Thursday, July 28, 2011

எல்லோருக்கும் மழை














எல்லோருக்கும்
பெய்கிறது மழை

'காலையில் இருந்து இப்படித்தான்
கொட்டிட்டு கெடக்குது
ஒரு வேல செய்ய முடியல'

'எப்பதான்
நின்னு தொலையுமோ'

'இன்னைக்கு ஒண்ணும்
பண்ண முடியாது'

'மழ நின்னாதான்
பொழப்பு ஓடும்'

என்பவர்களுக்கும் சேர்ந்தே
பெய்து கொண்டிருக்கிறது மழை.


படம்: இணையத்தில் இருந்து.. நன்றி.


Wednesday, July 20, 2011

நின்னைச் சரணடைந்தேன்

நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்
பொன்னை உயர்வை புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று...
துன்பமினியில்லை.. சோர்வில்லை.. தோற்பில்லை..



உச்சி தனை முகர்ந்தால்
கர்வம் ஓங்கி வளருதடி
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடி





பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா
நின்றன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா
நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா




போனதெல்லாம் கனவினைப் போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஒரு கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ ? - அங்கு
குணங்களும் பொய்களோ

காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ