Friday, March 20, 2009

ஓரிடம்

எங்கோ ஓரிடத்தில்
சந்திக்க
நேரும் போதெல்லாம்
கேட்கத்தான் தோன்றுகிறது

அகதியாய்
வந்த நாம்
எப்பொழுது திரும்புவோம்
என

நேற்று வந்திறங்கிய
கர்ப்பிணி பெண்ணை
பார்த்த பின்
தொண்டைக்குள்ளேயே
தங்கி விட்டது

4 comments:

  1. கவிதை உங்களுக்கு அருவி மாறி சரளமா வருது போல...

    ReplyDelete
  2. அகதி மக்களின் வாழ்க்கை விவரிக்க முடியாதது. சொந்த மண்ணில் வாழ முடியாதா என்கிற ஏக்கம் அவர்களுக்கு எப்போதும் இருக்கும்.
    தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி பிரகாஷ்

    ReplyDelete