Posts

Showing posts from 2011

அசடன் (இடியட்) நாவல்

Image
பியோதர் தஸ்தயேவ்ஸ்கி எழுதிய இடியட் நாவலை, எம்.ஏ. சுசீலா அம்மா அவர்கள் மொழிபெயர்த்து, மதுரை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. முன் வெளியீட்டு திட்டத்தில் பதிவு செய்திருந்த எனக்கு உடுமலை.காம் வழியாக இந்தப் புத்தகம் போன வாரம் என் கைக்கு கிடைத்தது. எம்.ஏ. சுசீலா அவர்களின் முந்தைய மொழிபெயர்ப்பான, குற்றமும் தண்டனையும் நாவலைப் பற்றிய எனது பதிவை இந்தத் தளத்தில் எழுதி இருந்தேன். அந்தப் பதிவை, அசடன் நாவலின் பின் பகுதியில் அச்சிட்டிருந்தார்கள். சொல்லப் போனால் எனது எழுத்தை அச்சில் பார்ப்பது இதுவே முதல் முறை, அதுவும் எனக்குத் தெரியாமலே. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. புத்தகம் என் கைக்கு கிடைக்கும் முன்னர், புத்தகத்தில் எனது பதிவு வெளியான செய்தியைத் தெரிவித்து, வாழ்த்திய சஹிதா அக்காவுக்கு என் அன்பு கலந்த நன்றிகள். சுசீலா அம்மாவுக்கும், பதிப்பகத்தாருக்கும் எனது நன்றிகள். அசடன் நாவலைப் படிக்கத் தொடங்கி, நூறு பக்கங்களை கடந்து விட்டேன். முழுவதும் படித்து விட்டு உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். அசடன் நாவலைப் பற்றிய ஜெயமோகன் அவர்களின் கட்டுரைகள். அசடனும் ஞானியும் அசடன் அசடன் நாவலைப் பற்றி...

பூமணி - விருது விழா

Image
இந்த வருடத்தின் 'விஷ்ணுபுரம்' விருது எழுத்தாளர் திரு. பூமணி அவர்களுக்கு, சென்ற ஞாயிறு அன்று கோவையில் வழங்கப்பட்டது. கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ரா என்றால், பின்னத்தி ஏர் பூமணி என்று விழாவில் பேசிய அனைவரும் சொன்னார்கள். அது போலவே எந்த வம்புக்கும் போகாத, தன் எழுத்தையே யாராவது 'இப்படி எழுதி இருக்குலாம்' என்றால், அவர் இப்படி பதில் சொல்வாராம் 'அப்படிங்களா, அடுத்த தடவ பார்க்கலாம்'. இவ்வளவுதான் அவர் பேசுவது என்று மேடையில் குறிப்பிட்டார்கள். நிகழ்ச்சியை 'காக்கைச் சிறகினிலே' பாடலோடு ஒரு சிறு பெண் ஆரம்பித்து வைத்தார். எப்பொழுதும் நான் ரசிக்கும் பாட்டு, அழகாக பாடி விழாவைத் தொடங்கி வைத்த அப்பெண்ணுக்கு எனது வாழத்துக்கள். கோவை ஞானி அவர்கள் விழாத் தலைமை உரையாற்றினார். பூமணிக்கும், அவருக்கும் உள்ள நட்பையும், பூமணி அவர்கள் எழுதி வெளியாகப் போகும், 'அஞ்ஞாடி' நாவலைப் பற்றி குறிப்பிட்டார். இயக்குனர் இமையம் பாரதிராஜாவை பேச அழைத்த செல்வேந்திரன், பூமணி அவர்களின் நாவல் வெளியான வருடங்களில், பாரதிராஜா அவர்களின் படங்கள் வெளிவந்ததை சுட்டிக் காட்டி, இதற்க...

குறும்படம் - LOVEFIELD

Image

நூலகம் தேவையா?

Image
நூலகம் என்பது வெறும் பொழுதுபோக்கு இடம் என்றுதான் நிறைய பேர் நினைத்திருப்பார்கள் போலத் தெரிகிறது. அது பொழுது போக்கு இடம் இல்லை, அறிவு பொதிந்து கிடக்கும் இடம் என்பதை ஆள்பவர்களுக்கு எப்படி புரிய வைப்பது?. நூலகம் தேவையா என்று கேட்டால், தேவை என்பது தான் என் நிலைப்பாடு. மருத்துவமனைகள் முக்கியமும் கூட, ஆனால் பரந்து கிடக்கும் சென்னை மாநகரில் அதற்கு ஓரிடம் கூடவா சிக்கவில்லை. போன அரசு கட்டிய நூலகம் என்பதற்காக, நூலகத்தை இடம் மாற்றும் முடிவு சரியானதல்ல. இந்த நூலகத்தை விட, பெரிய நூலகம் மற்றும் வசதிகள் கொண்ட ஓர் இடத்துக்கு மாற்றினால் பரவாயில்லை. மருத்துவமனையாகவே மாற்றினாலும், அதற்கு தகுந்தது போல இருக்குமா எனத் தெரியவில்லை. புதிதாக கட்டும்பொழுது தேவைகளை அறிந்து கட்ட முடியும். எல்லாத்தையும் விட்டுத் தள்ளுங்கள், இவர்களுக்கு ஓட்டுப் போட்டு அமரவைத்த நம்மை என்ன செய்யலாம்? எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அவர்களின் பதிவு: சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும் தமிழக அரசின் முடிவுக்குக் கண்டனம்

அரசுப் பள்ளிகளில் ஓர் ஆச்சரியப் பள்ளி

Image
மேட்டுப்பாளையம் அருகிலுள்ள, ராமம்பாளையம் எனும் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் திரு. பிராங்க்ளின் என்பவர் பற்றி புதிய தலைமுறை வார இதழ், ஈரோடு கதிர் அவர்களின் வலைத் தளம் மற்றும் எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் வலைப் பதிவு என பல முறை அந்தப் பள்ளியை பற்றி அறிந்திருந்தாலும் இன்னும் நேரில் செல்ல முடியவில்லை. போன சனிக்கிழமை அன்று, சாமக்கோடாங்கி பிரகாஷ் தான் அங்கு செல்லவிருப்பதால், 'வருகிறீர்களா' என்று கேட்டார். என்னால் அன்றும் செல்ல இயலவில்லை. நண்பன் கமலக்கண்ணன் செல்வதாக கூறினான். நண்பர்கள் அங்கு சென்று வந்ததை பிரகாஷ் தனது தளத்தில் பகிர்ந்திருக்கிறார். ஒரு அரசாங்கம் செய்ய முடியாத ஒரு செயலை, அந்த ஊர் மக்களும் அந்த ஆசிரியரும் சாதித்துக் காட்டி இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வணக்கங்கள். திரு.ஃபிராங்க்ளின் - புதிய தலைமுறையின் நம்பிக்கை இராமாம்பாளையம் துவக்கப்பள்ளி - புகைப்படங்கள் எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் வலைப் பதிவு நல்லார் ஒருவர் பள்ளியின் வலைத்தளம் இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி

ஓட்டுப் போட்டவன்

எல்லா நாளும் இந்நாட்டு மன்னர்களாய் வீதிக்கு கவுன்சிலர் வார்டுக்கு மெம்பெர் நகரத்துக்கு தலைவர் மாநகரத்துக்கு மேயர் தொகுதிக்கு உறுப்பினர் என்றிருக்க ஓட்டுப் போட்டவன் ஓட்டுப் போட்ட தினம் மட்டும் மன்னன்.

காப்பாத்திக்கோ

Image
கோவிலில் 'பையனக் காப்பாத்து' 'குழந்தைகளக் காப்பாத்து' என்று பாட்டி வேண்டிக் கொண்டிருக்க, குழந்தையோ கடவுளைப் பார்த்து 'உன்னையக் காப்பாத்திக்கோ' எனச் சொல்லிக் கொண்டிருக்கிறது. (மேலே உள்ள படங்கள் என் செல் பேசியில் எடுத்தவை)

நட்பின் இலக்கணம்

Image
நட்புக்கு இலக்கணமாக சங்க காலத்தில் இருந்து இருவர் சுட்டிக் காட்டப்படுகிறார்கள். பிசிராந்தையாரும் சோழனும். அப்பாடலைப் பற்றி, ஆனந்த விகடனில், எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்கள் 'சங்க சித்திரங்கள்' பகுதியில் எழுதியிருந்தார். என் டைரியில் எழுதி வைத்திருந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். ============== அன்னச் சேவ லன்னச் சேவல் ஆடுகொள் வென்றி யடுபோ ரண்ணல் நாடுதலை யளிக்கு மொன்முகம் போலக் கோடுகூடு மதிய முகில்நிலா விளங்கும் மையன் மாலையாங் கையறு பிணையக் குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி வடமலைப் பெயர்குவை யாயி னிடையது சோழநன்னாட்டுப் படினே கோழி உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ வாயில் விடாது கோயில் புக்கெம் பெருங்கோக் கிள்ளி கேட்க விரும்பிசிர் ஆந்தை யடியுறை எனினே மாண்டநின் இன்புறு பேடை யணியத்தன் நன்புறு நன்கல நல்குவ னினக்கே. -- பிசிராந்தையார் பொருள்: ======== அன்னச் சேவலே, அன்னச் சேவலே போரில் வென்று, யானை மீதேறி ஊர்க்கோலம் வரும் மன்னனின் முகம்போல மலைமடிப்பில் முழுமதி ஒளிரும் இந்த அழகிய இரவில் நான் மட்டும் துயருற்று இருக்கிறேன். நீ குமரிக் கடலில் இருந்து அயிரை பிடித்து உண்டு வடக்குமல...

பட்டு, மயில் மற்றும் ஏற்காடு

Image
பட்டாம் பூச்சி தவிர அனைத்து படங்களும் ஏற்காட்டில் எடுத்தவை. பட்டாம் பூச்சியை படம் பிடித்தது வீட்டில். (படங்களை கிளிக் செய்து பார்க்கவும்)

எனது டைரியிலிருந்து - 4

ஈரம் படிந்த வீடு ============== எப்படி விடுபட்டேன்.. நான் மட்டும்! ஒரு சொல், ஒரு ஜாடை ஒரு முகக்குறி காட்டியிருந்தால் அந்த இரவில் நிழலாய் தங்கியிருப்பேனே உன்னோடு.. தொப்பூழ் கொடி சுவாசம் தந்த தாயே நீ மாரடைத்து இறந்த அந்த சுவாச கணத்தில் என் முகம் ஓடிற்றா அம்மா தகர மயானம் முன் குவிந்த விராட்டிப் படுக்கையில் நீ இரட்டை வடம் மார்புச் சங்கிலி மேல் மூத்தவனுக்கு குறி. அன்னம் பொங்கி அடுப்படியில் வெந்த உன் வலது கரத்தில் குறடு நுழைத்து வெட்டியா வளையலோ அடுத்தவனுக்கு. மகளே உனக்கு என்னம்மா வேண்டுமென்ற அப்பாவிடம் கொடிக்கம்பியில் காயும் உன் நைந்த உள் பாவாடை காட்டி அழுகிறேன் பெருங்குரலில்.. - பா. சத்தியமோகன் (ஆனந்த விகடன்)

இரு கப் டீ

போன வாரம் புதிய தலைமுறை இதழில், எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எழுதும் 'மனிதர் தேவர் நரகர்' தொடரில் தனது நண்பர் தோழர் சோமு என்பவரைப் பற்றி எழுதியிருந்தார். கல்லூரி வேலை, பொதுப் பணித் துறை வேலை என தான் வேலை செய்த இடங்களில் மலிந்து கிடந்த ஊழல்களை வெறுத்து வெளியே வந்தவர் அவர். ஒரு நாள் சோமு மற்றும் சோமுவின் மனைவி ஆகியோரிடம் பிரபஞ்சன் பேசியிருந்ததை கட்டுரையின் ஓரிடத்தில் பகிர்ந்திருந்தார். ======================= 'நான் சொல்றேன் காம்ரேட். நான் சினேகத்தைக் கேட்டேன். இவர், ஒரு டீக்குத்தான் என்னிடம் காசு இருக்கு. உங்ககிட்ட சில்லறை இருந்தா வாங்க. டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்னார்' 'சாப்பிட்டீங்களா' ' எங்களுக்கு முன்னால இரு கப் டீ. எங்க இரண்டு பேரின் வாழ்க்கையும் போல. அதை எப்படியும் குடிக்கலாம். ஆடிக்கொண்டோ, பாடிக்கொண்டோ குடிக்கலாம். ஆனால் டீ சிந்திடக்கூடாது. ஏன்னா, மறுமுறை டீ கிடைக்காது . அப்புறம் மூன்று வருசத்துக்குப் பிறகுதான், என் காதலை அவர்ட்ட சொன்னேன்' ======================= நாம் பார்க்க அல்லது படிக்கத் தவறிய மனிதர்கள் நம் பக்கத்து வீடுகளில் கூட இருக்...

சிக்னல்

Image
சிக்னல் சிக்னலில் நகர்ந்து கொண்டிருக்கின்றன வாகனங்கள் கைக்குட்டை, சாக்ஸ், பூ மற்றும் இன்னபிற விற்கும் சிறுவர்களின் கல்வியும் அவர்களின் பால்ய சந்தோசங்களும் அவர்கள் தொலைத்த நிமிடத்தில் இருந்து. நகராமல் அப்படியே இருக்கிறது. *************** ஆம்புலன்ஸ் மனிதம் மறந்து விட்டதன் அடையாளமாய் அவசர வண்டிக்கு வழிவிடச் சொல்லி காவலர் ஓடிவருகிறார். *************** சுதந்திரம் ஊரெல்லாம் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் அன்றும் வாட்ச்மேன் தாத்தா கொடியேற்றி காலையில் கொடுத்த சாக்லேட்டோடு வேலைக்கு வந்தார். படம்: இணையத்தில் இருந்து - நன்றி.

தொலைக்காட்சி உலகம்

இருபத்தி நாலு மணி நேர செய்திகள் இருபத்தி நாலு மணி நேர விளையாட்டு இருபத்தி நாலு மணி நேர திரைப்படங்கள் இருபத்தி நாலு மணி நேர பாடல்கள் என இருபத்தி நாலு மணி நேரத்தில் ஒரு நிமிடமும் வீணாவதில்லை.. விடுமுறை தினங்களும், பண்டிகைகளும் நடிகர் பேட்டிகள், விளம்பரங்கள் முதல் முறையாக ஒளிபரப்பாகும் வரலாற்றுப் படங்கள் என சுமூகமாகவே கழிகின்றது.. மீதி நாட்களுக்கு, இருக்கவே இருக்கிறது.. எப்போது முடியும் எனத் தெரியாத நெடுந் தொடர் கதைகள்.. சமையலுக்கு, அழகுக்கு, நோய்களுக்கு, மனை வாங்குவதற்கு, ராசிக் கற்கள், ஜோதிடம் என எல்லாவற்றையும் சொல்லித் தருகிறார்கள் அல்லது விற்கிறார்கள். பெரும் நேரத்தை விழுங்கும் இதன் இயக்கத்தை நிறுத்தினால் நம் உலகமும் சுருண்டு கொள்கிறது நம் வீட்டுக்குள்.

பாலிதீன் பைகளில் டீ !

இரண்டு மூன்று நாட்களுக்கு வீட்டு வேலைகள் இருப்பதால் , வேலைக்கு ஆட்கள் வந்திருந்தார்கள் . பதினோரு மணிக்கு டீ வாங்க காசு கேட்டார்கள் . வேலைக்கு வந்தது மூன்று பேர் . ஒருவர் மட்டும் பணத்தை வாங்கிக் கொண்டு கடைக்குப் போனார் . வரும்போது , பாலிதீன் பையில் வாங்கிய டீயோடு , கூடவே மூன்று பிளாஸ்டிக் கப்புகளும் வாங்கி வந்திருந்தார் . இப்படி டீ வாங்கி குடிக்காதீர்கள் என்று சொன்னேன் . காதிலேயே போட்டு கொண்டதாகத் தெரியவில்லை . இவன் போய் சொல்ல வந்துட்டான் என நினைத்திருக்கலாம் . எல்லா டீக் கடைகளிலும் பாலிதீன் பைகளில் கொதிக்க கொதிக்க ஊத்தி தருகிறார்கள் . இப்படி குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் அவர்களுக்கு தெரிந்திருக்குமா ?. இப்படி குடிப்பவர்கள் பெரும்பாலும் கட்டிட வேலைக்கு செல்பவர்களே . பிளாஸ்டிக் பைகளுக்கு தடை போட்டாலும் , மறைத்து வைத்து பயன்படுத்தும் , நமக்கு அதன் தீமைகள் எப்போது தெரியப் போகின்றன ?. வீதிக்கு நாலு டீக் கடைகள் இருக்கும் நம் ஊர்களில் எப்படி இதை சமாளிப்பது ?. என்னதான் தடை போட்டாலும் , மக்களாகத் ...

குறும்படம்: துருவ நட்சத்திரம்

Image
நேற்று இந்த 'துருவ நட்சத்திரம்' குறும்படம் கண்ணில் பட்டது. பிடித்ததால் உங்களுக்காக இங்கே;

சிநேகம்

Image
எப்பொழுதும் தேங்காய்த் தொட்டி தேடி அலையும் கண்ணம்மாவுக்கு ஊர் வைத்த பெயர் பைத்தியக்காரி. பூ வரைந்த பாவாடையும் பாவாடை வரை நீண்ட மேல் துணியும் ஒரு கையில் அடுக்கி வைத்த தேங்காய்த் தொட்டிகளும் மேல் தொட்டி நிறைய கூழாங் கற்களுமாக வீதியில் நடந்து கொண்டிருப்பாள். தொட்டியும், கூழாங் கல்லும் எங்கே கிடந்தாலும் ஓடிப் போய் அள்ளிக் கொள்ளுவாள் யாராவது திட்டினால், கெட்ட வார்த்தைகளும் கல்லடியும் கிடைக்கும். மனிதர்கள் யாரும் தர முடியாத சிநேகத்தை தான் கண்டெடுக்கும் ஒவ்வொரு தொட்டியிலும், கல்லிலும் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறாள் கண்ணம்மா.. படம்: இணையத்தில் இருந்து.. நன்றி.

புதிய இடம்: வால்பாறை

Image
கொஞ்ச நாட்களுக்கு முன்னர் வால்பாறைக்கு நண்பர்கள் சென்றிருந்தோம். மலை என்றாலே பனி, சில்லென்ற காற்று, பசுமை, நெடிது உயர்ந்த மரங்கள், எப்பொழுதும் பூ பூவாய் தூறும் மழை என நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். நாங்கள் செல்லும் வழியில் நிறைய குரங்குகளும், ஒரே ஒரு வரை ஆடும் பார்க்க நேர்ந்தது. போகும் வழியெல்லாம் தேயிலைத் தோட்டங்கள். மனிதன் மலை வளங்களைச் சுரண்டிக் கொண்டு இருந்தாலும், அவைகள் இன்னும் கொஞ்சம் தேக்கி வைத்திருக்கின்றன. அவசர கால உலகத்தில், இது போன்ற இடங்களே நம்மை ஒரு மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கின்றன. அங்கே எடுத்த ஒரு சில புகைப்படங்கள்;

எல்லோருக்கும் மழை

Image
எல்லோருக்கும் பெய்கிறது மழை 'காலையில் இருந்து இப்படித்தான் கொட்டிட்டு கெடக்குது ஒரு வேல செய்ய முடியல' 'எப்பதான் நின்னு தொலையுமோ' 'இன்னைக்கு ஒண்ணும் பண்ண முடியாது' 'மழ நின்னாதான் பொழப்பு ஓடும்' என்பவர்களுக்கும் சேர்ந்தே பெய்து கொண்டிருக்கிறது மழை. படம்: இணையத்தில் இருந்து.. நன்றி.

நின்னைச் சரணடைந்தேன்

Image
நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் பொன்னை உயர்வை புகழை விரும்பிடும் என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று... துன்பமினியில்லை.. சோர்வில்லை.. தோற்பில்லை.. உச்சி தனை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதடி மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நின்றன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா போனதெல்லாம் கனவினைப் போல் புதைந்தழிந்தே போனதனால் நானும் ஒரு கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ? காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் கோலமும் பொய்களோ ? - அங்கு குணங்களும் பொய்களோ காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ

புகை புகையாக

தூயோன் புத்தகத்தில், கோபிகிருஷ்ணன்... முயற்சி.. திருவினை பதினேழு ஆண்டுகள் முழு மூச்சாக ஊதித் தள்ளியதில் உனக்கு நுரையீரல்களில் அரிப்பு நோய் கண்டிருக்கிறது என்று வருத்தத்துடன் அவர் சொன்னபோது இவ்வளவு நாள் பட்ட கஷ்டம் வீண்போகவில்லை என்றானதில் ஒரு ஆத்மீக ஆனந்தம். ************************************** திருப்தி புகை புகையாகப் புகைத்ததில் ஒரு நுரையீரலை இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று அவர் சொன்னபோது ஒரு வேஷ்டி இருக்கும்போது இன்னொன்றுக்கு ஆசைப்படுவது ஆடம்பரம் என்று சொன்ன மகாத்மாவின் நினைவு வந்து ஆனந்திக்கச் செய்தது.

நாலணா

Image
கவிஞரும், பதிவுகள் எழுதி வரும் திரு.மகுடேசுவரன் அவர்கள் தனது வலைத் தளத்தில் விலையின் தாழ்நிலை அலகுகள் என்ற பதிவில் இருபத்தைந்து பைசா நாணயம் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டதைப் பற்றி எழுதியிருக்கிறார். அதைப் படித்ததன் விளைவே இந்தப் பதிவு. "காலணாவுக்கு தேறாதவன்" என்று நீங்கள் யாரோ ஒருவர் சொல்லிக் கேட்டிருக்கலாம். ஆனால், இப்பொழுது அந்தப் பைசாவே வழக்கத்தில் இல்லாமல் ஆகிவிட்டது. கடந்த சில வருடங்களாகவே, எந்தப் பொருளும் இருபத்தைந்து காசுகள் வைத்து விற்கப்படுவதில்லை. சில சமயங்களில் வெற்றிலை, வாழை இலை என சிலப் பொருட்கள் மட்டுமே அந்த விலையில் விற்கப்படுகிறது. தனியாக கேட்டால் 1.50 எனவும், நிறைய வாங்கினால் நூறு வாழை இலைகள் 125 ரூபாய் எனவும் மாறிவிட்டது. சின்ன வயதில் இருபத்தைந்து காசுகள் கொடுத்து வெற்றிலை, பாக்கு என்றும், பால் ஐஸ், சேமியா ஐஸ் என்று வாங்கித் தின்றது நினைவுக்கு வருகிறது. நாலணாவுக்கு கடையில் வெற்றிலை கேட்கும் பாட்டிகளுக்கு இது தெரியுமா? நான் இங்கிலாந்துக்கு சென்றபோது, கண்டு ஆச்சரியப்பட்டது இன்னும் அந்நாட்டில் சில்லறைக் காசுகள் இருப்பதைப் பார்த்து தான். அங்கே, ...

ராமன், லட்சுமணன் மற்றும் அனுமார்

நண்பர்கள் நாங்கள் நால்வர் ஒருநாள் வெளியே சுற்றி வரலாம் என்று கிளம்பினோம். முந்தின இரவில் மழை பெய்து குளிராக இருந்தது சாலை. போகும் வழியில், நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த சின்ன டிபன் கடை முன் வண்டியை நிறுத்தி, சாப்பிட உள்ளே சென்றோம். கடையின் முன் தோசை மாஸ்டர், உள்ளே ஒருவர், கல்லா அருகில் லுங்கி கட்டி முன்டாப் பனியன் அணிந்த ஒருவர் என சிறு கடை. சாப்பிட்டு முடித்து நாங்கள் வெளியே வரவும், ராம லட்சுமண அனுமார் வேஷம் போட்ட மூன்று பேர் கல்லாக் காரனிடம் ஒரு நோட்டை நீட்டிக் கொண்டிருந்தார்கள். ராமருக்கும், லட்சுமணனுக்கும் தலையில் கிரீடம். அனுமாருக்கு பிளாஸ்டிக் வாயும், வாலும். அண்ணன் தம்பிகள் இருவருக்கும் நீலக் கலர் முகம், கை என அப்பி இருந்தனர். அனுமாருக்கு கலர் இல்லை, சரி அவர் மனித இனம்தான் என நினைத்து அப்படியே விட்டிருக்கலாம். மூவருக்கும் காலில் சலங்கைகள். மடி மடியாக வைத்து தைக்கப்பட்ட பச்சை, மஞ்சள், சிவப்பு கலர் துணிகள். துவைத்து நெடு நாட்கள் ஆகியிருக்க வேண்டும். ராமர் கையில் மட்டும் ஜிகினா துணி சுற்றிய வில். "மொதலாளி இல்ல.. கெளம்புங்க.." என்றார் கல்லாக்காரர். "இல்லீங்க.. ஒவ்வொரு ...

சிறு துளிகள் (25/06/2011)

சேனல் 4 இலங்கையில் தமிழர்கள் வதம் செய்யப்பட்ட காட்சிகளை இங்கிலாந்து நாட்டின் சேனல் நான்கு ஒளிபரப்பி இருக்கிறது. எந்த ஊடகங்களும் இதைப் பற்றிய விவவரங்களை வெளியிடவில்லை இந்தியாவில். பத்தோடு சேர்ந்து இதுவும் ஒரு செய்தியாக சில சேனல்களில் படித்தார்கள். இந்த வார விகடனில் வெளியான கட்டுரையில் 'அந்தக் காட்சிகளை இங்கு இருக்கும் ஊடகங்கள் திரும்ப திரும்ப காட்ட, அது என்ன சாமியாரின் படுக்கை அறையா?' என்று இறுதியாக கேட்டிருந்தார் கட்டுரை ஆசிரியர். இதைப் பார்க்கும்பொழுது நமக்கு என்ன தேவை என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக ஊடகங்கள் மாறி வருகின்றன என்பதைத்தான் காட்டுகிறது. பெட்ரோலியப் பொருட்கள் செய்தி ஒன்று: கச்சா எண்ணெய் விலை குறைவால், மும்பை பங்குச் சந்தை ஐநூறு புள்ளிகள் ஒரே நாளில் ஏற்றம். செய்தி இரண்டு: கச்சா எண்ணெய் விலை உயர்வால், தத்தளித்த (!!) எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை ஈடு கட்ட நள்ளிரவு முதல் டீசல் மூன்று ரூபாயும், சிலிண்டர் ஐம்பது ரூபாயும் உயர்ந்தது. இதில் எது உண்மை.. ?? எது நடக்கிறதோ இல்லையோ இன்னும் விலைவாசி ஏறத்தான் போகிறது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் நாம் நம் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக...

எனது டைரியிலிருந்து - 3

தோற்ற மயக்கம் எஸ்.ஆர். இராஜாராம் (ஆனந்த விகடன்) துல்லிய நீர்ப்பரப்பில் துறவிபோல் வந்தமர்ந்து மெல்லிய தன் உடலை மேற்பரப்பில் பிரதியாக்கி தண்ணீரில் தவம் செய்யும்.. பார்ப்பதற்கு பரவசம்தான் மீனுக்குத்தானே தெரியும் கொக்கின் குரூரம். ============================================ துபாய் இ. இசாக் (ஆனந்த விகடன்) கனவுகளில் வந்து கொஞ்சுகிற முகத்தைக் காணப் போகிற மகிழ்ச்சி எனக்குள். ரசித்து ரசித்து வாங்கிய பொம்மைகளோடு காத்திருக்கிறேன் நெடுநேரமாக. வீடு நுழைந்த முகம் கண்டு தொட்டுக் கொஞ்சி மகிழ நெருங்கையில் 'யாரும்மா.. இவங்க?' என்கிறாள் மழலை மொழியில் என் மகள். ============================================ வதை ஜி. விஜயலெட்சுமி (ஆனந்த விகடன்) திருவிழாக் கூட்டத்தில் குழந்தையைத் தொலைத்துவிட்டு தவிக்கையில்.. சின்ன வயதில் வீட்டுத் தொழுவத்தில் தெருநாய் ஈன்ற குட்டிகளை கோணிப்பையில் திணித்து ஊருக்கு வெளியே கள்ளிக்காட்டில் கொண்டுபோய் விட்டதெல்லாம் நினைவுக்கு வருகிறது. ============================================ கவனம் சே. சதாசிவம் (ஆனந்த விகடன்) நகரும் தார்ச்சாலை இருபக்க மரங்கள் பசுமையான வயல்வெளிகள் முப்பரி...

என் கேமராவின் சிறைக்குள்..

Image
நாங்க எப்பவுமே அழகுதான் ( இடம் : மேட்டுப்பாளையம் ) எங்களப் பிடிச்சு கூண்டில் அடைச்சு ரசிக்கிற உலகம் ( இடம் : மேட்டுப்பாளையம் ) நாங்க இருக்கிற இடம் எப்பவும் இப்படி பசுமையா இருக்கும் ( இடம் : ஏற்காடு ) நாங்களும் பசுமைக்கு காரணம் ( இடம் : ஏற்காடு ) எவ்வ்ளோ உசரம் !! (இடம்: அவினாசி பெரிய கோவில்) வருசம் ஒரு தடவதான் இப்படி. (இடம்: அவினாசி தெப்ப தேர் திருவிழா) நாங்க எப்பவும் இப்படித்தான் , சிரிச்சுக்கிட்டே இருப்போம் . படங்கள் அனைத்தும் என் செல்போனில் எடுத்தவை.

ஜோசியம்

Image
" எட்டாமிடத்தில் சனி இருக்க துன்பம் போகுமப்பா நாலாமிடத்தில் செவ்வாய் இருக்க " எனப் பாடிக் கொண்டே சென்றார் ஜோசியர் . அவருடைய பேர் என்னவென்றே எனக்கு தெரியாது . ஆனால் ஜோசியர் என்றால் ஊருக்கே தெரியும் . சுற்றி உட்கார்ந்து இருந்த அனைவரும் அவரையே உற்று பார்த்து கொண்டிருந்தோம் . கணீரென்ற குரல் , வயதாகி விட்டதால் சற்று பிசிறடித்தது . கிருபானந்த வாரியாருக்கு அண்ணன் போலிருப்பார் . நான் பார்த்த முதல் சுருட்டு பிடித்தவர் இவர்தான் . பக்கத்தில் போனாலே சுருட்டு வாசம் வீசும் . மனைவி மகன் இல்லாததால் தனியாகத்தான் இருந்தார் . அவராகவே சமைத்து கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தார் . பக்கத்துக்கு ஊரில் இருந்தெல்லாம் சிலர் வந்து ஜோசியம் கேட்டு விட்டு போவார்கள் . ஒரு சிலர் , பைக்கில் உட்கார வைத்து வீட்டுக்கே கூட்டிபோய் ஜோசியம் பார்த்துவிட்டு திரும்ப கொண்டு வந்து விடுவார்கள் . எங்கள் வீட்டுக்கு மாமா அத்தை மற்றும் சில சொந்த காரர்கள் வந்தால் ஜோசியம் பார்க்க வேண்டும் என்பார்கள் . உடனே என்னை அவருடைய வீட்டுக்கு அனுப்பி , அவரை ...

காதல் செய்வீர் உலகத்தீரே ! - 4

Image
அனைவரின் காலடித் தடங்களையும் உள் வாங்கிக் கொண்டு அமைதியாக கிடக்கும் கடற்கரை ஈர மணல் போல் நீ பேசிய சொற்களை அசைபோட்டுக் கொண்டே ஆழ்ந்து கிடக்கிறேன் ! படம் : இணையத்தில் இருந்து . நன்றி

எனது டைரியிலிருந்து - 2

குறையொன்றுமில்லை சு.வெங்குட்டுவன் (ஆனந்த விகடன்) வழக்கம்போல் இம்முறையும் வானம் பொய்த்திருக்கும் இருக்கும் தண்ணிக்கு வெச்சுள்ள கத்தரியில் இலைச்சுருட்டை விழுந்திருக்கும் நிலவள வங்கியின் நகை ஏல அறிவிப்பு தபால்கார்டில் வந்து சேரும் காதுகுத்தும் பிள்ளைக்கு தோடு போடவேண்டுமென இளைய தங்கை சொல்லிப்போவாள் முகங்கண்ட மறுகணமே அம்மாவென குரலெழுப்பும் காளைகளை விற்றுவிட்டு ஊர் திரும்புவாய் நீ விரும்பிய பெண் தான் விரும்பும் புருசனுடன் பஸ் ஸ்டாண்டில் எதிர்ப்படுவாள் திரும்பி நிற்கும் உன்னிடத்தே வலிய வந்து உரையாடி சௌக்கியமா எனக் கேட்பாள் நல்ல சௌக்கியம் என்று சொல். ****************************** ****************************** ********** பாலபாரதி ஆனந்த விகடன் ஜிலீர் ஆசிரியராகும் கனவு உடைந்து நொறுங்கியது அரசு மது பாட்டில்களை அடுக்கி வைக்கும் வேலையில்... ****************************** ****************************** ********** மறதி கற்புக்கரசி கண்ணகி, சீதை நளாயினி பெயரெல்லாம் நினைவில் நிற்கிறது கற்றுக்கொடுத்த தமிழ் ஆசிரியை பெயர்தான் மறந்துவிட்டது ****************************** ****************************** ****...

ஓர் இளம் விஞ்ஞானி

Image
போன வாரத்தில் ஒரு நாள் பாலாஜி என்னும் சிறுவன் சில அறிவியல் கருவிகளைக் கண்டுபிடித்து, அதற்கு பரிசுகள் பெற்றுள்ளதாகவும், அந்த சிறுவனுக்கு சில உதவிகள் தேவைப் படுவதாகவும், நேரம் இருக்கும்போது நேரில் அவனைச் சந்திக்க வாருங்கள் என்றார்கள் நண்பர் ஒருவர். அன்று மாலையே நானும், கமலக்கண்ணனும் அப்பையனின் வீட்டுக்குப் புறப்பட்டோம். கோவை அருகிலுள்ள, அன்னூரில் இருந்து தென்னம்பாளையம் செல்லும் வழியில் வாகரயாம்பாளையம் என்னும் சிறு ஊரில் இருக்கிறது பாலாஜியின் வீடு. அப்பாவுக்கு நெசவுத் தொழில். பாலாஜி ஒன்பதாம் வகுப்பும், அவனின் தம்பி ஹரிஹரன் எட்டாம் வகுப்பும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்கள் வீட்டுக்குப் போனதும், அவன் வாங்கிய சான்றிதழ்கள், கேடயங்களைக் கொண்டு வந்து காண்பித்தான் பாலாஜி. நாங்கள் வருகிறோம் என்று தகவல் சொல்லியிருந்ததால் ஓரத்தில் ஒரு ஸ்டூலின் மீது, ஒரு கருவி மாதிரி வைத்திருந்தான். அதைப் பற்றி பேச ஆரம்பித்தான். (தம்பி ஹரிஹரனுடன், பாலாஜி - கருவியைப் பற்றி விளக்குகிறான்) "இதுக்கு பெயர் கார்பநேட்டர். அதாவது தமிழில் புகைநீக்கி, இதைப் பயன்படுத்தி நாம் காற்றில் கலந்துள்ள...

கதையெனும் நதியில் - 2

ஆ . மாதவன் பாச்சி ஒரு கடைத்தெருவில் வாழ்ந்து வரும் ஒருவனைப் பற்றியும், அவன் வளர்த்த பாச்சி என்ற நாயைப் பற்றியும் கதை சொல்கிறது. எந்த சொந்தமும் இல்லாத தெருவோரத்தில் வாழ்ந்து வரும் நாணுவுக்கு, பாச்சி வந்த பிறகுதான் ஒரு வேலையும் தங்க இடமும் கிடைக்கிறது. கதையின் முதல் வரியே 'பாச்சி செத்துப் போய்விட்டாள்' என்றுதான் ஆரம்பிக்கிறது. சக மனிதனை மதிக்கத் தெரியாத உலகத்தில், கதியற்று இருப்பவர்களுக்கு செல்லப் பிராணிகள் தானே ஆறுதலைத் தர முடியும். பொய் சொல்லத் தெரியாத, எதையும் எதிர்பார்க்கத் தெரியாத 'பாச்சி' போன்ற விலங்குகள் தான் உலகில் மொழியும், சொற்களும் இல்லாத அன்பை, வாலாட்டிக் கொண்டு தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. பெருமாள் முருகன் குமரேசனின் அதிர்ஷ்டங்கள் நான்கு ஒரு சிலரை நீங்கள் கவனித்திருக்கலாம், ஒரு பொருள் எங்கே இருந்ததோ அங்கேயே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். எதிலும் ஒரு ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கொஞ்சம் மாறி இருந்தால் கூட, கோபத்தில் யாரை வேண்டுமென்றாலும் திட்டுவார்கள். அவர்களுக்குத் தெரிந்தது அது அது அங்கங்கே இருக்க வேண்டும். இந்த ஒழுங்கு சில வேள...

தண்ணீர் - அசோகமித்திரன்

Image
தண்ணீர். ஓர் அறிவுள்ள உயிரிலிருந்து எல்லா உயிர்களுக்கும் ஆதாரம் தண்ணீர் மட்டுமே. 'தண்ணீர்' நாவலின் முன்னுரையில் அசோகமித்திரன் அவர்கள்; 'வாழ்க்கையில் உன்னதமானதெல்லாம் இலவசம் என்ற பழமொழி அன்று உண்டு' என்று கூறுகிறார். இலவசமாக இருந்த தண்ணீர், வரி விதிக்கப்பட்ட பொருளாக மாறிய காலத்தில் நாம் இருக்கிறோம். நட்ட நடு இரவில் தண்ணீர் வரும். எழுந்து பிடித்து வைக்க வேண்டும். ஒரு வாரம் குழாயில் வரவில்லை என்றால், லாரி தண்ணி பிடிக்க வரிசையில் நிற்க வேண்டும். குடிப்பதற்கு சரி, மற்ற வேலைகளுக்கு; அதற்கு உப்புத் தண்ணீர். குடம் ஒரு ரூபாய் என வாங்க வேண்டும். பிடித்த தண்ணீரை சிக்கனமாக புழங்க வேண்டும். தண்ணீர்ப் பிரச்சினையும் இருந்து, அந்த இடத்தில் வாடகைக்கு குடியிருப்போரின் நிலைமை, அதோ கதிதான். அதிலும் கோடை காலத்தில், தண்ணிக்கு வீதி வீதியாக குடங்களை தூக்கிக் கொண்டு போவததைத் தவிர வேறு வழியே இல்லை. தண்ணீருக்கு அலைந்த கதைகளைச் சொன்னால் அதற்கு முடிவேயில்லை. அதிலும் சென்னை போன்ற மாநகரங்களில், எப்பொழுது தண்ணீர் வருமெனத் தெரியாத குழாய்; குடம் ஒரு ரூபாய் என விற்கும் வீட்டுக்காரர்கள்; கா...

உறங்காத தெரு

Image
அங்கங்கு குப்பை கிடக்கும் இந்தத் தெருவின் காலைப் பொழுதுகளில் அழகிய கோலங்கள், பால் வண்டிகளின் ஓசைகள் நடை செல்வோரின் செருப்போசைகள் வேப்ப மரக் காக்கையின் சத்தம் வீடு திரும்பும் கூர்க்கா என விடியும்.. அலுவலகம், பள்ளி என சரசரக்கும் மக்கள் கிளம்பிப் போன பின்னர் காய்கறி வண்டி, தபால் எனவும் மாலைப் பொழுதுகளில் குழந்தைகளின் சத்தம் எனவும் நீள்கிறது பகல்... மெல்லிய வெளிச்சம் மட்டும் பரவிக் கிடக்கும் இரவுகளில் நைட் ஷிப்ட் போய் வரும் ஓரிருவர் திரும்ப வரும் கூர்க்கா சுற்றி வரும் நாய்கள் எனவும்.. தெரு எப்போதும் உறங்குவதேயில்லை. ************* புகைப்படம் http://www.flickr.com/photos/seeveeaar/3837563809/ இங்கிருந்து.. நன்றி.

சாப்பாடு

Image
இந்தப் பெருநகரத்தில் உணவுக்கு அலைவதென்பது தினசரி வாடிக்கையாகி விட்டது. என்ன செய்தாலும் ஒரு நல்ல உணவகத்தை கண்டு பிடிக்க முடிவதில்லை. அப்படியே இருந்தாலும் மாதத்தில் பெரும் பணம் அதுக்கே கொடுக்க வேண்டிய அளவு விலைப்பட்டியல் இருக்கிறது. அப்படியே நமது பணம் காலியானாலும், அடுத்த நாள் நமது வயிறு ஓர் ஆட்டம் ஆடி நிற்பதை நாம் ஒன்றும் செய்ய முடியாது. இன்னும் மீறிப் போனால் மருத்துவமனைக்குச் சென்று காட்டக் கூடிய அளவு நிலைமை மோசம் ஆகலாம். சைவ, அசைவ உணவகம் என்று இல்லை. எல்லா இடத்திலுமே நாம் வாயைப் பிளக்கும் அளவுக்கு விலைகள். இதில் அசைவ உணவகம் பக்கம் சென்றால் இப்பொழுது இருக்கும் பெரிய ரூபாய் நோட்டு மதிப்பு இல்லாமல் ஒருவர் பசியாறுவது சிரமம். உணவக முதலாளிகளைச் சொல்லியும் குறையில்லை, குளிரூட்டப் பட்ட அறைகள், வாசலிலேயே சலாம் போடும் பணியாளன்(அந்தக் காலத்து ராஜா உடை முரண்), மேசைக்கு ஒரு ஆள், துடைக்க ஒரு ஆள், குழந்தைகள் விளையாட தனியாக ஒரு இடம், சிறு சிறு தொட்டி அழகுச் செடிகள், கிளம்பும் போது இலவசமாக வைக்கப் படும் வாழைபழம் (ரொம்ப சிறுசாக இருக்கும்), பீடா, இனிப்பு சோம்பு என அவ்வளவையும் அவர்கள் செலவில் செய்ய வேண்ட...