சமூக வலை













மனதில் தோன்றுவதையும்
எடுத்த புகைப்படங்களையும்
சட்டென்று சமூக
வலைத் தளங்களில்
பகிர்ந்து கொள்ளத் துடிக்கும்
மகனைப்  பார்த்து,

"ஏன், எங்களிடம் நீ
ஒன்றையும் சொல்வதில்லை"
எனக் கேட்கும் தாயிடம்..

"நீயும் பேஸ்புக்ல
லாகின் பண்ணும்மா"
எனச் சொல்கிறான் மகன்.


(படம்: இணையத்தில் இருந்து - நன்றி) 

Comments

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

வீட்டுத் தோட்டத்தில்: செவ்வாழை