Friday, December 4, 2009

மீண்டும் சில கொலைகள்

அன்புள்ள குழந்தைகளே,

எமது அரசாங்கம் தொலைக்காட்சி பெட்டி வழங்குவதிலும், சில முறைகேடுகள் செய்யவுமே நேரம் இருந்தமையால் உங்களையும் உங்கள் பள்ளிகள் பற்றியும் நினைக்க நேரம் இல்லை.

கும்பகோணத்தில் உங்கள் நண்பர்கள் நிறைய பேரை இழந்தும், அரசும் அதிகாரிகளும் கண்களை கட்டி கொண்டுதான் வேலை செய்கிறார்கள்.

இப்பொழுதுதான் தடை போடுவதாக பேசி கொண்டிருக்கிறார்கள், ஒவ்வொரு முறையும் நடப்பது தானே.. என்று நாங்களும் எங்கள் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டோம்..

வேதாரண்யத்தில் ஏற்பட்டது விபத்து என்கிறார்கள், உங்களுக்கு தெரியும் இது கொலை என்று... கல்வி வியாபாரம் ஆகிவிட்ட நாட்டில் நீங்கள் பிறந்து தொலைத்ததுதான் காரணமோ ?

எப்படியோ போகட்டும், அடுத்த விபத்து நடக்கும் போதும் தடைகள் போடுவார்கள் நிச்சயமாக... ...

எனது கண்ணீர் அஞ்சலிகள் உங்களுக்கு...
பிஞ்சு உள்ளங்களே எங்களை மன்னியுங்கள்....

No comments:

Post a Comment