Wednesday, June 16, 2010

செம்மொழி மாநாடு மற்றும் டாஸ்மாக் தாராளம்

புது சாலைகள், புது விளக்குகள், புது கட்டிடங்கள்... என கோலம்(!) கொண்டு நிற்கிறது கோவை, செம்மொழி மாநாட்டுக்காக.

மாநாடு நடந்து முடிந்த பின்னர்தான் தெரியும், தமிழ் எப்படி இருக்கிறதென்று. எப்படி இருந்தாலும் 'பை மா', 'ஹாய் டாடி', 'ஹொவ் ஆர் யு', 'வெரி குட்'..... போன்றவைகள் நம்மிடம் இருந்து மாற போவதில்லை. வரும் தலைமுறைக்கு தமிழை சொல்லி கொடுக்க போவதும் இல்லை. தமிழ் படித்தால் சம்பாதிக்க முடியாதென்று நம் மக்களின் மண்டையில் பதிந்து எவ்வளவோ நாட்களாகி விட்டன.

போன வாரம் இரண்டு குழந்தைகளை பார்த்தேன். இரண்டு குழந்தைகளின் பெற்றோரும் ஒரு நல்ல அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டும். அவர்களுக்கும் அந்த குழந்தைகளுக்கும் நடந்த உரையாடல்கள் இப்படித்தான் இருந்தன.

'Oh Dear.. dont do that', 'please ma...', 'why are you crying now?' இப்படித்தான்...
ஒரு குழந்தை போனில் சொல்லியது 'mom.. scolding me.. ' ....

எப்படியோ தமிழ் வளர்ந்தால் சரிதான்.

இன்றைய தினமலரில் ஒரு செய்தி;
கூடுதலா இருக்கு சரக்கு : தண்ணி தட்டுப்பாடு இல்லை

வழக்கத்தைவிட இருமடங்கு அல்லது 20 லட்சம் ரூபாய் கூடுதல் "சரக்கு' இருப் பில் வைத்திருக்க, கடை ஊழியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
முக்கியமாக, தற்போது கடைக்கு வரும் சரக்கை விட இரு மடங்கு, அல்லது 20 லட்சம் ரூபாய் அளவுக்கு சரக்கை இருப்பில் வைத்திருக்க வேண்டும். கடைக்கு அருகில் அல்லது தெரிந்த பாதுகாப்பான இடத்தை குடோனாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர், உயரதிகாரிகள். செம்மொழி மாநாடு நடக்கும் நாட்களில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=19966
(நன்றி: தினமலர்)

ஆகவே தமிழ் குடிமக்களே(!!!), உங்களால் தமிழ் வளரட்டும் !!!

No comments:

Post a Comment