
உணவகத்தில்
உண்டு முடித்ததும்
பில்லைக் கொண்டுவந்து வைத்து
பணத்துக்கு காத்திருந்தான் சர்வர்
'பணம் நானே கொடுத்துக்கிறேன்'
என எழுந்து
திரும்பி நடந்த என் முதுகில்
வழிந்து கொண்டிருக்கிறது
முன்பின் தெரியாத
அவனின் வன்மப் பார்வையும், கோபமும்.
படம்: இணையத்திலிருந்து, நன்றி.