Thursday, November 11, 2010

சிறு துளிகள் (11/11/2010)

நேற்று காலை சன் தொலைக்காட்சியில் காலை நிகழ்ச்சியில், பேச்சாளர்கள் பாரதி பாஸ்கரும், ராஜாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசியது புதிது, புதிதாக வரும் சிறப்புத் தினங்கள் பற்றி. அதில் பாரதி பாஸ்கர் அவர்கள் ஒரு கவிதை சொன்னார்;

"தினங்களை விட்டு விட்டு
எப்போது
குழந்தைகளைக்
கொண்டாடப் போகிறீர்கள்" . (குழந்தைகள் தினம் வரப் போகிறது இன்னும் இரண்டு நாட்களில்)

சொல்லப் போனால் குழந்தைகளை கவனிக்க முழுவதும் மறந்து விட்டோம். பள்ளி, டியுசன், டிவி, வீடியோ கேம்ஸ் என்று நகர்ந்து கொண்டிருக்கிறது அவர்களின் வாழ்க்கை முறை. கேட்டதெல்லாம் உடனே கிடைக்கிறது. ஒரு பொருளைப் பெற காத்துக் கிடப்பது இல்லை. எல்லாம் உடனே வேண்டும் என்ற மனப்பான்மை வளர்ந்து வருகிறது.

இதற்கு நேர் எதிர் ஏழைக் குழந்தைகள். எதுவுமே கிடைக்காமல், (உணவும்தான்) சிக்னல்களிலும், பேருந்து நிலையங்களிலும் கையேந்திக் கொண்டிருக்கிறது பிஞ்சு கைகள்.

ஒருவேளை இந்த முரண்பாடுகள்தான் குற்றங்களைக் கொண்டு வருகிறதோ?. இன்றைய குழந்தை நாளைக்கு என்னவாக வேண்டும் என்பதில் இந்தச் சமூகத்துக்கு வேண்டிய அக்கறை எங்கே?.

கொஞ்சம் குழந்தைகளைக் கவனியுங்கள்....

**************************************

கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. உலகம் தெரியாத குழந்தைகளை தங்கள் நோக்கத்துக்காக கடத்துவது தவிர்க்க முடியாத குற்றங்கள். இன்னும் குழந்தைகள் கொடுமைச் சட்டங்கள், தண்டனைகள் அதிகமாக வேண்டும்.

குழந்தைகள் கூடி விளையாடுவது இந்தக் காலத்தில் குறைந்து வருவதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உலகைப் புரிந்து கொள்ள முடியாத சூழலில் வளரும் குழந்தைகளுக்கு, பள்ளிகளும், பெற்றோர்களும் இனியாவது விழிப்புணர்வு கொண்டு, கொஞ்சம் உலகைப் பற்றி விவரிக்கலாம்.

இலக்கியம், தினமும் படிப்பு என்று கூட வேண்டாம், தினச் செய்திகள் கூட தெரிந்து கொள்ள ஆர்வமில்லாத குழந்தைகளை நாம் வளர்த்து வருகிறோம். ஆனால் அவர்களுக்கு எந்திரன் படத்தின் வெளியீட்டு நாள் தெரிகிறது. கொஞ்சம் வாசிப்பை அவர்களுக்கு பழக்கப்படுத்தலாம்.

சிறுவர் கொடுமைகள் என்றால் அது எங்கேயும் இருக்கிறது.

- ஒரு குழந்தையையும் இன்னொரு குழந்தையையும் ஒப்பீடு செய்வது.
- நிறம், உயரம் போன்றவற்றை இழிவு செய்வது
- பள்ளியிலும் வெளியிலும் உள்ள பாலியல் தொந்தரவுகள்
- முக்கியமாக அவர்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருப்பது
- பெற்றோர்களின் பிரச்சினைகள் (விவாகரத்து, சண்டை... )

இது போன்று இன்னும் நிறைய இருக்கிறது. இந்தக் கொடுமைகள் குறைய நாம் என்ன செய்யப் போகிறோம்? .

****************************************

கோவை என்கவுண்டருக்குப் பிறகு, குழந்தைகளைக் கடத்தும் மற்றவர்கள் பயந்திருப்பார்கள். இனி குழந்தை கடத்தல் நடக்காதிருக்க வேண்டும். ஒரு குற்றவாளி இறக்கும் போது அவனுடன் சேர்ந்து ரகசியங்களும் கொல்லப்பட்டிருக்கக் கூடும். அப்படி ஏதும் இல்லாத பட்சத்தில், வேறு யாருக்கும் இதில் தொடர்பில்லை அவன்தான் முழுக் குற்றவாளி என்றால் இந்த என்கவுண்டர் நியாயமானதே.

"பாதகம் செய்பவரைக் கண்டால் - நீ
பயங் கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.. "

***************************************

குழந்தைகள் தினத்தில் மட்டுமின்றி எல்லா நாட்களும் குழந்தைகளைக் கொண்டாடுவோம்.

15 comments:

  1. - ஒரு குழந்தையையும் இன்னொரு குழந்தையையும் ஒப்பீடு செய்வது.
    - நிறம், உயரம் போன்றவற்றை இழிவு செய்வது
    - பள்ளியிலும் வெளியிலும் உள்ள பாலியல் தொந்தரவுகள்
    - முக்கியமாக அவர்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருப்பது
    - பெற்றோர்களின் பிரச்சினைகள் (விவாகரத்து, சண்டை... )

    இது போன்று இன்னும் நிறைய இருக்கிறது. இந்தக் கொடுமைகள் குறைய நாம் என்ன செய்யப் போகிறோம்? .


    .......முக்கியத்துவம் கொடுத்து கவனிக்க வேண்டிய விஷயங்கள், இங்கே பின்னுக்கு தள்ளப்பட்டு விடுகின்றன என்பது வேதனையான ஒன்று.

    ReplyDelete
  2. என்ன குழந்தைகள் தின ஸ்பெஷலா ;-) ;-)

    ReplyDelete
  3. நிச்சயம் தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.
    இன்றைய குழந்தைகள் சீக்கிரத்தில் கற்றுக் கொள்கிறார்கள், புத்திசாலிகளாகவும் இருக்கிறார்கள். பெற்றோர்கள் நன்றாக கவனித்தால் நிச்சயம் நல்ல மனிதர்களாய் வளர்வார்கள்!

    ReplyDelete
  4. ஒரு உண்மையான ஆதங்கம் பாஸ்!
    தொடர்க!

    ReplyDelete
  5. ஒரு குழந்தையின் சிரிப்பே போதும் எத்துன்பத்தையும் மறந்திடலாம்.

    ReplyDelete
  6. //Chitra said...

    .......முக்கியத்துவம் கொடுத்து கவனிக்க வேண்டிய விஷயங்கள், இங்கே பின்னுக்கு தள்ளப்பட்டு விடுகின்றன என்பது வேதனையான ஒன்று. //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சித்ரா அக்கா.

    ReplyDelete
  7. @RVS
    ஆமாங்க ஆர்விஸ் அண்ணா. :)

    ReplyDelete
  8. //எஸ்.கே said...
    இன்றைய குழந்தைகள் சீக்கிரத்தில் கற்றுக் கொள்கிறார்கள், புத்திசாலிகளாகவும் இருக்கிறார்கள். பெற்றோர்கள் நன்றாக கவனித்தால் நிச்சயம் நல்ல மனிதர்களாய் வளர்வார்கள்!
    //

    ஆமாங்க, எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. நன்றிங்க.

    ReplyDelete
  9. //Balaji saravana said...

    ஒரு உண்மையான ஆதங்கம் பாஸ்!
    தொடர்க!
    //

    உங்கள் வருகைக்கும், ஊக்கத்துக்கும் நன்றிங்க பாலாஜி.

    ReplyDelete
  10. //ம.தி.சுதா said...

    ஒரு குழந்தையின் சிரிப்பே போதும் எத்துன்பத்தையும் மறந்திடலாம்.
    //

    நன்றிங்க ம.தி.சுதா.

    ReplyDelete
  11. //
    ஒருவேளை இந்த முரண்பாடுகள்தான் குற்றங்களைக் கொண்டு வருகிறதோ?. இன்றைய குழந்தை நாளைக்கு என்னவாக வேண்டும் என்பதில் இந்தச் சமூகத்துக்கு வேண்டிய அக்கறை எங்கே?//

    நான் பல விஷயங்களை என்னுள்ளேயே பைத்தியக்காரன் போல போட்டு சிந்தித்து சிந்தித்து குழம்புவதுண்டு.. அதில் இந்த விஷயமும் ஒன்று. என் மன பிரதிபளிப்பைப் போல உள்ளது..

    ஆனால் உங்கள் எழுத்தின் மென்மை அடடா... கொஞ்சம் டென்ஷனாக இருக்கும்போது காத்து வாங்குவது போல கூட உங்கள் பதிவிற்கு வந்து போகலாம்..

    நன்றி இளங்கோ..

    ReplyDelete
  12. //உண்மையான குற்றவாளி அவனாகத் தான் இருப்பான் என்கிற பட்சத்தில் இந்த அதிரடி முடிவு சரியானதே..//
    இது என் கருத்து...(முன்குனி அமைச்சர் பதிவில் என்னுடைய பின்னூட்டம்)

    //வேறு யாருக்கும் இதில் தொடர்பில்லை அவன்தான் முழுக் குற்றவாளி என்றால் இந்த என்கவுண்டர் நியாயமானதே.//

    இது உங்கள் கருத்து..

    என்ன ஒரு ஒற்றுமை...

    ReplyDelete
  13. காலத்திற்கு ஏற்ற நல்ல கட்டுரை..பெற்றோர்கள் கவனிக்க வேண்டும்.

    ReplyDelete
  14. @பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி

    அன்பின் பிரகாஷ்,
    என் எழுத்தைப் பற்றி முதலில் இருந்தே பாராட்டியும், ஊக்கப் படுத்தியும் வருபவர் நீங்கள். அதற்கு என் மிக்க நன்றிகள்.

    //என்ன ஒரு ஒற்றுமை... //

    ஒருவேளை இருவரும் ஒரே மாதிரி அலைவரிசையில் சிந்திக்கிறோமோ இருக்கும். :)

    ReplyDelete
  15. @padaipali
    நன்றி படைப்பாளி நண்பரே.

    ReplyDelete