப்பைதான் என்னைக் கசக்கி எறிந்து உன்னுடனே என்னையும் குப்பையாக்கி விட்டாயல்லவா' என்றேன் சிரித்துக்கொண்டே தூரம் விட்டு தூரம் நகர்ந்து காற்றோடு கலந்து போனாய் அன்று பெய்த மழை நாளில் !

ஒரு சுகம்

எனக்கு பிடித்த கவிதைகளில் ஒன்று இக்கவிதை. ஒரு கட்டு வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு புகையிலை வாய் கழுவ நீர் பிளாஸ்டிக் நிறைய ஐஸ் ஒரு புட்டி பிராந்தி வத்திப்பெட்டி அல்லது சிகரெட் சாம்பல் தட்டு பேசுவதற்க்கு நீ நண்பா இந்த சாவிலும் ஒரு சுகம் உண்டு. -கவிஞர் நகுலன்