Tuesday, March 26, 2013

மாற்றப்படாத வீடு - தேவதேவன்

கவிஞர் தேவதேவன் அவர்களின் 'மாற்றப்படாத வீடு' தொகுப்பிலிருந்து...

இருள் ஓளி

கேள்வி இருளுக்கு
ஒளி பதிலானது
எவ்விதம் ?
இருளை உற்று நோக்க நோக்க
இருளே ஒளியாயிற்று
ஒளி நோக்கும்
உந்தலற்று அற்று
ஒளியே இருளாயிற்று.
இவ்விதமே
இருளும் ஒளியும் ஒன்றாகி
பேரொளி.
கேள்வியும் பதிலும் இணைந்து
பெருவியப்பு.


===================

துள்ளல்

நீரின் மேற்பரப்பில் ஒரு மீன்
துள்ளி விழுகையில் கண்டது கடும்பாறை.
மீண்டும் துள்ளியதில் பறவையின் கொடுங்கால்.
மேலும் ஒரு துள்ளலில் மரணம்
மரித்த கணமே பறவை.

===================

அழைப்பு

கடைசி மத்தாப்பும் உதிர்ந்து
மரணம் என்னைச் சூழ..
உதிராத மத்தாப்புகள் கோடி ஏந்தி
வானம் என்னை அழைக்கிறது..




No comments:

Post a Comment