Monday, December 28, 2009

பேருந்துக்குள் தட்டான்

விரைந்து போன
பேருந்தில்
எப்படியோ உள்வந்த
தட்டான்
கண்ணாடி சன்னலில்
முட்டி மோதியது வெளியேற
கண்ணாடி சன்னலில்
சாய்ந்து தூங்கியிருந்த
பெண்ணின்
முகத்திலும்
அதே
சலனங்கள்...

4 comments:

  1. அடேங்கப்பா... இளங்கோ.. கவிதை கூட பின்றீங்க... ஆனா அந்த தட்டான் எப்படியும் அதுக்கப்புறம் உயிர் பிழைத்திருக்காது..

    நன்றி..

    ReplyDelete
  2. தட்டான் மட்டுமல்ல பிரகாஷ்...
    நம்மை சுற்றியிருக்கும் பெண்களின் நிலைமை கூட..

    நன்றி

    ReplyDelete
  3. உங்களுக்கு எப்படித் தெரியும்?

    ReplyDelete
  4. //ஷஹி said...

    உங்களுக்கு எப்படித் தெரியும்?
    //

    ஏங்க முகத்தைப் பார்த்தால் தெரியாதா என்ன ?
    :)

    ReplyDelete