
விழுதுகள் அமைப்பின் சிறந்த நிகழ்வுகளில் இன்னுமொரு நிகழ்வாக, கடந்த சனிக்கிழமை(12/03/2011 ) அன்று சென்னை நாரத கான சபாவில், எங்கள் நண்பன் கமலக்கண்ணனுக்கு, சிறந்த சேவைக்காக, 'மாணவ சேவா தர்ம சம்வர்தினி' யின் 12 - ஆம் ஆண்டு விழாவில் 'சற்குரு ஞானானந்தா நேசனல் அவார்ட்' வழங்கிச் சிறப்பித்திருக்கிறார்கள். இந்த விருதுடன் பத்தாயிரம் ரூபாய் உதவித் தொகையும் வழங்கியிருக்கின்றனர். இந்தியா முழுவதிலும் இருந்து கமலக்கண்ணன் உட்பட நால்வருக்கு மட்டுமே இந்த விருதை அளித்திருக்கின்றனர்.
இவ்விருதைப் பற்றி தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன், கமலக்கண்ணனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வேளையில், விழுதுகளுக்கு உதவி வரும் அனைத்து நண்பர்களுக்கும் எங்களின் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
(புகைப்படத்தில் பெற்றோருடன் கமலக்கண்ணன்)
இவ்விருதைப் பற்றி தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன், கமலக்கண்ணனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வேளையில், விழுதுகளுக்கு உதவி வரும் அனைத்து நண்பர்களுக்கும் எங்களின் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
