Monday, September 27, 2010

வீடும் பள்ளியும்..

'சாதிகள் இல்லை பாப்பா'
'உதவி செய்'
'பகுத்துண்டு வாழ்'
என்று பள்ளியில்..

'அந்த ப்ரெண்டு என்ன சாதி'
'ரப்பர் பென்சில யாருக்கும் குடுக்காத'
'டிபன் பாக்ஸ்ல இருக்குறத நீ மட்டும் சாப்பிடு'
என்று வீட்டில்..

பாடம்
சொல்லிக் கொடுக்க வேண்டியது
குழந்தைகளுக்கா
இல்லை பெரியவர்களுக்கா?.

14 comments:

  1. கொஞ்சம் வசன நடையில் இருந்தாலும், கருத்து அருமை இளங்கோ.

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  2. இன்னும் பல கவிதைகளை படைத்து சமூக புரட்சி செய்ய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஃஃஃ...பாடம்
    சொல்லிக் குடுக்க வேண்டியது
    குழந்தைகளுக்கா
    இல்லை பெரியவர்களுக்கா?...ஃஃஃ
    கட்டாயம் பெரியவங்களுக்குத்தான் சகோதரா...

    ReplyDelete
  4. //சசிகுமார் said... அருமை//
    நன்றி நண்பரே.

    ReplyDelete
  5. //RVS said...
    கொஞ்சம் வசன நடையில் இருந்தாலும், கருத்து அருமை இளங்கோ.

    அன்புடன் ஆர்.வி.எஸ். //

    நன்றி தலைவரே.

    ReplyDelete
  6. //ஆர்.கே.சதீஷ்குமார் said...

    இன்னும் பல கவிதைகளை படைத்து சமூக புரட்சி செய்ய வாழ்த்துக்கள்//

    அந்தப் புரட்சி நீங்க இல்லாமலா.. :). அப்பவும் நீங்கதான் வந்து ஆதரவு தரணும்.
    நன்றி சதீஷ்குமார்.

    ReplyDelete
  7. // ம.தி.சுதா said...
    கட்டாயம் பெரியவங்களுக்குத்தான் சகோதரா...
    //

    நன்றி சகோதரரே.

    ReplyDelete
  8. //புதிய மனிதா said...
    வாழ்த்துக்கள்//
    நன்றி நண்பரே.

    ReplyDelete
  9. சவுக்கடி... மூளையில எங்கயோ சுருக்குன்னு ஏறுது... ஒவ்வொரு வார்த்தையும் உண்மை..

    ReplyDelete
  10. //பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
    சவுக்கடி... மூளையில எங்கயோ சுருக்குன்னு ஏறுது... ஒவ்வொரு வார்த்தையும் உண்மை..
    //
    Thanks Prakash.

    ReplyDelete
  11. அர்த்தமுள்ள கேள்வி தாங்க.. நல்லா இருக்கு :-))

    ReplyDelete
  12. //Ananthi said...
    அர்த்தமுள்ள கேள்வி தாங்க.. நல்லா இருக்கு :-)) //

    தங்கள் வருகைக்கு நன்றிங்க.
    நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு தேங்க்ஸ். :)

    ReplyDelete