Posts

Showing posts with the label கவிஞர் புவியரசு

கார்மலின் - தாமோதர் மௌசோ - தமிழில்: கவிஞர் புவியரசு

Image
கொங்கணி நாவலான கார்மலின் கவிஞர் புவியரசு அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டது. பெற்றோரை சிறுவயதிலேயே இழந்த கார்மலின் என்ற பெண் தன்னையும், தான் பெற்ற மகளையும் இந்த நிலத்தில் காலூன்ற செய்ய சந்திக்கும் இடர்கள் பற்றிய கதை.  கோவா கடற்கரை பகுதியில் பிறந்த கார்மலின், தனது சிறு வயதிலேயே பெற்றோர் மற்றும் உடன்பிறந்த சகோதரனை இழக்கிறாள். பின்னர் தனது அத்தை வீட்டில் வளர்கிறாள். அவளின் அத்தைக்கு கார்மலினை வளர்ப்பது பிடிக்கவில்லை என்றாலும் அவளுடைய கணவர் இது நம்முடைய கடமை எனச் சொல்லி அவள் மேல் பாசம் காட்டுகிறார். மாமா அவள் மேல் பாசத்துடனும், அவளை பள்ளிக்கும் அனுப்புகிறார். அத்தை மாமாவின் மகன் அழகியான  கார்மலின் மேல் காதல் வயப்படுகிறான். கார்மலினுக்கும் அவன் மேல் ஆசையாக இருக்கிறாள். மாமாவுக்கு கார்மலினை தனது மருமகளாக பார்க்க வேண்டும் என ஆசை இருந்தாலும், அத்தை பணக்கார மருமகள் வேண்டும் என்கிறாள். சொன்னதுபோலவே அவனுக்கு ஒரு பணக்கார பெண்ணைப் பார்த்து கட்டி வைத்து விடுகிறார்கள். அவளின் முதல் காதல் உடைந்து போகிறது.  கால்பந்து அணியில் விளையாடும் ஜோஸ...