Posts

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் - அ.கா. பெருமாள்

Image
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் பற்றி அ.கா. பெருமாள் அவர்கள் எழுதிய ஆய்வு நூல் 'ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் (திருவட்டாறு கோவில் வரலாறு)' . ஒரு கோவிலைப் பற்றி என்னவெல்லாம் சொல்ல முடியுமோ அவை அனைத்தையும்  மிகச் சிறப்பாக இப்புத்தகத்தில் அவர் எழுதியிருக்கிறார். கோவிலின் வழிபாட்டு முறைகள், வரலாறு, சிற்பங்கள், கதைகள், இலக்கியங்களில், ஆழ்வார் பாடல்களில் இக்கோவில் சுட்டிக்காட்டப்பட்ட இடம் மற்றும் வாய்மொழிக் கதைகள் என ஒன்று விடாமல் எழுதியுள்ளார் ஆசிரியர்.  ஒரு கோவில் என்பது சாதாரண இடம் அல்ல. பல நூற்றாண்டுகள் முன்பே கட்டப்பட்டு, சில மாற்றங்கள் காலப்போக்கில் உருவாகி இன்று நம்முன் வலிமை குன்றாமல் நிற்கிறது. "ஒரு ஆலயத்தின் சிறப்பிற்கு பத்து விசேஷக் குணங்கள் இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.  அந்த ஆலயம் பழமையானதாய், பாரம்பரிம் உடையதாய் இருத்தல்;  கோவிலுடன் தொடர்புடையதாக ஓலை ஆவணங்கள், செப்பேடுகள், கல்வெட்டுகள் கிடைத்தல்;  கோவிலுக்கும் வட்டார வரலாற்றுக்கும் மிகுந்த தொடர்பு இருத்தல்; புராணங்களில் மேற்கோள் காட்டப்பட்டிருத்தல், தலபுராணங்கள் இருத்தல்;  கோவிலில...

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்

Image
பல்லவர் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட கலைநயம் மிக்க கோவில்களில் ஒன்று காஞ்சி கைலாசநாதர் கோவில். ஒவ்வொரு இடத்திலும் கலைநயம், காலங்களைத் தாண்டி நிற்கிறது. சில சிற்பங்கள் மணல் கற்களால் செதுக்கப்பட்டதால் காலப்போக்கி ல் தனது பொலிவை இழந்திருக்கிறது. உறுதியான கற்களால் செய்யப்பட்ட சிற்பங்கள் காலங்கள் தாண்டியும் நமக்கு காட்சியளிக்கிறது.  நாங்கள் சென்றபோது அளவான கூட்டமே இருந்தது. காஞ்சியில் உள்ள பிரபலமான கோவில்களில் உள்ள கூட்டம் போல் இங்கே இல்லை. குறைவான மக்கள் வந்து போவதும் இந்த பழைய கோவிலுக்கு நல்லது தான்.  காணும் இடமெல்லாம் கலை நயத்தை காட்சிக்கு வைத்திருக்கும் அற்புதமான கோவில் கைலாசநாதர் கோவில்.  நாம் பார்க்கும் இடமெல்லாம் சிம்ம தூண்கள் அழகுடன் இருக்கிறது.  இந்தக் கோவிலுக்கு பின்னர் பெரிதாக எடுக்கப்பட்ட பல ஆலயங்களுக்கு இந்த ஆலயம் முன்னோடியாக இருந்திருக்கிறது. முக்கியமாக தஞ்சாவூர் பெரிய கோவிலைச் சொல்லலாம். முன்பு பல சிற்பங்கள் பழுது பார்க்கப்பட்டதில் அரைகுறையாகத் தெரிவது கவலையை ஏற்படுத்துகிறது. இந்தக் கோவிலில்  ஓவியங்கள் முன்பு இருந்திருக்கிறது. இப்போது சில கோடுகளும் அங்கங...

கேரள முரல் ஓவியங்கள்

Image
மிகச் சில வண்ணங்களைக் கொண்டு அழகாக வரையப்பட்டவை கேரள முரல் ஓவியங்கள். அந்தக் காலத்தில்  இயற்கையான பொருட்களில் இருந்தே இந்த வண்ணங்கள் பெறப்பட்டன. உதாரணத்துக்கு வெண்மை நிறத்துக்கு சுண்ணாம்பும், கருமை நிறத்துக்கு நல்லெண்ணெய் விளக்கு தீபத்தின் மேல் கவியும் கருமையான மையையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.  கோவில்களிலும், அரண்மனைச் சுவர்களிலும் இந்த வகை ஓவியங்களை கேரளாவில் நாம் இப்போதும் காணலாம். சில இடங்களில் உள்ள ஓவியங்கள் காலத்தை தாண்டியும் நமக்கு காட்சியளிக்கிறது. இப்பொழுது இந்த வகை ஓவியங்கள் துணிகளிலும் வரையப்படுகின்றன. எனக்கு இந்த வகை ஓவியங்களின் அழகு பிடித்துப்போக, ஓவியம் வரையத் தெரியாத எனக்கு வரைந்து பார்த்தால் என்னவென்று தோன்றியது. நான் வரைந்த இந்த இரண்டு ஓவியங்களுமே கேரளாவின் பள்ளிமன் னா மகாதேவர்  கோவிலில் உள்ளது. முகம், கை வளைவுகள் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் பல முறை முயன்று வரைந்தேன். பார்த்து வரைந்தாலும் மூலத்துக்கும் இதற்கும் வண்ணங்களின் கலவை, வளைவுகளின் நேர்த்தி ஒன்றல்ல. அக்ரிலிக் வண்ணங்களைப் பயன்படுத்தியுள்ளேன். ஆலமர் செல்வன் / தட்சிணாமூர்த்தி  Acrylic on canv...

சகீனாவின் முத்தம் - முத்தம் பெறுவது எளிதா ?

Image
விவேக் ஷான்பாக் எழுதிய நாவலான காச்சர் கோச்சர் போன்றே ஒரு சிறு குடும்பத்தைப் பற்றிய கதை சகீனாவின் முத்தம். கதை சொல்லும் முறையில் சுற்றியிருக்கும் அனைவரின் அன்றாடத்தையும், கடந்த காலத்தையும் நேர்த்தியாக சொல்லிச் சொல்கிறார் விவேக் ஷான்பாக். தலைப்புக்கும் நாவலில் இருக்கும் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருப்பது போலத் தோன்றலாம். ஆனால் கதையின் முக்கிய திருப்பமே இந்த தலைப்புதான்.  வெங்கி எனப்படும் வெங்கடரமணன், மனைவி விஜி மற்றும் அவர்களின் ஒரே மகளான ரேகா. இவர்களின் வாழ்க்கையில் நான்கைந்து  நாட்கள் கதைதான் இந்நாவல் என்றாலும், வெங்கட்டின் நினைவுகள் மூலம் பழைய கதை சொல்லப்படுகிறது. வெங்கட்டும் விஜியும் கணிணித்   துறையில் வேலை செய்பவர்கள். அவர்களின் மக்கள் ரேகா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவி. ரேகா ஒருநாள் வெங்கட்டின் சொந்த ஊருக்குச் சென்ற வேளையில், இங்கே அவளைத் தேடி அவளின் நண்பர்கள் வீட்டுக்கு வந்து போகிறார்கள். அவளுடைய செல்போனுக்கு கூப்பிட்டால் போன் போகவில்லை என்று சொல்கிறார்கள்.  'அவள் இங்கே இல்லை. எந்த தொலைபேசித் தொடர்பும் எங்கள் ஊரில் இல்லை. அவளாக கூப்ப...

தொட்டியில் அல்லி வளர்ப்பு

Image
எங்காவது வெளியே போகும்போது அல்லி, தாமரை போன்ற மலர்களைப் பார்க்கும்போது நம் வீட்டில் நாமும் வளர்த்துப் பார்க்க வேண்டும் எனத் தோன்றும். நான்கு அல்லது ஐந்து மாதத்திற்கு முன்னால் நர்சரியில் சிறு தொட்டியில் இரண்டு இலைகள் மட்டுமே இருந்த அல்லி செடியை வாங்கி வந்தோம். அங்கே இருந்தவர் பிங்க் நிறம் என்று சொன்னார். வாங்கி வந்த சிறு தொட்டியை அப்படியே இன்னொரு பெரிய அகன்ற தொட்டியில் வைத்தோம். சில கலர் மீன்களை வாங்கி தொட்டியில் விட்டோம். ஓரிரண்டு இலைகள் தழைத்து வந்து அப்படியே சிறிதாக இருந்தன. இலைகள் பெரிதாக வளரவும் இல்லை. Youtube ல் சில அல்லி வளர்ப்பு சம்பந்தமான வீடியோக்கள் பார்த்தால் இலைகள் பெரிதாக இருந்தன. சரி பெரிய தொட்டியில் மாற்றிப் பார்க்கலாம் என்று களிமண்ணும் கொஞ்சம் செம்மண்ணும் கலந்து பெரிய தொட்டியில் அல்லிச் செடியை மாற்றி விட்டேன். மாற்றிய பின்னர் கொஞ்ச நாட்கள் அப்படியே இருந்தது. முன்பிருந்ததை விட இலைகள் நல்ல நிறமாகி வந்தன. சிறு இலைகளாகவே இப்போதும் தழைத்து வந்தது. மீன்கள் இருப்பதால் எந்த விதமான உரங்களும் பயன்படுத்தவில்லை. இரண்டு முறை ...

நட்ராஜ் மகராஜ் - அதிகாரத்தின் முன் வரலாற்றின் நிலை

Image
பழைய இடிந்து போன ஒரு மாளிகையின் ஓரத்தில் பாம்புகளுடனும், பூச்சிகளுடனும் வசித்து வரும் ஒரு குடும்பத் தலைவனான 'ந' வின் கதை இந்நாவல். நாவலில் எல்லோருடைய பெயரும் ஒரு குறியீடு போல முதல் எழுத்து மட்டுமே. தா என்னும் ஊர், வ என்னும் பெயரையுடைய மனைவி என்று முதல் எழுத்து மட்டும்தான். படிக்கும் பொழுது இந்தக் குறியீட்டு எழுத்துக்கள் முதலில் புரிபடத் தடுமாறினாலும், நாவல் பின்னர் நம்மை அதற்குள் இழுத்துக் கொள்கிறது.  ஒரு பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்து வரும் ந வுக்கு, அரசு வேலையாக பள்ளி சத்துணவுத் திட்ட அலுவலராக வேலை கிடைக்கிறது. இந்த வேலையைப் பெறவும் ஒரு சிலருக்கு லஞ்சம் கொடுத்திருக்கிறான். சம்பளம் குறைவு என்றாலும் அரசு வேலை என்ற மரியாதை இருக்கும் என்றே அவன் நினைக்கிறான். அரசுப் பள்ளியின் கணக்குகள், மாணவர்களுடைய உணவின் தரம் என்று அவனுக்கு புரியும்பொழுது சுற்றியுள்ளோர் அவனுக்கு, இந்த வேலையில் இருந்து எப்படி மேலும் சம்பாதிப்பது என பாடம் எடுக்கிறார்கள்.  அவன் அந்தப் பள்ளியில் சேர்வதற்கு முன்னர் இருந்த அலுவலர்கள் அரிசி பருப்பு போன்றவற்றை வெளியில் கடத்தி மற்றவர்களுக்கு க...

தேவதாஸ் - ஒரு மனிதனின் வாழ்க்கை

Image
ஆண்கள் தங்கள் முகத்தில் கொஞ்சம் தாடியோடு இருந்தால் 'என்ன தேவதாஸ் மாதிரி தாடியோடு இருக்க?'  என்றே நம் மக்கள் விசாரிப்பார்கள். அதனோடு கொஞ்சம் புகைப்பழக்கமும், குடியும் சேர்ந்துவிட்டால் அதுதான் தேவதாஸ். கூடவே காதல் தோல்வியும் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு நம் மக்களிடம் பேசப்பட்ட காதல் ஜோடிகள் தேவதாஸ் - பார்வதி. அவர்கள் இருவரின் கைகூடாத காதலைச் சொல்லும் இந்த நாவல் வங்காளத்தில் 1917ல் வெளியாகி, பல மொழிகளில் சினிமாவாக தயாரிக்கப்பட்டது. இந்நாவல் பெற்ற செல்வாக்கையும், புகழையும் கண்டு  அதனை எழுதிய சரத் சந்திரரே திகைக்கிறார்.  தமிழில் வெளியான இந்நாவலுக்கு அசோகமித்திரன் முன்னுரை எழுதியுள்ளார். 'தேவதாஸ் - ஒரு சிறிய நாவல். ஆனால் அதில் வாழ்க்கையின் எந்த அம்சம் இல்லை?. நான்கைந்து பாத்திரங்களை மட்டும் உலவவிட்டுப் படைப்பாளி படைத்தது ஒரு விசாலமான, ஒரு நுணுக்கமான புனைகதை. அதே நேரத்தில் அது ஒரு சமூக வரலாறுமாகும். இவ்வளவு எளிதாகவும், அதே நேரத்தில் கூர்மையாகவும் சமூகத்தையும் அதன் அங்கங்களாகச் செயல்படும் மனிதர்களையும் கண்முன் நிறுத்த முடியுமா?. எவ்வ...

நாடு விட்டு நாடு - முத்தம்மாள் பழனிச்சாமி

Image
தங்கள் குடும்ப வரலாறு போல எழுதிய இந்த புத்தகம் சென்ற காலத்தை நமக்கு திரும்பவும் நினைவூட்டுகிறது. சென்ற நூற்றாண்டின் இறுதி வருடங்கள் வரைக்கும் கூட வறுமை தாண்டவமாடியது. விறகு வெட்டுதல், தண்ணீர் எடுக்க நீண்ட தூரம் செல்லுதல், சினிமா தவிர எந்த பொழுதுபோக்கும் இல்லாதிருத்தல் என்றே இருந்தது. அப்படி என்றால் 1940-1950 காலகட்டங்களில் எப்படி இருந்திருக்கும். அந்தக் காலத்தில் தமிழ்நாட்டின் கொங்கு பகுதியில் இருந்து மலேயா சென்று உழைத்து வாழ்ந்த தமது குடும்பத்தின் வரலாற்றை இந்த தன்வரலாற்றுப் புத்தகத்தில் சொல்லியுள்ளார் முத்தம்மாள் அவர்கள்.  முத்தம்மாள் அவர்களிடம் 'பால்ய வயதில் நடந்த எதுவுமே எங்களுக்கு நினைவில் இல்லை. நீங்கள் எப்படி சின்ன வயதில் நடந்தது எல்லாம் நினைவில் இருந்து எழுதுகிறீர்கள், இல்லை அது அனைத்தும் கதையா? ' என்று கேட்க, 'எங்கள் காலத்தில் இப்பொழுது உள்ளது போல பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை. டிவி, போன் என உங்களை உள்ளே இழுத்துக்கொள்ள நிறைய விசயங்கள் இப்பொழுது உண்டு. எங்களுடைய சின்ன வயதில் நடந்ததை நாங்கள் எங்களுக்குள் திரும்பி திர...

கடல் - ஜெயமோகன்

Image
அன்பான இயேசுவின் பாதையில் சாத்தான்களின் வருகைகளை நாவல் வடிவில் சொல்லப்பட்டது கடல். இரண்டு விதமான வாய்ப்புகள் நமக்கு இருக்கின்றன. தப்பான செயல்கள் பாவம் என்றாலும் அவற்றை நம் சுயநலத்துக்காக செய்து கொண்டு, அதில் கிடைக்கும் புகழ், மகிழ்ச்சி மற்றும்  செல்வச் செழிப்புடன் வாழ்வது. இன்னொரு பாதை முட்களும் துயரங்களும் நிரம்பியது. செல்வத்தையும் புகழையும் ஒதுக்கிவிட்டு அன்புடனும் , எந்நிலையிலும் உண்மையுடன் இருப்பது. இது கடினமான பாதை என்றாலும் நீண்ட காலத்தில் மகிழ்ச்சியும், நாம் பாவங்கள் செய்யவில்லை என்ற நிம்மதியும் கிடைக்கும். இந்நாவல் மூன்று பாத்திரங்களை மையமாகக் கொண்டது.  சாம் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் சாம். தங்கத் தொட்டில் கூட உண்டு. அவர்களின் வீட்டில் வேலை செய்த வேலைக்காரி ஒருநாள் தன்னுடைய குழந்தையை அந்தத் தொட்டிலில் படுக்க வைக்கிறாள். அதனைக் கண்ட சாமின் தந்தை அந்த வேலைக்காரியை அடித்தும், அந்தக் குழந்தையை வெய்யிலில் படுக்க வைத்தும் தண்டனை கொடுக்கிறார். பாதிரியார் உட்பட யார் சொல்லியும் அவரின் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. மறுநாள் அந்தக்...

சாய்வு நாற்காலி - தோப்பில் முஹம்மது மீரான்

Image
கடற்கரையோர கிராமம் தென்பத்தன். அங்கே உள்ள 'சவ்தா மன்சில்' என்னும் மாளிகையில் முஸ்தபாகண்ணு தன்னுடைய பரம்பரை கவுரவம் கொண்ட சாய்வு நாற்காலியில், அந்த வீட்டு வேலைக்காரியும் சிறு பெண்ணுமான ரைஹானத்தை ரசித்து, அவளை கல்யாணம் செய்து கொள்ள கனவு கண்டு அந்த சுகத்தில் சாய்ந்து  கொண்டிருக்கிறார். அப்பொழுது அவரின் மனைவி மரியம் பீவி 'மதரஸா பள்ளி மீது காற்றுக்கு மரம் விழுந்து குழந்தைகள் இறந்து விட்டார்கள்' எனச் சொல்ல, முஸ்தபாவோ  அதனைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் 'எனக்கு சாப்பிட என்ன இருக்கிறது, டீ குடிக்கும் நேரம் வேற ஆச்சு'  என்கிறார்.  சவ்தா மன்சில் இல்லத்தின் காரணவர் முஸ்தபாகண்ணு. அவரின் பாட்டனாரான பவுரீன்பிள்ளை என்பவர் அப்போது மன்னராக மருமக்கள் வழி உரிமையில் இருந்த மார்த்தாண்ட வர்மாவுக்கு அணுக்கமாக இருந்தவர். மார்த்தாண்ட வர்மாவின் சிறு வயதில் மக்கள் வழி மரபு உரிமைக்காக போராடும் எட்டு வீட்டு பிள்ளைகள் என்பவர்களால் அவர் துரத்தப்பட, தென்பத்தன் ஊரில் அடைக்கலமாகும் அவரைப் பாதுகாத்து அனுப்பி வைக்கிறார் பவுரீன்பிள்ளை. பின்னர் மார்த்தாண்ட வர்மா முடிசூடிய பின்னர் அவருக்கு வேண்டிய ந...

மிளகு - நாவல் - இரா.முருகன்

Image
போர்ச்சுகல் அரசால் மிளகு ராணி என்று போற்றப்பட்ட அரசி  சென்னபைராதேவி , 54 வருடங்களுக்கும் மேலாக ஆட்சியில் இருந்திருக்கிறார். மிளகுக்கும் நறுமணப் பொருட்களுக்கும் பெயர் பெற்ற கொங்கன் பிரதேசமான கெருசோப்பா, ஹொன்னாவர் பகுதியை ஆண்டவர் ராணி சென்னா. கேரளாவின் கோழிக்கோடு தொடங்கி கோகர்ணம் மற்றும் கோவா வரை கடலை ஒட்டிய மலைப் பிரதேசங்களில் மழை பெய்து வளமான மண்ணில் மிளகு தாராளமாக விளைச்சல் கொடுத்திருக்கிறது. இப்பொழுது அந்த பகுதிகளுக்கு சென்றாலும் பசுமை நிறைந்த மிளகு தோட்டங்கள் காணக் கிடைக்கின்றன. நவீன காலத்தில் மனிதன் அழித்தது போக மீதி இருப்பதை நாம் பார்க்கும்போது , அந்தக் காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்ற எண்ணம் தோன்றும்.  தரமும், மணமும் நிறைந்த மிளகு போன்ற பொருட்களுக்கு வேண்டியே அந்தப் பகுதிகள் மீது தொடர்ந்து மற்ற நாடுகளின் தாக்குதல் இருந்திருக்கிறது. அதைத் தடுக்க விஜயநகரப் பேரரசுடன் இணைந்து ஆட்சி செய்கிறார் சென்னபைராதேவி. சமண மதத்தைத் தாய் மதமாக கொண்டவர் சென்னா. திருமணம் செய்துகொள்ளாத ராணி சென்னா, தன்னுடைய சொந்தத்தில் நேமிநாதன் என்பவனை வளர்ப்பு மகனாக...

வாராணசி - எம்.டி.வாசுதேவன் நாயர்

Image
எப்பொழுதும் சிதை எரிந்து கொண்டிருக்கும் நகரம் வாராணசி. ஆனால் அதன் முகம் அது மட்டும் அல்ல. அமைதியையும், காமத்தையும் இன்னொரு முகமாக கொண்டிருக்கும் நகரம் வாரணாசி. பேராசிரியர் ஸ்ரீனிவாசன் என்பவரின் அழைப்பை ஏற்று வாரணாசி நகருக்கு செல்கிறான் சுதாகரன். சுதாகரன் அங்கே செல்லும் அந்த குறிப்பிட்ட தேதியின் முன்னரே பேராசிரியர் இறந்துவிடுகிறார். அங்கே சில நாட்கள் தங்கி இருக்கும்போது அவனுடைய கடந்த கால வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறான். பெண்களுடன் சுதாகரனுக்கு எளிதில் தொடர்பு ஏற்படுகிறது. ஆனால் அந்த உறவுகளைத் தொடர இவன் விரும்புவதில்லை. எதற்கோ பயந்து தப்பித்துப் போகிறான். அதனை ஒருவாறு அந்தப் பெண்களும் அறிந்திருப்பார்கள் போல. இவன் விட்டுவிட்டு போன பின்னர் அவர்கள் அவனைத் தேடுவதில்லை. தங்களது பயணத்தில் ஒரு சிறு இளைப்பாறல் போல அமைகின்றன அவனுடனான உறவுகள். வயதான காலத்தில், முன்னர் சிலநாட்கள் ஈருடல் ஓருடலாக பழகிய சுமிதாவை கங்கை கரையில் சந்திக்கிறான். அவளோ அவனை யாரோ ஒரு வழிப்போக்கன் என நினைத்து போகிறாள். உண்மையாகவே அவளுக்கு அவனை நினைவில் இல்லை.  ...

கொற்கை - ஜோ டி குருஸ்

Image
2013 ஆம் ஆண்டின் சாகித்ய அகாதெமி விருது பெற்றது கொற்கை நாவல். கடலையும், கடல் சார்ந்து இருப்போரின் வாழ்க்கையையும் பின்னிக்கொண்டு நெய்தது கொற்கை நாவல். 1900 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கும் நாவல் 2010 ஆம் ஆண்டில் முடிகிறது. மற்ற நாவல்கள் போல, கொற்கையில் குறிப்பிட்டுச் சொல்ல முக்கியமான கதாபாத்திரங்கள் இல்லை. ஆனால் நிறைய மாந்தர்கள் உண்டு.  "காலம். இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். பிரிட்டிஷ் இந்திய ஆட்சி, கிறிஸ்தவ சமயத்தின் பிரவேசம், சுதந்திர போராட்டம், சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள், நவீனத்துவத்தின் வருகை ஆகியவை பரதவர் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைத் துல்லியமாகவும் கலை அமைதியுடனும் சொல்கிறார் ஜோ டி குருஸ்"  என்று புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் அரவிந்தன்.  மேலும் " கிறிஸ்தவ சமயத்தின் வரவு, உள்ளூர்ச் சாதிகள் கிறிஸ்தவத்தை எதிர்கொண்ட விதம், சுதந்திரப் போராட்டத்தின் தாக்கம், நவீன வாழ்வும் அரசியலும் உள்ளூர்ச் சமூகங்களைப் பாதிக்கும் விதம் என்று நாவலின் எல்லையைக் குறுக்கும் நெடுக்கு மாக விஸ்தரித்துக் கொண்டு போகிறார் ஜோ ட...

சார்த்தா - எஸ். எல். பைரப்பா

Image
அந்தக் காலத்தில் வணிகம் செய்வதற்காக நாடு விட்டு நாடு குழுவாக பயணம் செய்துள்ளனர். நீண்ட நாள் பயணம் என்பதால், ஒரு குழுவாகவே அனைவரும் இணைந்து சென்றுள்ளனர். இணைந்து செல்வதால் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். அதிலும் புத்த மதத்தைச் சேர்ந்த வணிகர்களே அதிகம் இருந்துள்ளனர். அப்படி ஒரு குழுவாகச் செல்வதை சார்த்தா என அழைத்துள்ளனர்.  கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இக்கதை நடப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த சார்த்தா என்ற சொல், தமிழில் நமது இலக்கியத்தில் (சிலப்பதிகாரம்) உள்ளது என்கிறார் இந்நாவலை தமிழில் மொழிபெயர்த்த ஜெயா வெங்கட்ராமன். தனது முன்னுரையில் "வணிகர் கூட்டத்தின் தலைவன் சாத்தன், சாத்துவான் என அழைக்கப்பட்டான். வணிகச் சாத்துக்களின் காவல் தெய்வமாகிய அய்யனாருக்கும் சாத்தன் என்ற பெயருண்டு. ஒருவரை ஒருவர் சார்ந்து கூட்டமாகச் செல்வதால் 'சார்தல்' எனும் சொல்லிலிருந்து சாத்து எனும் சொல் வழக்கூன்றியது." என்கிறார் ஜெயா வெங்கட்ராமன். நாகபட்டன் என்கிற பிராமண இளைஞன் தனது தாய் மற்றும் மனைவி சாலினியுடன் வசித்து வருகிறான். அரசன் அமருக மகாராஜாவு...