Wednesday, February 23, 2011

தேர்வு




















மூன்றாவது முறையும்
அட்டெம்ப்டில் தோல்வியடைந்த
பக்கத்துக்கு ஊர்ப் பையனின்
தற்கொலைக்குப் பின்,
தேர்வில் அதிக மதிப்பெண் பெற
வேண்டுமெனச் சொல்லிய
அப்பாவும் அம்மாவும்
'உன்னால முடிஞ்சத படி'
'மார்க் வரலேன்னாலும் பரவால்ல'
'பெயில் ஆனாலும் கவலப்படாதே'
எனச்
சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.


படம்: இணையத்தில் இருந்து. நன்றி


12 comments:

  1. கல்வியே stress ஆகி போச்சு. :-(

    ReplyDelete
  2. நாங்கள்ல்லாம் எப்பவுமே அப்பிடி தான் சொல்றது..gud one Elango

    ReplyDelete
  3. @எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்
    நன்றிகள் நண்பரே.

    ReplyDelete
  4. @Chitra
    மனிதன் உயர்வதற்கு வழி செய்வது தான் கல்வி, இப்படியும் ஆகி விடுகிறது.
    நன்றிகள் அக்கா.

    ReplyDelete
  5. @ஷஹி
    அதுதான் பெற்றோர்களுக்கு அழகு.
    நன்றிங்க

    ReplyDelete
  6. பட்டால் தான் புத்தி..


    "நீ இப்படிச் செய்வேன்னு தெரிஞ்சிருந்தா அவனுக்கே உன்ன கல்யாணம் பண்ணி வெச்சிருப்பேனே" என்ற அசட்டுப் புலம்பல்வாதிகள் தானே நம்மூர் மக்கள்...

    அது எப்படி முன்னாலேயே தெரியும்.. அப்படி இருந்தால் முன்னமே ஒத்துக் கொண்டு இருந்திருக்க வேண்டியது தானே...

    ReplyDelete
  7. @சாமக்கோடங்கி

    //
    அது எப்படி முன்னாலேயே தெரியும்.. அப்படி இருந்தால் முன்னமே ஒத்துக் கொண்டு இருந்திருக்க வேண்டியது தானே... //

    நாம் எப்போதும் நடந்த பின்னர்தானே யோசிக்கிறோம். :(

    நன்றிங்க பிரகாஷ்.

    ReplyDelete
  8. ஒரு மரணம் அவங்களுக்கு பாடம்....

    ReplyDelete
  9. @சி.கருணாகரசு
    நன்றிகள் நண்பரே.

    ReplyDelete
  10. இந்த மார்ச் இல்லாட்டி, ஜூன், அதுவும் போச்சுனா அக்டோபர்.
    உசுரு போனா வருமா மகனே..

    ReplyDelete
  11. machi... superb da... keep it up....

    ReplyDelete