நீ தலையில்
சூடியிருக்கும்
பூவை
பார்த்த வண்டுகள்
எது பூவென
தெரியாமல்
தடுமாறுகின்றன !
எங்கோ ஓரிடத்தில்
சந்திக்க
நேரும் போதெல்லாம்
கேட்கத்தான் தோன்றுகிறது
அகதியாய்
வந்த நாம்
எப்பொழுது திரும்புவோம்
என
நேற்று வந்திறங்கிய
கர்ப்பிணி பெண்ணை
பார்த்த பின்
தொண்டைக்குள்ளேயே
தங்கி விட்டது