Wednesday, August 25, 2010

உனக்கும்.. எனக்கும்..













ஒவ்வொரு முறையும்
சண்டை முடிந்து
சமாதானம் ஆகிறோம்..

காக்கையின் முன் வைத்த
படையல் இலையில்
ஏதோவொன்றை
கவ்விக் கொண்டு பறப்பது போல் ...

ஏதோவொரு காரணம்
கிட்டி விடுகிறது
அடுத்த நாள்
சண்டையைத் தொடங்க...

3 comments:

  1. அதன் பெயர் சண்டை இல்லீங்க... ஊடல்! கவிதை என்னை ரசிக்க வைத்தது! வாழ்த்துக்கள் இளங்கோ!

    ReplyDelete
  2. // வைகறை said...
    அதன் பெயர் சண்டை இல்லீங்க... ஊடல்! கவிதை என்னை ரசிக்க வைத்தது! வாழ்த்துக்கள் இளங்கோ! //
    அன்புள்ள வைகறை, தங்களின் வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  3. ஊடல், கூடல் - வாழ்வியல் தத்துவம். இன்றைய காலத்தில் ஊடல், விவாகரத்து என்றாகி விட்டது.

    ReplyDelete