Posts

Showing posts from March, 2013

மாற்றப்படாத வீடு - தேவதேவன்

கவிஞர் தேவதேவன் அவர்களின் 'மாற்றப்படாத வீடு' தொகுப்பிலிருந்து... இருள் ஓளி கேள்வி இருளுக்கு ஒளி பதிலானது எவ்விதம் ? இருளை உற்று நோக்க நோக்க இருளே ஒளியாயிற்று ஒளி நோக்கும் உந்தலற்று அற்று ஒளியே இருளாயிற்று. இவ்விதமே இருளும் ஒளியும் ஒன்றாகி பேரொளி. கேள்வியும் பதிலும் இணைந்து பெருவியப்பு. =================== துள்ளல் நீரின் மேற்பரப்பில் ஒரு மீன் துள்ளி விழுகையில் கண்டது கடும்பாறை. மீண்டும் துள்ளியதில் பறவையின் கொடுங்கால். மேலும் ஒரு துள்ளலில் மரணம் மரித்த கணமே பறவை. =================== அழைப்பு கடைசி மத்தாப்பும் உதிர்ந்து மரணம் என்னைச் சூழ.. உதிராத மத்தாப்புகள் கோடி ஏந்தி வானம் என்னை அழைக்கிறது..

பிளாஸ்டிக் பூதம்

இப்பொழுதெல்லாம் சர்வ சாதாரணமாக, அனைத்துக் டீக்கடைகளிலும்  பாலிதீன் பைகளில் டீயை ஊற்றித் தருகிறார்கள். மக்களும் அதைக் குடித்து மகிழுகிறார்கள். பாத்திரம் வேண்டியதில்லை, அதைக் கழுவ வேண்டியதில்லை. ஒரு பார்சல் வாங்கி வந்து(கூடவே இரண்டு பிளாஸ்டிக் தம்ளர்களையும், கடைக்காரரே கொடுப்பார்).. அப்படியே ஊற்றிக் குடித்து விட்டு, வீசி விடலாம். அது மக்கினால் என்ன, மக்காவிட்டால் தான் என்ன?. சரி, சுற்றுப்புறம் பற்றிதான் கவலையில்லை. பாலிதீன் பைகளில் ஊற்றப்பட்ட டீயைக் குடிப்பதால், அவர்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளைப் பற்றியும் கவலை இல்லை. கொதிக்க கொதிக்க சாம்பாரையும், டீயையும் பாலிதீன் பைகளிலும், பிளாஸ்டிக் பொருட்களிலும் அடைக்கும் பொழுது கண்டிப்பாக அது இளகும். இளகிய கொஞ்சம் பகுதிகள், நாம் உட்கொள்ளும் அந்த உணவுப் பொருட்களில் கலந்து நம் உடலுக்குள் செல்லும். அதைப் பற்றியும் நமக்கு விழிப்புணர்வு இல்லை. டாக்டர் விகடன்(16-03-13) இதழில், ' உணவே விஷம் ஆகலாமா ?' என்ற கட்டுரையில்; 'தற்போது கடினமான பிளாஸ்டிக் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. பாலிதீன், பாலிப்ரொபைலீன் போன்றவை கொண்ட...

குடி என்பது..

காலை மணி எட்டு. பெட்ரோல் பங்கில், வண்டிக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு ஒரு திருப்பத்தில் திரும்பினேன். ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க நபர், லிப்ட் கேட்பதற்காக கை காட்டினார். 'EB ஆபீஸ் வரைக்கும் போகணும்'  என்றார். 'சரி, ஏறுங்க..' என்றேன். 'நீங்க அங்கேயே போறீங்க?' என்றார் நான் கடுப்பில், 'வர்றீங்களா... இல்லையா.. ' என்றேன். 'அய்யா சாமி.. வர்ரேனுங்க' என்று பின்னால் ஏறிக் கொண்டார். அப்பொழுதுதான் நான் கவனித்தேன், அவர் குடித்திருப்பதை. EB ஆபீஸ் வரும்வரைக்கும் நான் எதுவும் பேசவில்லை. அவரும் வாயைத் திறக்கவில்லை. இடம் வந்ததும், 'இங்க எறங்கிக்குரீங்களா' என்றேன்.  இறங்கியவர், கிளம்ப எத்தனித்த என்னிடம், என்ன நினைத்தாரோ 'மன்னிச்சுக்குங்க.. வீட்ல பிரச்சினை.. அதான் இப்படி' என்று கையெடுத்துக் கும்பிட்டார். 'பரவாயில்லை.. விடுங்க' என்று கூறியவாறு வண்டியை முறுக்கினேன் நான். வண்டியின் கண்ணாடியில் பார்த்தேன். தூரத்தில் அவர், கும்பிட்ட கையை கீழே போட்டுவிட்டு சாலையை தாண்டிக் கொண்டிருந்தார். குடிப்பது என்பது எப்படி எல்லாம் மனிதனை நடக்க வைக்கிறத...

வளைகள் எலிகளுக்கானவை - நாஞ்சில் நாடன்

நீங்கள் எப்போதாவது அவர்களைப் பார்த்திருக்கலாம். ஆனால், சென்னை, கோவை போன்ற நகரங்களில் நாங்கள் அடிக்கடி அவர்களைப் பார்க்கிறோம். பேருந்துகளில், ரயில் நிலையங்களில் அவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து இறங்குகிறார்கள், வட நாட்டு மக்கள். மொழி புரியாமல் இங்கே வரும் அவர்கள், குறைந்த கூலிக்கு வேலைகளில் அமர்த்தப்படுகிறார்கள். சின்ன இடத்தில அவ்வளவு பேரும்  தங்குகிறார்கள். குறைந்த சம்பளத்தை வாங்கி, கொஞ்சம் செலவு செய்து மீதியை தங்கள் குடும்பத்துக்கு அனுப்புகிறார்கள். ஆனால், அவர்களை நாம் எவ்வாறு நடத்துகிறோம் என்பதை நினைத்துப் பார்த்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது. ஒரு நாள், பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது நான்கைந்து பேர் ஏறினார்கள். பயணச் சீட்டும் எடுத்து விட்டார்கள். இரண்டு மூன்று நிறுத்தங்கள் தாண்டியதும், நடத்துநர் அவர்களிடம் 'டிக்கெட் எங்கே?' எனக் கேட்க, உட்கார்ந்திருந்த ஒருவன் எழுந்தே நின்று விட்டான். அவர் என்ன கேட்கிறார் என்று அவனுக்கு தெரியவில்லை. நடத்துநர் திரும்பவும் சத்தமாக கேட்க,. எல்லாப் பயணிகளும் திரும்பிப் பார்த்தனர். இரண்டு மூன்று முறை கேட்டு, எப்பட...

சாந்தக்கா

நாலரை மணி ரயிலுக்கு நாலு மணிக்கே கூடையுடன் வந்து ஜங்சனில் அமர்ந்திருக்கும் கொய்யா விற்கும் சாந்தக்கா மெல்லிய வெள்ளை வேட்டியை இரண்டாக மடித்து கூடை மேலே போடப்பட்டும் கொஞ்சம் வாடிய கொய்யா இலைகள் வெளியே தெரியும். கொய்யா வெட்ட பெரிய கத்தியும் விருப்பமானவர்களுக்கு உப்பு, மிளகாய்ப் பொடி கலந்த பிளாஸ்டிக் டப்பாவும் கூடையில் இருக்கும். வண்டி வந்து நின்றவுடன் யாரோ ஒருவர் தூக்கி விட கூடையுடன் வந்து பெட்டிக்குள் வந்து நிற்கும் சாந்தக்கா திரும்ப இறக்கி வைக்கவும் ஏற்றவும் யாரோ ஒருவர் உதவுவர் வண்டி கிளம்பியதும் கூடையை நகர்த்திக்கொண்டு கொய்யா விற்க ஆரம்பிக்கும் சாந்தக்கா அடுத்த ஸ்டேசனில் அடுத்த பெட்டி என்று ஒவ்வொரு பெட்டியாய் கொய்யா மணம் பரவும் ஒருநாள் சுமையைத் தூக்கிவிடும்போது 'சொமையா இல்லியா அக்கா?' என்றேன். 'ம்.. இதென்ன சொமை.. குடிகார புருசனும் ரெண்டு புள்ளை,  ஒரு பையனையும் விடவா பெரிய சொமை' என்று சொல்லிவிட்டு.. 'கொய்யாக் காயேய்..' எனக்  கூவிக் கொண்டு அடுத்த பெட்டிக்கு அவசரமாகப் போனது சாந்தக்கா.. சிக்னல் இன்னும் சிவப்பில் தான் இருந்தது.