Monday, August 1, 2011

புதிய இடம்: வால்பாறை

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் வால்பாறைக்கு நண்பர்கள் சென்றிருந்தோம். மலை என்றாலே பனி, சில்லென்ற காற்று, பசுமை, நெடிது உயர்ந்த மரங்கள், எப்பொழுதும் பூ பூவாய் தூறும் மழை என நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். நாங்கள் செல்லும் வழியில் நிறைய குரங்குகளும், ஒரே ஒரு வரை ஆடும் பார்க்க நேர்ந்தது. போகும் வழியெல்லாம் தேயிலைத் தோட்டங்கள்.

மனிதன் மலை வளங்களைச் சுரண்டிக் கொண்டு இருந்தாலும், அவைகள் இன்னும் கொஞ்சம் தேக்கி வைத்திருக்கின்றன. அவசர கால உலகத்தில், இது போன்ற இடங்களே நம்மை ஒரு மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கின்றன.

அங்கே எடுத்த ஒரு சில புகைப்படங்கள்;














15 comments:

  1. படங்கள் அருமை. எந்தெந்த இடங்கள் பார்க்கலாம், எப்படி போவது என விளக்கமாக எழுதியிருக்கலாம் இளங்கோ

    ReplyDelete
  2. மேகமூட்டத்துடன் கூடிய சில்லென்ற சூழ்நிலை

    அருமை இளங்கோ

    ReplyDelete
  3. ரொம்ப அழகான புகைப்படங்கள் இளங்கோ..

    ReplyDelete
  4. வால்பாறையின் கொள்ளை அழகை படங்கள் வெளிப்படுத்தின... ஆழியாறில் ஆரம்பித்து அட்டகட்டி தாண்டி வழியெங்கும் எழில் கொஞ்சும் மலை வால்பாறை..பாலாஜி கோவில்.. அக்காமலை..யானைகள்...கும்கியானைகள்...படம் எடுத்திருந்தால் வெளியிடவும்...

    ReplyDelete
  5. செமத்தியா இருக்கே எந்த இடம் வால்பாறையில?

    ReplyDelete
  6. அருமை.
    இயற்கைச் சூழல் படங்கள் மனதை மயக்குகின்றன.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. @மோகன் குமார்
    எழுத நினைத்தேன். நேரமின்மையால் படங்களை மட்டும் பதிவிட்டேன், நிச்சயமாக இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.
    நன்றிங்க.

    ReplyDelete
  8. @நிகழ்காலத்தில்...
    ஆமாங்க.. போய் வந்து பல நாட்களாகியும் இன்னும் மனதில் நிறைந்து கிடக்கிறது அந்த சூழல்.
    நன்றிங்க

    ReplyDelete
  9. @ஷஹி
    சூழல் அழகு, அங்கே ஒரு குழந்தை எடுத்தாலும் போடோக்கள் அருமையாக வரும்.
    நன்றிங்க.

    ReplyDelete
  10. @பத்மநாபன்
    அண்ணா, யானைகளை கண்ணில் பார்க்க முடியவில்லை. ஒரே ஒரு வரை ஆடு மட்டும் தான் பார்க்க முடிந்தது. அடுத்த தடவை போகும்போது, இரண்டு மூன்று நாட்கள் தங்கி பார்க்கவேண்டும்.
    நன்றிங்க

    ReplyDelete
  11. @முரளிகுமார் பத்மநாபன்
    வால்பாறை போகும் வழி தான் முரளி, பொள்ளாச்சி ஆழியாரில் இருந்து போகும் வழியில்.

    ReplyDelete