Thursday, January 3, 2013

வேகம்

நீண்டு கிடக்கும் நெடுஞ்சாலைகள்
ஒவ்வொரு நாளும் பயணம்
ஓய்வில்லாத பயணம்

சாலைகள் எப்போதும்
முன்னால் விரிந்து கிடக்கிறது

ஒரு போதும்
மறந்து விடலாகாது
நமக்குப் பின்னாலும்
ஒரு நீண்ட பாதை
உண்டென்பதை...



4 comments:

  1. படத்திற்கு தகுந்த வரிகள்.

    ReplyDelete
  2. நல்ல உருவக கவிதை. வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  3. @Sasi Kala
    @வ.மு.முரளி
    நன்றி நண்பர்களே..

    ReplyDelete
  4. பின்னாலிருக்கும் பாதையை திரும்பிப்பார்க்கலாம் ஆனால் திரும்பிப் போக முடியாது என்பதுடன் திரும்பிச் செல்லவும் வேண்டாமே...

    ReplyDelete