Monday, January 9, 2012

வயிற்றுப் பசி

பசி பொறுக்காமல் நீங்கள் திருடியது உண்டா? பசி தாங்காமல் குப்பையில் இருந்து கிடைத்ததை உண்டு வாழ்ந்தது உண்டா? ஒருவேளை சோற்றுக்காக காத்துக் கிடந்தது உண்டா?

அ.முத்துலிங்கம் அவர்களின் இந்தக் கதையைப் படித்துப் பாருங்களேன்.

புளிக்கவைத்த அப்பம்

கதையில் இருந்து சில வரிகள்:

"இரவு பகலாக எங்களை விரட்டியது பசிதான். இந்த நாட்களில் ஒரு மறக்க முடியாத சம்பவம் நடந்தது. நாங்கள் ஒளித்து வாழ்ந்த காட்டில் ஒரு தேன்சிட்டும் வசித்தது. சாம்பல் வண்ணத்தில், மென்சிவப்பு தொண்டை கொண்டது. அதன் அலகு அதன் உடம்பிலும் நீளமாக இருக்கும். எந்நேரமும் வேகமாக சிறகசைத்து பறந்து தேன் குடிக்கும். ஒரு நாளைக்கு அதன் எடையளவு தேனை உண்டே ஆகவேண்டும். அல்லது உயிர் தரிக்காது. ஒரு நிமிடம்கூட ஓய்வெடுக்காமல் அது பறந்து தேடுவதைப் பார்க்க எனக்கு திகிலாக இருக்கும். அதன் நிலையும் என் நிலைபோலத்தான் இருந்தது. உயிர் வாழ்வதற்காக ஒவ்வொரு கணமும் பாடுபட்டது. எங்களில் யார் முதல் இறக்கக்கூடும் என நினைப்பேன். ஒவ்வொரு நாள் காலையிலும் எழுந்தவுடன் அது உயிருடன் இருக்கிறதா என்று பார்ப்பேன். நான் முதலில் இறந்து அது என் உடலை பார்ப்பதாக சில நாள் கற்பனை செய்வேன். "


உணவு என்பது, ஒப்பற்ற ஒன்று அல்லவா?.

3 comments:

  1. Same pinch, Elango :-)
    Me to wrote about a.muthulingam's shortstories...

    ReplyDelete
  2. @சிநேகிதி
    நன்றிங்க

    ReplyDelete
  3. @முரளி
    உங்கள் பதிவை
    நான் நேற்றே படித்தேன்.. :)
    நன்றிங்க முரளி

    ReplyDelete