Friday, September 24, 2010

பாஸ்வேர்டாகிய பழைய காதலி !















குடும்பப் பெயர்களை
எண்களோடும் சிறப்பு எழுத்துக்களோடும்
சேர்த்து வளைத்து எழுதியதில்
ஒவ்வொரு முறையும்
கடவுச் சொல் பஞ்சம் அடைந்தது.

கடவுச் சொல்லை
மாற்றச் சொன்ன
இணையத் தளத்தில்
புதியதொரு சொல்லை இட்டேன்.

அது என்
பழைய காதலியின் பெயரென
சொல்லிவிட்டுப் போகிறான்
நண்பனொருவன்.

அது வெறும்
கடவுச் சொல் என
எப்படி அவனுக்குப் புரியவைப்பது ?.

படம் : இணையத்திலிருந்து.

17 comments:

  1. அருமை நண்பா ஆகா ஓகோ பேஸ் பேஸ் கவிதை ரொம்ப நன்னா இருக்கு.

    ReplyDelete
  2. சேர்த்து வளைத்து எழுதியதில்
    ஒவ்வொரு முறையும்
    கடவுச் சொல் பஞ்சம் அடைந்தது.//
    உங்க ரூட்டை சொல்லிப்புட்டீங்களே..மக்கா..

    ReplyDelete
  3. கடவுச் சொல்
    கவிதை கவிதை

    ReplyDelete
  4. // சசிகுமார் said...
    அருமை நண்பா ஆகா ஓகோ பேஸ் பேஸ் கவிதை ரொம்ப நன்னா இருக்கு.//

    நன்றி சசிகுமார்.

    ReplyDelete
  5. // ஆர்.கே.சதீஷ்குமார் said...

    சேர்த்து வளைத்து எழுதியதில்
    ஒவ்வொரு முறையும்
    கடவுச் சொல் பஞ்சம் அடைந்தது.//
    உங்க ரூட்டை சொல்லிப்புட்டீங்களே..மக்கா..
    //
    தங்கள் வருகைக்கு நன்றி சதீஷ். (அப்பாடா வெச்ச மொய் வந்திருச்சு :) )

    ReplyDelete
  6. //Chitra said...

    :-) Good one.
    //

    நன்றி சித்ரா அக்கா.

    ReplyDelete
  7. // உமாபதி said...

    கடவுச் சொல்
    கவிதை கவிதை
    //
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி உமாபதி.

    ReplyDelete
  8. அருமை நண்பா

    ReplyDelete
  9. ரொம்பவும் யதார்த்தம் நண்பா ...

    ReplyDelete
  10. // padaipali said...
    அருமை நண்பா//

    நன்றி படைப்பாளி நண்பா.

    ReplyDelete
  11. // மோனி said...
    ரொம்பவும் யதார்த்தம் நண்பா ...//

    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மோனி.

    ReplyDelete
  12. உங்கள் கவிதை ஆனந்தவிகடனில் வரும் அளவு தரத்துடன் உள்ளது,வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. //சி.பி.செந்தில்குமார் said...
    உங்கள் கவிதை ஆனந்தவிகடனில் வரும் அளவு தரத்துடன் உள்ளது,வாழ்த்துக்கள்//

    ஆஹா...
    தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி சி.பி.செந்தில்குமார் அண்ணா.

    ReplyDelete
  14. இப்ப எல்லாம் நான் தான் கடைசியா வர்றேனோ...?

    **** **** ******..
    ********** ***** ******...

    என்ன புரியலையா...?

    (உண்மையை வெளியில சொல்லாதீங்க.. குடும்பத்துக்குள்ள குழப்பம் உருவாகிடும்...)

    உங்க மனைவி உங்க பிளாக் பக்கம் வர்ரதில்லைன்னு நினைக்கிறேன்.. ஹி ஹி ..

    கவிதை நல்ல சிந்தனை..

    ReplyDelete
  15. பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

    //(உண்மையை வெளியில சொல்லாதீங்க.. குடும்பத்துக்குள்ள குழப்பம் உருவாகிடும்...)...///
    ஹஹ்ஹா... :)


    //உங்க மனைவி உங்க பிளாக் பக்கம் வர்ரதில்லைன்னு நினைக்கிறேன்.. ஹி ஹி ..//

    உண்மை.

    //கவிதை நல்ல சிந்தனை..// நன்றி பிரகாஷ்.

    ReplyDelete